\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
அன்பும் அனுதாபமும் இலத்திரனியல் இளையவர்களும்

இன்றைய மாணவர்களுக்கு ஆசிரியர், கற்றோர் அன்பும், அனுதாபத்தையும் நடைமுறையில் காட்டிப் பயனுற வைப்பது அவசியம். இதைப் பற்றி அறிந்து கொள்ள நாம் வழக்கத்தில் பகிரப்படாத அனுபவத்தைப் பார்க்கலாம். இளமைப் பொழுதில் போதை வஸ்துப் பொருட்களிற்கு அடிமையானால் அதிலிருந்து இளையவர்களை மீட்கத் தவிர்ப்புக் கல்வி முறைகள் வைத்திய சிகிச்சை முறைகள் உண்டு. வாழவிருக்கும் பிள்ளைகளை பெற்றார், உற்றார், ஆகிய நம் சமூகத்தில் இருந்து விலகி இருக்க விரும்ப மாட்டோம். ஆயினும் அசல் வாழ்வில் இருந்து விலகி நகல் சூழல் […]

Continue Reading »

அஞ்சலம்மா

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
அஞ்சலம்மா

ஞாயிறு காலை ஏழு மணி. எப்பொழுதும் கேட்கும் M.S சுப்ரபாதம் ஒரு புறம், அந்த காலை நேரத்தை உறுதிப் படுத்திக் கொண்டு இருந்தது. இன்னொரு புறம் அம்மாவின் ஃபில்டர் காஃபி மணம். வெந்து கொண்டிருக்கும் இட்லி மணம் சமையல் அறையில் இருந்து வந்து கொண்டு இருந்தது.   சமையல் அறை வாசலுக்கு முன்பு அமர்ந்து பாட்டி தேங்காய் துருவிக் கொண்டு இருந்தார். அவரால் செய்யக் கூடிய வேலையை எப்பொழுதும் செய்ய நினைக்கும் மனம். மிக மெலிந்த தேகம். […]

Continue Reading »

பீனோ க்ரிஜோ…

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
பீனோ க்ரிஜோ…

விடிந்தும் விடிந்திராதிருந்த அந்தக் காலை நேரத்தில், அலுவலக வளாகத்திற்குள் நுழைந்து தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த பார்க்கிங்க் ஸ்பாட்டில் காரை நிறுத்தினான் விஷ்வா.. ஒரு தனியார் அலுவலகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் அவன், ஒரு இருபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்து சாஃப்ட்வேர் இன்ஜினியராகப் பணியைத் தொடங்கியவன். பல நிலைகளிலும் பணி புரிந்து, கடைசியாக சி.டி.ஓ. ஆகப் பதவி உயர்வு பெற்றவன். கார்ப்பரேட் வார்ல்ட்க்குத் தேவையான அனைத்து சாமர்த்தியங்களையும், டிப்ளமஸிகளையும் கற்றுக் கொண்டவன். பல வெள்ளைக்கார எக்ஸிக்யூடிவ்ஸ் மத்தியில், […]

Continue Reading »

உரிமைகள் மசோதா – 1

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
உரிமைகள் மசோதா – 1

உரிமைகள் மசோதா இந்த இதழ் வெளியாகும் பொழுது, டானல்ட் ஜான் ட்ரம்ப், அமெரிக்காவின் 45வது அதிபராக பதவியேற்றிருப்பார். ஏறத்தாழ பத்தாண்டுகளுக்குப் பின்பு வெள்ளை மாளிகை, மேலவை மற்றும் பிரிதிநிதிகள் சபை ஆகிய மூன்றும் குடியரசுக் கட்சியின் வசமாகியுள்ளது. அரசாங்கத்தின் சக்தி ஒரே இடத்தில் குவிந்து விட்டால் யதேச்சாதிகாரம் தலை தூக்க நேரிடலாம் என்பதால், சரிபார்த்தலுக்காக (checks and balances) வாக்கெடுப்பு முறைப்படி உருவாக்கப்பட்டதே இந்த அவைகள். இவற்றின் உறுப்பினர்கள் சட்டங்கள் மேற்கொள்ளும் பிரிவு  (legislative branch) , […]

Continue Reading »

பேர்ள் ஹார்பர் – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on January 29, 2017 0 Comments
பேர்ள் ஹார்பர் – பகுதி 2

(பகுதி 1) 1940ம்  ஆண்டு மத்தியில், அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை பேர்ள் ஹார்பரில் நிறுத்தியது ஜப்பானை பதட்டமடையச் செய்தது. பசிஃபிக் பகுதியில் தனது எல்லையை விரிவடையச் செய்ய முயன்ற   ஜப்பானுக்கு, அமெரிக்காவின் இந்தச் செயல் பெரிய முட்டுக்கட்டையாக அமைந்தது. ஜப்பானிய அரசில் ராணுவ அதிகாரிகள் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந்த காலமது. மிதவாதியான, அப்போதைய ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ  கோனோவுக்கு  அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை மூலம் பெட்ரோலிய இறக்குமதிக்கான தடையை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பதே எண்ணம். ஆனால் […]

Continue Reading »

சிதம்பரம் – பாகம் 1

Filed in இலக்கியம், கதை by on January 29, 2017 0 Comments
சிதம்பரம் – பாகம் 1

“சிதம்பரம்” என மஞ்சள் நிறச் சுவரில் எழுத்துக்களுடன் இரயில் நிலையம் வரவேற்றது. அமலா இரயில் வாகனத்தின் வாசற்படியில் இருந்தே வெளியில் எட்டிப் பார்த்தாள். இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சற்று தயக்கத்துடன் இறங்கி, தன் கையில் உள்ள காகிதத்தில் எழுதியிருந்த முகவரியைப் பார்த்தாள். அவளிடம் டிக்கெட் இருக்கிறதா எனச் சோதிக்கக் கூட அந்த இரயில் நிலையத்தில் யாரும் இல்லை. சிதம்பரம் எவ்வளவு பெரிய நகரம். அந்த நகரத்தைப் பற்றிப் பல வதந்திகள் வந்தாலும் அதைச் சற்றும் நம்பாமல் […]

Continue Reading »

சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
சல்லிக்கட்டு – இரு பரிமாணங்கள்

கலங்கிய காளை கழனியிலும் வேலையில்லை களத்தினிலும் பணியுமில்லை கணினிகளைத் தாம் நோக்கி காளையர்கள் போனதனால் கண் கலங்கிய காளை! களத்து மேட்டிலும் வேலையில்லை கம்மாக் கரையிலும் தண்ணீரில்லை கரிசல் காட்டை விலைபேசிய காட்டுமிராண்டிகள் கண் கலங்கிய காளை! கட்டித் தழுவுவார் யாருமில்லை கட்சிக்காரனும் ஆதரிக்கவில்லை கார்மேகமும் கை கொடுக்கவில்லை கட்டிளங் காளையருக்குத் தடை போட்ட பீட்டா கண் கலங்கிய காளை! திரைகடலெனத் திரண்ட தமிழினம் திக்கெட்டும் ஒரே இசை ! என் தமிழனின் பறை இசையடா ! […]

Continue Reading »

காதல் விளம்பல்கள்

காதல் விளம்பல்கள்

காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]

Continue Reading »

தலைமுறைகள் …?

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
தலைமுறைகள் …?

கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]

Continue Reading »

கல்லறை பேசுகிறது

Filed in இலக்கியம், கவிதை by on January 29, 2017 0 Comments
கல்லறை பேசுகிறது

அன்று இளம் பெண்களின் மடியில் புரண்ட நீ இன்று மண்ணில் உறங்குகிறாய் ! அன்று அடிதடியில் இறங்கி ஆயிரம் வாக்குறுதிகள் அள்ளி விட்டு அமைச்சரான நீ இன்று மண்ணில் புல்லுக்குக் கீழே புதைந்து கிடக்கிறாய் ! அன்று பொன் பொருளை ஓடி ஓடித் தேடிய நீ இன்று புல் முளைத்த மண்ணில் புதைந்து என்ன தேடுகிறாய் ? அன்று பெண் பொன் பதவிசுகம் மறந்து மனிதநேயமுடன் மனிதா வாழ்ந்திருந்தால் இன்று நீ மறைந்தாலும் மலர்கள் தூவிய மண்ணுக்குக் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad