\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

என் காவியம்

Filed in இலக்கியம், கவிதை by on October 5, 2014 0 Comments

enkaaviyam_620x793கையுயர்த்திப் பேசுகையில்

மெய்வாய் மூடிக் கேட்டிருந்தேன் !!

 

கண்விழித்துப் பார்க்கையிலோ

கடைவிழிப்பார்வை விழக் காத்திருந்தேன் !!

 

காலெடுத்து நடக்கையிலே

என்வாசல் வந்திடத் துடித்திருந்தேன் !!

 

களைமுகம் சிரிக்கையில்

எனைப்பார்த்ததால் என மகிழ்ந்திருந்தேன் !!

 

கவனமாய் அழகுதீட்ட

காளையெனக்காக என்ற கனவிலிருந்தேன் !!

 

கண்மூடித் தூங்குகையில்

கனவினில் நானென எண்ணியிருந்தேன் !!

 

கைகழுவிப் போனதனால்

காவியம் பல தீட்டியவாறுள்ளேன் !!!

 

வெ. மதுசூதனன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad