இலக்கியம்
நானே ராசா நானே மந்திரி
நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம் கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் […]
சாமக்கவி
வாயு தேவனும் வருண பகவானும் சங்கமித்து இசை பயிலும் ஒரு பனிக்கால இரவின் முன்சாமப் பொழுதொன்றில் கட்டிலில் சாய்ந்தபடி கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை நீண்டு கதையாகிப் பின் தொடர்கதையாய் நீண்டது. சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன். தீபாவளிக்கு இல்லாத விடுமுறை திருக்கார்த்திகையில் வந்ததால் வானத்து விண்மீன்கள் நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட . ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது எழுந்து விளக்கை அணைத்தேன் வீணை மீட்டியபடி பாடத் தொடங்கினேன் ஒரு சாமகானம். ஊரவன் –
காகிதத்தின் வாக்குமூலம்
எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!
வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!
இறைவனிடம் கையேந்துங்கள்
“இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.. உங்களுக்குச் சேர வேண்டிய எதையும் தடுத்திட முடியாது.. வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள்..” பீயிங் .. பீயிங் என்று சிணுங்கியது லேப்டாப் அலாரம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் அமித். 113 ‘வேக் அப் கால்’ என்று காட்டியது கணினி. மணி ஏழாகி விட்டிருந்தது. அறை எண்ணில் தங்கியிருக்கும் லிண்டாவுக்கு ஃபோன் செய்து எழுப்பி விட்டான். ‘வேனோஸ் தியஸ் அமிகோ’ என்று சொல்லியபடி உள்ளே […]
முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு
முப்பரிமாணப் பிம்பத் தொழில்நுட்பம் ஒருவர் மறைந்த பின்னும் அவர் விட்டுச்சென்ற எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு உரையாட உதவலாம் இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு இறுதியில் இந்திய உபகண்ட இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட கடற்கோளில் மரித்த மக்கள் பலர். இதில் தமிழ்ப் பிரதேசங்களில் பலமக்கள் மடிந்தனர். வரலாற்றுப் படிமங்களிலிருந்து எமது சந்ததிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கடற்கோள் பற்றி அறிந்திருந்தும், பெரிய அளவில் கடற்கோள் நிகழாததால், தற்கால சந்ததியினர் ஒருவருக்கும் ஞாபகத்தில் வரவில்லை. இதனால் ஒரு வகையில் பார்த்தால் எம்மக்களுக்கு […]
எசப்பாட்டு – வெள்ளம்
தண்ணீர் தண்ணீரென்றே
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல
ஒரு IT ஆண் மகனின் சோகக் கதை
காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ். சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை. “எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது” “ஹ்ம்ம்” காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன. நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது. இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும். யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க […]
ஆட்டிஸம் – 2
(ஆட்டிஸம் – 1) ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத […]
மினசோட்டாவின் கதை – பாகம் 2
(மினசோட்டாவின் கதை பாகம் 1) முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் […]






