\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஒற்றைப் பார்வையால் ….!!

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments

வைகறைப் பொழுதினில்
ஜன்னலிடை நுழைந்து எனை இழுக்கும்
காலைக் கதிரவனின் கண்கூடக் கூசும் ஒரு நிமிடம்
உந்தன் ஒற்றைப் பார்வையால் …..!

அதிகாலை உறைபனியில் புல்நுனியில்
படர்ந்திருந்த பனித்துளியாய் எனை
என்னுள் உறைய வைத்தாயே
உந்தன் ஒற்றைப் பார்வையால் …!

யாமத்தைக் கூட்டவே கனவினில்
புன்னகையைத் தெளித்தே பூக்கோலமிட்டு
பல வண்ணங்களை என்னுள் தீட்டினாயே
உந்தன் ஒற்றைப் பார்வையால் …!

மழையின் ஸ்பரிசத்தை நடுநிசியில்
அறிந்திட மின்சாரத்தை என்னுள் பாய்ச்சியே
தென்றலின் தீண்டலைத் தந்தாயே
உந்தன் ஒற்றைப் பார்வையால் …!

– உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad