\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வறுமை

Filed in இலக்கியம், கவிதை by on November 3, 2013 0 Comments

varumai_400x320இளமையில் வறுமை இறப்பினும் கொடிது

இயம்புதல் அருமை ஔவையின் அமுது

இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது

இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது

 

இரந்திடும் வாழ்க்கை இகத்தினர் வேண்டிலர்

இருப்பவர் அனைவரும் இயல்பவர் ஆகிலர்

இளமைப் பருவத்து இரப்பவர் ஆகுவர்

இனிமை துறந்து இன்னலில் வாடுவர்

 

இன்பம் துறந்ததால் இன்னல் அடைந்ததால்

இளமை முழுவதும் இறைஞ்சி வாழ்ந்ததால்

இல்லறம் புளித்து இகமும் கசந்தது

இயல்பெனக் கருதுதல் இயற்கை நிலையது

 

இவற்றின் மத்தியில் இயல்புக்கு மாறாய்

இளமை வறுமையில் இன்பந்தரும் நல்ல

இனியதும் உளதென இயம்பிற்று எம்மனம்

இதுவென விந்தை இல்லாத புதுமை

இயம்புமெனக் கேட்கும் இதயங்களுக்கு பதிலிதோ

இன்பமாய் நடாத்தும் இல்லறம் தம்மில்

இணைந்திட்ட உறவின் இதந்தரு நன்மக்கள்

இனிமை மட்டுமே இகவாழ்வில் கண்டிட்டால்

 

இரும்பென உறுதியாய் இதயமது ஆகிடுமோ

இருப்பது எல்லாம் இளங்குருத்து தனக்கே

இயன்றவரை செலவிட்டால் இல்லாமை விளங்கிடுமோ

இல்லாமை விளங்குவது இல்லாமை இல்லாததாக்கும்

 

இலகுவாய்க் கிடைக்கும் இன்பங்கள் அனைத்தும்

இனிமையின் உணர்வை இளைஞர்க்குத் தருமோ

இறுதியாய்ச் செல்லும் இயற்கையின் வழிக்கு

இளமையில் வறுமை இன்பமே பயக்கும்!!!

 

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad