\n"; } ?>
Top Ad
banner ad

கதை

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

Filed in இலக்கியம், கதை by on February 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]

Continue Reading »

பணயம்

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 1 Comment
பணயம்

பார்க்கிங்கிற்குள் நுழையும் போது ஏழு இருபத்தி நான்காகிவிட்டிருந்தது. போச்சு. இன்று சரியான நேரத்தில் ட்ரெயினைப் பிடிக்க முடியாதெனத் தோன்றியது சாரிக்கு. வழக்கமாக பிடிக்கும் ட்ரெயினைப் பிடித்தாலே நார்த் ஸ்பிரிங்கிலிருந்து ஏர்போர்ட் போய்ச் சேர ஒரு மணி நேரமாவது ஆகிவிடும். ஏழு இருபத்தியாறை விட்டால் அடுத்த வண்டி ஏழு முப்பத்தி எட்டுக்குத் தான். எல்லாம் அந்த வால்வோ சண்டாளனால் வந்தது.   வீட்டை விட்டு சரியான நேரத்துக்குத் தான் கிளம்பினான் சாரி. இத்தனைக்கும் வைஷூ ஸ்கூல் பஸ்ஸுக்கு லேட்டாகி […]

Continue Reading »

பொங்கக் காசு

Filed in இலக்கியம், கதை by on January 21, 2015 0 Comments
பொங்கக் காசு

பொங்கலோ பொங்க… பொங்கலோ பொங்க… ஊரு செழிக்க, ஊத்த, மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… நாடு செழிக்க, நல்ல மழை பெய்ய.. பொங்கலோ பொங்க… தனது கர்ண கொடூரக் குரலுடன் சத்தமாய்ப் பாடிக் கொண்டே, கையிலிருந்த தட்டு ஒன்றில் சிறு குச்சியால் தட்டிக் கொண்டே வீட்டு முற்றத்தில் பொங்கி வழியும் பொங்கல் பானையைச் சுற்றிக் கொண்டு நடந்து சென்றார் ராமச்சந்திர அம்பலம். அவரைப் பின்பற்றி அவரின் மனைவி, மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் மற்றும் முதல் மருமகள், […]

Continue Reading »

மாற்றம் தேவை

Filed in கதை by on December 24, 2014 0 Comments
மாற்றம் தேவை

“Sorry sir, I will make sure it won’t happen again!” என ப்ரித்வியின் அம்மா பள்ளி முதல்வரிடம் கேட்டுக்கொண்டாள். அவள் கண்களில் கோபம் தெரிந்தது. ப்ரித்வி மெளனமாக பக்கத்தில் அமர்ந்திருந்தான். பள்ளி முதல்வர் கடும் குரலில் “He need to learn to share with others. Otherwise he will get into fight again and again. Prithvi, let this be the last time we call on […]

Continue Reading »

முக்தி

Filed in இலக்கியம், கதை by on October 5, 2014 0 Comments
முக்தி

கோவிந்த ராஜய்யரின் கவலையெல்லாம் ஒன்றே. சில நண்பர்களிடம் மட்டும் சொல்லி அங்கலாய்ப்பார். “பகவான் நல்ல வாழ்க்கையைக் கொடுத்துட்டான், ஒரு குறை இல்லாம குடும்ப ஷேமத்தைப் பாத்துண்டான்… இருந்தாலும் மனசைப் போட்டு வாட்டற ஒரே விஷயம் நேக்கு ஒரு புள்ளக் கொழந்த இல்லையேங்கறதுதான்.. நானும் லக்‌ஷ்மியும் என் பொண்ணு பிரபாவைப் புள்ள மாதிரிதான் வளத்தோம்.. ஆனாலும் கட்டையில போற காலத்துல அவளால எனக்குக் காரியம் செய்ய முடியாதே… புள்ள கையால காரியம் செஞ்சுக்காம பரலோகத்துல முக்தி கெடைக்கறது எப்டி?” […]

Continue Reading »

மனதில் உறுதி வேண்டும்

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
மனதில் உறுதி வேண்டும்

மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா . 11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம். நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது. என்னடா , இதோ வரேன்னு போன […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

முன்கதைச் சுருக்கம்:  (பகுதி 5) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு […]

Continue Reading »

உழைப்பின் மகத்துவம்

Filed in இலக்கியம், கதை by on June 11, 2014 0 Comments
உழைப்பின் மகத்துவம்

“அப்பப்பா…. இந்த வேகாத வெயில் இப்படி வாட்டி வதைக்குதே” என்று புலம்பிக்கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தாள் கமலா. அப்போது, எதிரே வந்த தனது இளமைக்காலத் தோழி ராதாவைக் கண்டாள். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். ‘உன் மகன் சுரேஷ், மருமகள் சுமதி எல்லாரும் எப்படி இருக்காங்க’ என்று இராதா, கமலாவிடம் கேட்டாள். ‘ம்ம்ம்….’ எல்லாரும் நல்லா இருக்காகங்க’ என்று கமலா கூறினாள். ‘ஆமா, நீ முதல்ல நல்லா குண்டா இருந்த, ஆனா இப்ப இப்படி இளைச்சு போயிட்டியே’ […]

Continue Reading »

இனிய சந்திப்புக்கள்

இனிய சந்திப்புக்கள்

முன்குறிப்பு – இந்தக்கதை 1600 களில் அமெரிக்க வடகிழக்குப்பாகத்தில் குடியேறிய ஐரோப்பிய மக்களுக்கும் ஆதிவாசிகளிற்கும் இடைப்பட்ட தொடர்புகளை விவரிக்கிறது. களைத்திருந்த புருவத்துடனான டார்சன் தனது கண்ணோட்டத்தை புல்மேட்டுக்கு அப்பால் மலைச்சாரலிடையே ஒடிவரும் ஆற்றை நோக்கிச் செலுத்தினார். ஆமாம் இன்றும் சரக்குப்பண்டங்களை ஏற்றிவரும்  ஓடங்கள் வருவதாகத் தெரியவில்லை. மெதுவாக அடுப்பங்கரையில்   எரிந்து கொண்டிருக்கும் அடுப்புக்குப்  பக்கத்தில் உள்ள மேசை வாங்கில் குடும்பத்தினருடன் வந்து அமர்ந்தார். டார்சன் அவர் மனைவி, மகன் ஒலிவர், மகள் பெர்டசியுடன்  புதிய இங்கிலாந்து என்று […]

Continue Reading »

புதுப்பிறவி!

Filed in இலக்கியம், கதை by on June 10, 2014 0 Comments
புதுப்பிறவி!

‘நான் பட்டதெல்லாம் போதும், திரும்ப கணவனோட போனா அது எனக்கு வாழ்வா இருக்காது. நரகமாதான் இருக்கும், தயவு செய்து அந்த ஆளு கூட சேர்த்து வச்சு என்ன நரகத்தில தள்ளிடாதீங்க. காதலனோடு நிம்மதியா வாழ விடுங்க…’ பஞ்சாயத்தார், கூடி நின்ற ஊரார் முன்னிலையில் அழுதுப் புலம்பி மணிகண்டனோடு செர்ந்து வாழ முடியாது என்று ஆணித் தரமாகக் கூறிவிட்டாள் காஞ்சனா. குடும்ப மானத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு வேற்றானுடன் ஓடிவந்து, கற்பிழந்த நிலையிலும், தான் செய்த தப்பை எல்லாம் உணர்ந்து, […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad