\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

முடிவில்லாப் பயணம்!!

மூடுபனிக் காலத்துப் பனிச் சாரலில்

முழுமதி  இரவின் ஒளி ஊடுருவலில்

முகவரி அறியாக் காதலைத் தேடி

முடிவில்லாது பயணிக்கிறேன்…!

 

கானல் நீரோ …? காட்சிப் பிழையோ …?

காதல் நெஞ்சில்  கவிப் பாடிட

கடைவிழி யசைவில் விழுந்த நானோ

கட்டுண்டு கிடக்கிறேன் அவளாளே …!

 

மகரந்தம் வீசும் மானசீகக் காதலில்

மங்கை மனதினில் புயல் மையம் கொண்டிட

மணாளனின் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திட

மண்டியிட்டு தொழுகின்றேன்  மனதாலே ..!

 

இன்னிசை மழையில் நனைந்து எழுகையில்

இன்பத்தின் எல்லையை அடைந்த களைப்பில்

இரவின் மடியில் இளைப்பாறுகையில் இதமாக

இதழோடு இதழ் பதிக்க வாராயோ …?!

 

  • உமையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad