இலக்கியம்
சீதா எலிய
இலங்கையின் கண்டியில் உள்ள பெரதனியா தாவரவியல் பூங்கா மிக அழகான பூங்காக்களில் ஒன்று பார்த்திபன் கனவு படத்தில் வரும் “ஆலங்குயில் பாடிவரும்….” என்ற பாட்டு இங்கேதான் படப்பிடிப்பு நடத்தியாதகச் சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள இன்னொரு மிகச் சிறப்பான தாவரவியல் பூங்கா நுவரேலியாவில் இருக்கும் “ஹக்கல” என்ற இடத்தில் உள்ளது. இந்தப் பூங்காவுக்கு மிக அருகில்தான் சீதையம்மன் கோவில் ஒன்று உள்ளது. உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. “சீதாஎலிய” என்பது அந்த ஊரின் பெயர். இராவணன் […]
எச்சம் (ஒரு சிறு விளக்கம்)
தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை “எச்சம்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு ‘’எஞ்சுபொருட்கிளவி ‘’ என்பதாகும். பொருள்எஞ்சிநிற்கும் சொல் என்பது இதன் விளக்கம். பிரிநிலை எச்சம் வினை எச்சம் பெயர் எச்சம் ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் உம்மை எச்சம் என எச்சம் சொல் எச்சம் குறிப்பு எச்சம் இசை எச்சம் எனப் பத்து வகையான எச்சங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. “பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்பறை […]
உலகம்
இயற்கையெனும் இனிய அன்னை
இளம்பொன் சூரியக்கதிர் கொண்டு
இருள்நிறைக் கருப்பைக் கிழித்து
இன்னொரு நாளை ஈன்றெடுத்தாள்!
வேலை
கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]
இந்தியா 69
29 மாநிலங்கள் தமிழ் உட்பட இருபதிற்கும் மேற்பட்ட அலுவலக மொழிகள், சில மதங்கள், பல சாதிகள், கணக்கில் அடங்கா கடவுள்கள், இயற்கை மற்றும் இன வேறுபாடுகள், அனைத்து இடங்களிலும் ஏற்றத் தாழ்வுகள் , இத்துணை வேற்றுமைகளையும் வைத்துக்கொண்டு, உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நாடாகக் கடந்த அறுபத்தி ஒன்பது ஆண்டுகளாக வெற்றிநடை போட்டுக்கொண்டு இருப்பது நம் இந்திய நாடாகும். பல தலைவர்களின் வழிகாட்டுதல்கள், பல்லாயிரக் கணக்கில் களபலிகள் மற்றும் தொடர்ச்சியான தியாகங்களின் பயனாக நம்மை ஆண்டு வந்த அங்கிலேயர்களை […]
வானவில்லின் மறுபக்கம்
“நீ இன்னும் மேல மேல பறந்துகிட்டே இருக்கணும்மா.. எழுந்திரு ..” அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்புக் கிடைத்த விஷயம் அறிந்தவுடன் அவளது அக்கா சாந்தி அவளை ஆசிர்வதித்துச் சொன்னது ராஜியின் மனதில் ஓடியது. எவ்வளவு பெருமைப்பட்டார்? ‘எங்க வம்சத்தில யாருமே வெளிநாட்டுக்குப் படிக்கப் போனதில்லை .. இவ அமெரிக்கால நாலு காலேஜுக்கு அப்ளை பண்ணா .. நாலு காலேஜ்லேயிருந்தும் சேரச் சொல்லி லெட்டர் அனுப்பியிருக்காங்க .. எங்க சேர்றதுன்னு அவ தான் டிசைட் பண்ணணும்..’ கிட்டத்தட்ட திருவான்மியூர் […]
தும்பிக்கை தரும் நம்பிக்கை
வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே இந்த வரிகளைக் கேட்டால் எல்லோருக்கும் அவரவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்றங்களும் இறக்கங்களும் நினைவுக்கு வரும். அதுவே இந்த வரிகளில் உள்ள உண்மைக்கு அத்தாட்சி. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதைப் பொறுமையுடனும் மனத்தெளிவுடனும் எதிர்க்கொண்டால் தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழி கொடுக்கும். பொறுமையும் மனத்தெளிவும் எளிதில் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெய்வபக்தி இதற்கு பெரிய அளவில் உதவுகிறது. எந்த ஒரு காரியம் துவங்குவதற்கு முன்னர்ப் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11
(பகுதி 10) முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, […]
பேச்சே எங்கள் மூச்சு
உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13) எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர். “அகதியென்று ஆன பின்னால் ……………………….. ‘ஐம்பதால் […]






