\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல்(Wisconsin State Capitol)

விஸ்கான்சின் ஸ்டேட் கேப்பிடல் – தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் நாட்டில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் சட்டப்பேரவை கட்டிடம் இருந்தாலும், கட்டுமான அழகு அனைத்திலும் இருப்பதில்லை. குறிப்பிட்ட சில பேரவை மாமன்றங்களே, பார்வைக்கு அழகாக இருக்கின்றன. அதில், விஸ்கான்சின் (Wisconsin) மேடிசனில் (Madison) இருக்கும் பேரவை கட்டிடம், புகழ் பெற்ற ஒன்றாகும்.  பூசந்தி (Isthmas) எனப்படும் இரு நீர்பரப்புக்கு இடையேயான நிலப்பரப்பில் இருக்கும் ஒரே பேரவை இது தான். விஸ்கான்சின் மாநிலத்தின் தலைநகரான மேடிசனின் மத்திய புள்ளியில் […]

Continue Reading »

பணயத் தீம்பொருள் (Ransomware)

பணயத் தீம்பொருள் (Ransomware)

கடந்த சில வாரங்களாக, எந்த ஊடகச் செய்தியை எடுத்தாலும் பணயத் தீம்பொருள் (Ransomware) பணம் பறித்தல்  பற்றி தகவல்கள் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன அசல் சுற்றாடலை விட்டுப் பெரும்பாலோனோர் நகல் சூழலாகிய மின்வலயம் என்னும் அடர்காட்டிலே சஞ்சரிக்கும் தருணத்தில் பணயத் தீம்பொருள் எனும் விலங்கு வதைத்து வருகிறது. பணயத் தீம்பொருள் என்றால் என்ன? பணயத் தீம்பொருளானது சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மின்வலயத் திருடர், தமது துர்பிரயோகக் கலைகளைப் பரிசோதிக்கும் யுக்தியாக இருந்து வந்தது. ஆயினும் இன்று இணையத்தில் […]

Continue Reading »

மகரந்த மலர் வண்டுகளுக்கு உதவுவோம்

மகரந்த மலர் வண்டுகளுக்கு உதவுவோம்

இளவேனிற் காலம் இதமாக சூடேற்றுகிறது புல்தரைகளும், தூங்கிய மரங்களும் விழித்தெழும்புகின்றன. நாம் கடித்துச் சுவைக்கும் ஆப்பிள் பழம், ஜஸ்கிரீம் மேல் வைக்கும் செரிப் பழம், காய்கறிகள் யாவும் பூத்துக் குலுங்க அவற்றின் மகரந்தங்களைக் காவிச் செல்லும் வண்டுகள், பூச்சிகள், தேன் குருவிகள் அவசியம். எனவே இளவேனிற் காலம் தொட்டு இலையுதிர் காலம் வரை புன்சிரிக்கும் பூக்களிலுள்ள தேனை அருந்தவரும் வண்டுகள் மகரந்தத் தூவல்களை (Pollen) எடுத்துச் செல்லும். இப்படிப் பரிமாறப்படும் மகரந்தத் தூவல்களே அடுத்து கொத்துக் கொத்தாய்க் […]

Continue Reading »

பாதுகாப்பான நீச்சல் முறைகள்

பாதுகாப்பான நீச்சல் முறைகள்

வட அமெரிக்காவில் கோடைகாலம் தொடங்கிவிட்டது.  இனிக் குழந்தைகளும் பெரியவர்களும் குதூகலமாகப் பொழுது போக்கும் ஒரிடம் நீச்சல் குளங்கள். குறிப்பாக மினசோட்டா, மிச்சிகன், விஸ்கான்சின் மாநிலங்களிலும், ஒன்ராரியோ மாகாணத்திலும் ஏரிகள் ஆறுகள் பலவுண்டு. இங்கெல்லாம் விரைவில் கூட்டம் நிரம்பி வழியும். நீச்சல் சிறந்த பொழுதுபோக்கு மட்டுமல்லாது  உடல் நலம் பேணும் சிறந்த பயிற்சியாகவும் அறியப்படுகிறது. எனினும் மற்ற விளையாட்டு, உடற்பயிற்சியை  விட நீச்சல் சற்று அபாயகரமானது. எனவே நீச்சலில் பாதுகாப்பாக ஈடுபடுதல் அவசியம். குழந்தைகளும், சிறுவர்களும் குளத்து நீரில் […]

Continue Reading »

வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை

வயலின் மேதை திரு. வி.வி.முராரி அவர்களின் இசை மழை

கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள், மினசோட்டா மாநிலம், மெடினா நகரிலுள்ள தேவுலப்பள்ளி இல்லத்தில் வயலின் மேதை திரு. வி.வி. முராரி அவர்களின்  வயலின் இசை மழை பொழிந்தது. கர்நாடக இசை மும்மூர்த்திகளின் ஒருவரான திரு. முத்துஸ்வாமி தீஷிதரின் “சித்தி விநாயகம்” கீர்த்தனையோடு களை கட்டியது கச்சேரி. தனது துரிதமான நடையினாலும் அபரிதமான மேல் கால ஸ்வரங்களுடன் கூடிய ஆலாபனையோடு “ஷண்முகப்ரியா” ராகத்தில் ரசிகர்களைக் குதூகலத்துடன் வரவேற்றார் வித்வான் முராரி, இதைத் தொடர்ந்து வந்தது நாத […]

Continue Reading »

நிச்சயமாய் வந்துசேரும் !!

நிச்சயமாய் வந்துசேரும் !!

வானில் பறக்கும் விஞ்ஞானிக்கும் வனத்தில் திரியும் மெய்ஞ்ஞானிக்கும் தானில் என்றலையும் தருக்கருக்கும் தனக்கென ஒன்றிலாத் தவமுனிக்கும் ஆலயம் வழிபடும் அன்பருக்கும் அங்கொன்றும் இலையெனும் அனைவருக்கும் பாலமாய்ச் செயல்படும் பண்பாளருக்கும் பலமாய் வெடிவைத்தே தகர்ப்போருக்கும் நாட்பல கடந்திடினும் நினைப்போருக்கும் நன்றியில் பழையதை மறப்போருக்கும் சீரிய வாழ்வினில் திளைப்போருக்கும் சிரிப்பது போதுமென்று இருப்போருக்கும் வாழிய எனப்பாடும் நல்லவருக்கும் வளமெண்ணிப் பொறையுறும் அல்லவருக்கும் மாளாமல் செல்வங்கள் சேர்த்தோருக்கும் மகவுக்குப் பாலில்லா வறியவருக்கும் காலங்கள் கடந்திட்ட முதியோருக்கும் கட்டுடல் மாறிடாக் காளையருக்கும் மாறாமல் […]

Continue Reading »

கிராமத்துக் காதல் ….!!

கிராமத்துக் காதல் ….!!

ஏருபுடிச்ச மச்சானே ! மனசுல காதலை வெதைச்சவரே ! இந்தப் பூங்குயிலை ஏரெடுத்துப் பார்த்திடுங்க … பொத்தி வெச்ச ஆசையிங்கே அருவியா கொட்டு்துங்க…. ஒங்க நெனப்பில் மச்சானே துவச்ச துணியைத் தான் துவச்சேனே… இதுதான் சாக்குன்னு …என்னாத்தா வாயார திட்டித்தீர்த்தாளே … புத்தி பேதலிச்சுப் போச்சுன்னு சொன்னாளே… பேதலிச்சது புத்தியா? மனசா ? எல்லாமறிஞ்ச மச்சானே சட்டுனுதான் சொல்லிடுங்க … வெரசா வாரேனு சொல்லிப் போனீக வருசம் மூணாச்சு ! எங்கழுத்தில் தாலி ஒன்னைக் கட்டிடுங்க குலசாமியா […]

Continue Reading »

கர்மா….

Filed in இலக்கியம், கதை by on May 28, 2017 0 Comments
கர்மா….

”ஏன்னா, நம்ம ஷாலு சொல்றதக் கேட்டேளா?” சோஃபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணவனிடம் காஃபியைக் கையில் கொடுத்துக் கொண்டே, கேட்டாள் சாரதா. “எதப்பத்தி சொல்றே?” அவளின் கேள்வியில் பெருமளவு ஆர்வம் காட்டாமல், டி.வி.யில் ஓடிக் கொண்டிருந்த செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம். “அதான்னா… நேத்து எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை… நான் சொன்னாக்கா, கேக்க மாட்டான்னு தோண்றது.. நீங்க கொஞ்சம் பேசிப் பாருங்கோளேன்.”` “என்னம்மா பிரச்சனை? நம்மதான் அவ்வளவு பேசினோமே, இன்னுமென்ன… நீயுந்தான் அவளோட சாய்ஸ்க்கு […]

Continue Reading »

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

இவ்வருடப் புதிய காய்கறி வகை 2017

மினசோட்டாவிற்கும் அயல் மாநிலங்களுக்கும் ஏப்ரல் மாதம் மழையும் வந்துவிட்டது இனி மே மாதத்தில் மிருதுவான புற்தரைகளும், பூக்களும் துளிர் விடும். பூச்செடிக் கடைகளுக்குப் போனால் (Garden centers) அப்பப்பா ஆயிரம் ஆயிரம் வகை தாவரங்கள், நமக்கு இருப்பதோ குறுகிய நிலமும் பூச்சாடிகளும் என்பர் இவ்விட வாழ் தமிழ் இயற்கையாளர் பலர். மினசோட்டா , ஒன்ராரியோ கனடா விவசாய திணைக்களம், மற்றும் பூங்கா அமைப்பாளர் குழுமியங்கள் வருடா வருடம்  புதிய, அனுபவமுள்ள பூச்செடி, காய்கறி வளர்ப்பாளர்களுக்கு இளவேனில் ஆலோசனை […]

Continue Reading »

தாய்மை

Filed in இலக்கியம், கதை by on April 30, 2017 0 Comments
தாய்மை

கையில் இருந்த காய் கறி கூடையை மறு கைக்கு மாற்றியபடி வாசல்  கதவைத் திறந்தாள் அகல்யா.  உள்ளே இருந்து முனகல் சத்தம் கேட்டதும், பதட்டத்துடன் வேகமாக வழி நடையைக் கடந்து வீட்டிற்குள் பிரெவேசித்தாள். காய்கறி கூடையைச் சமையல் அறையின் கதவின் முன் வைத்து விட்டு, வீட்டின் உள் அறையை நோக்கி வேகமாக எட்டெடுத்து வைத்தாள். “ஹாசினி பட்டு எழுந்திட்டியா .. அம்மா வந்துட்டேன்.” அந்த அறையில் உள்ளே ஒரு பெரிய தொட்டி போல வைக்கப்பட்ட அந்தப்  படுக்கையில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad