\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆணவம் கொ(ல்)ள்வோம்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments

aannavam_620x620உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !

காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !

காதல் புரிந்ததாலின்று வீழ்ந்த உயிருக்கும்
காலம் அழித்திடாக் கரும் பளிங்கிலே
அரங்கம் சமைத்து சரித்திரம் படைத்து
அகிலங் கூட்டிப் பெருமை கொள்வோமே !

ஆணவம் என்ற அரிய சொல்லினை
ஆபரண விகுதியுடன் ஆவணப் படுத்துவோமே
விரிந்து, மலிந்து கிடக்கும் வலையுலகில்
விரைந்து புதுப் பொருளினைப் பதிந்திடுவோமே !

எழுத்துக் கூட்டித் தமிழ்ப் படிக்கும்
எம்பிள்ளைகள் என்றாவ தொரு தினம்
இதைப்படித்து நம் கலாச்சாரம் புரிந்து
இறுமாப்பு மிகுந்திட பெருமை கொள்ளுமே !

மிருகம் வளர்த்து மனிதம் தகர்ப்போமே
மிக்காரும் ஒப்பாருமிலை மார் தட்டுவோமே
அஹிம்சை நாடென்ற அடையாளம் விடுத்து
அரக்கர் நாடென்றே முரசு கொட்டுவோமே!

– ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad