\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

கொலைபேசி

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 0 Comments
கொலைபேசி

உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]

Continue Reading »

விநாயகர்ச் சதுர்த்தி

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
விநாயகர்ச் சதுர்த்தி

கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்

Continue Reading »

தனித் தீவு

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 2 Comments
தனித் தீவு

அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]

Continue Reading »

எசப்பாட்டு – கேள்வி/பதில்

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
எசப்பாட்டு – கேள்வி/பதில்

முத்தான தமிழ்கொண்டு
முழுமூச்சாய்ப் பாட்டமைக்கும்
முடிவில்லா கவிக்கூட்டமதை
முனைப்புடனே வினவுகின்றேன்…….

முக்காலம் உணர்ந்திட்ட
முனிவர்களும் சீடர்களும்
முன்வாழ்ந்த கோடிகளும்
முன்னோர்கள் அனைவருமே

Continue Reading »

கிழித்தெறியப்படும் கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
கிழித்தெறியப்படும் கவிதைகள்

இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்

Continue Reading »

விலையில்லா விளையாட்டு!

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 2 Comments
விலையில்லா விளையாட்டு!

நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை. இதைக் காணுகையில் […]

Continue Reading »

இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 1 Comment
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]

Continue Reading »

லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 1 Comment
லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி

மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்‘திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். ‘என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?’ என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களில் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad