இலக்கியம்
காதல் விளம்பல்கள்
காதல் கொண்டேன் ! தொடாமலே பார்க்கிறேனடி கண்ணாலே கொல்றியேடி துண்டு துண்டா ஆகிறேனடி ஒரே பார்வை பாரேண்டி! எனைக் களவாடியே போறியேடா உன்னாலே உசிறே போகுதடா ஊரார் பார்வை எரிக்குதடா உன் பார்வைக்கு ஏனோ ஏங்குதடா! காதல் காவியம் படைத்திடத் தானடி கடல்கடந்து பொருள் ஈட்ட வந்தேனடி ஊராரை உன் பார்வையால் எரித்துடுடி உன்னாலே உயிர் வாழ்கிறேனடி! எனைக் கவர்ந்த கள்வனடா கரையோரம் விழி வைத்தேனடா கனவினிலே கட்டியணைக்கக் கண்டேனடா கனவு நனவாக சித்தம் கொண்டேனடா! அந்த […]
தலைமுறைகள் …?
கருவேலங்காடு கத்திரிவெயில் வெள்ளையாடை மூதாட்டி ஒருவேளை உணவுக்கு மேய்க்கிறாள் வெள்ளாடு.? உடலெல்லாம் வியர்வை மழை, கோவணம்கட்டிய குடியானவன் ஏரோட்டுகிறான் தான் நேசிக்கும் எருதுக்கு உணவளிக்க.!? காற்றடித்தால் ஓலைபறக்கும், மழையடித்தால் கூரைஒழுகும் குடிசையில் டி.வி மிக்ஸி,கிரைண்டர்!!! இலவசங்கள் குடியேறியும் வறுமையில் வாழ்க்கைத்தரம்? உதவித்தொகைவேண்டி வட்டாட்சியரிடம் சென்றே வாழ்வைக் கழித்த கைத்தடி முதியோர்கள்… ஒத்தரூபாய்க் காசுக்கு கோவில்வாசலில் கால்கடுக்க தவமிருந்தும்… கண்திறக்கவில்லை கடவுள்….?! காத்திருந்து கரிச்சோறு வாங்கி கட்டிலில் கிடக்கும் கிழவனுக்கு ஊட்டிவிட்டு உறக்கமின்றிக் கிடக்கிறாள் இன்னொரு பாட்டி… சமூகத்தை […]
பேர்ள் ஹார்பர்
டிசம்பர் 7 1941 – போர் முன்னறிவிப்பு எதுவுமின்றி ஜப்பான் அமெரிக்காவைத் தாக்கிய தினம்; அமெரிக்காவின் முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்றான பேர்ள் ஹார்பரை 353 போர் விமானங்கள் கொண்டு ஜப்பான் தாக்கிய தினம்; 2403 அமெரிக்க வீரர்கள் மாண்டு போன தினம்; 1178 பேர் படுகாயமடைந்த தினம். 5 போர்க்கப்பல்கள் உட்பட 18 கப்பல்கள் அழிக்கப்பட்ட தினம். உலக வரலாற்றையே புரட்டிப்போட்ட தினம்; உலக நாடுகள் பலவற்றின் இன்றைய நிலைக்கு காரணமான தினம்; மொத்தத்தில் […]
பொங்கலோ பொங்கல்
பொழுது சாயும் நேரத்துலே பொதுவான சாலை ஓரத்திலே பொசுங்கும் குப்பைக் கூளமுமே போகி வந்ததென அறிவிக்குமே !! குப்பைக் காகிதம் மத்தியிலே குறுகிய எண்ணக் கசடுகளும் குன்றத் தோன்றிய சுயநலமும் கூடவே சேர்த்துக் கொளுத்துவமே !! மறுநாள் காலை வைகறையில் மலர்ந்து வளர்ந்திடும் ஆதவனை மனதில் நினைந்து வழிபடவே மாநிலம் முழுதும் கூடினரே !! முற்றம் நடுவினில் பானைவைத்தே முனைந்து சுற்றிய மஞ்சளுமே முழுதாய் நிறுத்திய கரும்புடனே மூட்டிய அடுப்பினில் பொங்குதுவே !! கழனி காடு […]
கிறிஸ்த்மஸ் தினச் செய்திகள்
பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும் கிறிஸ்தமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இறைமகன் இயேசு பாலன், உங்கள் குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் அன்பையும் சமாதானத்தையும் ஆசீர்வாதத்தையும் நிரம்ப பொழிந்து, அனைவரையும் குழந்தை உள்ளம் கொண்டவர்களாக மாற்றி நமக்கு புனித வாழ்வின் மகத்துவத்தை உணர செய்து, ஒருவரை ஒருவர் ஏற்றுகொண்டவர்களாக அன்பையும் சகோதரத்துவத்தையும் பறைசாற்ற வாழ்த்துகிறேன். கிறிஸ்துமஸ் என்பது உலகத்தில் இறைவனுடைய அவதாரத்தை நினைவு கூறுவது. இந்த கிறிஸ்து பிறப்பு வரலாற்றில் 2000 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வோ அல்லது வருடம் ஒருமுறை […]
மினசோட்டா குளிர்
மினசோட்டாவின் ஒரு சிறப்பம்சம், அதன் குளிர். ‘என்னது, குளிரா? அதான், இங்கே கடியான விஷயம், பாஸ்!!’ என்பவரா நீங்கள்? 13000 ஆண்டுகளுக்கு முன்பு, பனியுகம் (Ice Age) முடிவுற்ற சமயத்தில், இங்குச் சராசரி தட்பவெட்ப நிலை -16 டிகிரிக்கும் கீழே இருந்தது. இது ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் இருக்கும் தட்ப நிலை. கால ஓட்டத்தில், நல்லதோ, கெட்டதோ இந்த நிலை மாறி, தற்போது மனிதர்கள் வாழும் நிலைக்கு வந்திருக்கிறது. இந்தாண்டு டிசம்பர் 18ஆம் தேதியன்று, மினசோட்டாவின் குளிர் -20 […]
அனுபவ வாழ்க்கை
வண்டியை நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும் எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]
ஸ்திதப் பிரக்ஞன்
இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]
கிறிஸ்மஸ் கிஃப்ட்
வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!
வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!






