\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

விடியல் ..

ஒவ்வொரு காலையும்

இதழோடு முட்டிக் கொண்டதன்

ஈரம் காணாத சூடான கதகதப்பில்

 

குடுவையில் அடைத்த தேன்

துளிகள் போல

பருகப் பருக இன்பமாய்

 

முகரும் மூக்கின் நுனியில்

வாசம் படர்ந்திடும்

இயற்கையின் விடியலாய்

 

ஒவ்வொரு முறையும் பருகுகையில்

விழிகள் அழகாய்

விழித்திடும் தூக்கத்திலிருந்து!

 

நானருந்தும் தேநீர்!

– ந. ஜெகதீஸ்வரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad