\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள்

    முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 3

Filed in இலக்கியம், கதை by on March 31, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 3

(பாகம் 2) பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அஞ்ஞானத்தின் வடிவாகத் திகழ்ந்த அரக்கன் அபஸ்மரா. அஞ்ஞானத்தினால் பல தீமைகள் செய்தான். அவனை அழிக்கச் சிவபெருமான் நடராஜராக அவதரித்தார். அவர் அபஸ்மராவை வீழ்த்தி அவன் மேல் நடனம் புரிந்தார். இந்த நடனத்தை ஆனந்ததாண்டவம் என்பார்கள். அறியாமை எனும் திரை அகன்றால் நம்முள் உள்ள ஆனந்தம் தானாகக் காணப்படும். அபஸ்மரா இறக்கும் நேரம் வந்துவிட்டது. எமதர்மராஜன் காளை மேல் அமர்ந்து அங்கே வந்தார். அபஸ்மரா ஆத்மாவைக்  கொண்டு செல்ல தனது […]

Continue Reading »

ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

ராஜா – SPB – என்னதான் பிரச்சினை?

இந்தியச் சமூக ஊடகங்களின் இப்போதைய ஹாட் டாபிக் இளையராஜா மற்றும் SPB என்ற இரு மிகப் பெரிய ஆளுமைகள் பற்றிதான். பரபரப்புக்கு காரணம் பதிப்புரிமையும்(Copyright) அதைப் பற்றி எந்த விதமான அடிப்படை புரிதலும் அற்ற வீண் விவாதங்களும் என்று சொன்னாலும் சாலப் பொருந்தும். இந்தப் பதிவின் நோக்கம் இசை படைப்பாளிகள் மற்றும் தயாரிப்பாளர்களின் அறிவுசார் சொத்து (Intellectual Property) குறித்த நடைமுறை என்ன என்பதை அலசுவதே! அதற்கு முன்பு ஒரு சிறிய பிளாஷ்பேக்…! “ரெடி! ஒன், டூ, […]

Continue Reading »

முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

முறிந்த மின் வலயத்தை மாற்றலாமா?

நளினமாக நமது விரல்கள் நம்மையே அறியாது நமது தொலைபேசியில் நர்த்தனம் செய்ய நறுக்குத் துணுக்குகளையும், நல்ல படங்களையும் நன்றாகப் பார்த்துச் சிரித்து, சுவாரஸ்யமான செய்திகளையும் சுவைத்துப் பார்த்துக் கொண்டுள்ளோம். எல்லாம் நல்லபடியாகத்தானே உள்ளது. முறிந்த மின் வலயமா? அது எப்படி? புரியவில்லையே என்று நாம் தலையைச் சொரியலாம். இவ்விடம் நாம் குறிப்பிடுவது உங்கள் கைப்பேசி, தட்டுபலகை தொழிற்பாட்டை அல்ல. அதன் பின்னணியில் நடைபெறும் சமுதாய சம்பிரதாய முடங்கல்களை. மின்வலயங்கள் மற்றும் சமூகவலயங்கள் பல்லாண்டுகள் உள்ளன போனறு நமக்குத் […]

Continue Reading »

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

இந்த ஆண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், […]

Continue Reading »

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம்

மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]

Continue Reading »

ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments
ஒரு ராக்கெட்டும் 104 சேட்டிலைட்களும்

அரசியல்வாதிகள் நமது மானத்தை வாங்கிக் கொண்டிருக்கும் போது, நம் காலரைத் தூக்கி விட வைப்பது இஸ்ரோ (ISRO) வின் வழக்கம். ஃபிப்ரவரி 15ஆம் தேதி அன்றும் இந்தியர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள் இஸ்ரோவின் இந்திய விஞ்ஞானிகள். அன்றைய தினம் இந்திய நேரப்படி காலை 9.28 க்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய பிஎஸ்எல்வி விண்கலம், அடுத்த அரை மணி நேரத்திற்குள், ஏற்றிச் சென்ற 104 செயற்கைக்கோள்கள் அனைத்தையும் ஒன்றன் பின் […]

Continue Reading »

எனக்கு ஒரு மகன் பிறந்தான்

Filed in இலக்கியம், கதை by on February 26, 2017 0 Comments
எனக்கு ஒரு மகன் பிறந்தான்

நானும் என் கணவன் நாதனும் பார்க்காத சாத்திரக்காரர்கள் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. சுற்றாத மரங்கள் இல்லை. எல்லாம் எதற்காக? எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலுக்காகத் தான். என் வழியிலும், என் கணவர் வழியிலும் பிறந்தது எல்லாம் பெண்கள். எனக்கு நான்கு சகோதரிகள் மட்டுமே. நான் முத்தவள் அவருக்கு இரண்டு சகோதரிகள். அண்ணா அல்லது தம்பி என்று கூப்பிட அவரைத் தவிர வேறு ஆண்கள் அவர் கூடப் பிறக்கவில்லை. எனது மாமனாருக்கும், மாமியாருக்கும் […]

Continue Reading »

அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 26, 2017 0 Comments
அமெரிக்கா சீனா வர்த்தக விவாதமும் வரக்கூடிய பக்க விளைவுகளும்

2017 இல் வந்திருக்கும் அமெரிக்கத் தலைமைத்துவ மாற்றம் சனவரி 20 ஆம் திகதியிலிருந்து பல்வேறு வகை மாற்றங்களையும் செய்ய ஆரம்பித்துள்ளது. புதிய அமெரிக்க சனாதிபதி தமது வாக்காளர்களுக்குக் கூறியதை உடன் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளார். இவற்றில் பல அமெரிக்க நுகர்வோர் மற்றும் அவர் அன்றாட வாழ்க்கை போன்றவற்றில் அசௌகரியங்களைத் தர வாய்ப்புக்கள் உண்டு. புதிய அமெரிக்கத் தலைமைத்துவம் பொதுவான வர்த்தக உலக மயமாக்குதல் அமெரிக்கரின் வயிற்றுப் பிழைப்பிற்குச் சாதகமானதல்ல என்றும் இதனால் பல குடிமக்கள் சென்ற பல தசாப்தங்களாகப் […]

Continue Reading »

இளவெயினிற் காலம்

Filed in இலக்கியம், கவிதை by on February 26, 2017 0 Comments
இளவெயினிற் காலம்

சூழ்ந்திருந்த வெண்பனியும் சுடரொளியால் உருகிடவே
வாழ்ந்திருந்த புள்ளினமும் வடக்குநோக்கித் திரும்பிடவே
ஆழ்ந்திருந்த இருளதுவும் நாட்பொழுதால் குறுகிடவே
தாழ்ந்திருந்த உள்ளங்களும் தளர்நடையாய்ப் புறப்படவே

காய்ந்திருந்த புல்வெளியும் கண்கள்மெல்லத் திறந்திடவே
சாய்ந்திருந்த செடிகொடியும் சிகைவளர்த்துச் சிலிர்த்திடவே
தேய்ந்திருந்த தவளையினம் தனித்தனியாய்த் தாவிடவே
மாய்ந்திருந்த சிறுகொசுக்கள் மறுபடியும் பறந்திடவே

Continue Reading »

ad banner
Bottom Sml Ad