\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

LED LIGHTS

நிலவைக் கண்காணிக்க

சூரியன் நியமித்த

சீலிப்பர் செல்கள்!

இரவில் ஒமிழும்

வெளிச்ச கூடுகள்!

வண்ணத்துப்பூச்சிகளும்

தேனிக்களும்

சீருடை அணிந்து

இரவு வேலைக்குத்

தயாராகின்றன

மதி குழம்பி!!

பூக்கள் மொட்டு மலர

தயக்கம் காட்டி மவுனம்

காக்கின்றன!!

நிலவு அவசரமாய்

அறிவிக்க போகிறது

இனி பகலிலும்

தடை இன்றி

ஒளிருவதாய்!’

மனிதர்கள் இரவைப்

பகலாக்கி இன்பம்

காண்பதாய் நினைத்து

கொண்டு – உறவை

வீணாக்கித் துன்பம்

காண்கிறார்களோ

இச்செயற்கை ஒளியில்?

 

– இளங்கோ சித்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad