admin
admin's Latest Posts
இலையுதிர்காலத்தின் வசீகரிக்கும் அழகைத் தழுவுதல்

வட அமெரிக்காவில் வண்ணங்கள் மற்றும் விறுவிறுப்பான காற்றின் இயைவான இன்பரசம் பெரும்பாலும் இயற்கையின் மகத்தான கோடைப் பருவத்தின் முடிவாகக் கருதப்படும் இலையுதிர்காலம், வண்ணங்களின் மயக்கும் காட்சி மற்றும் மிருதுவான, புத்துணர்ச்சியூட்டும் காற்றுடன் வட அமெரிக்கா முழுவதும் பரவுகிறது. இலைகள் சிவப்பு, செம்மஞ்சள் மற்றும் மஞ்சள் நிறங்களின் துடிப்பான படலமாக மாறும்போது, கண்டம் ஒரு பிரமிப்பூட்டும் தலைசிறந்த படைப்புக்கான ஓவிய வரை திரையாக (Drawing Canvas) மாறுகிறது. இத்தருணத்தில் நாம் வட அமெரிக்காவில், குறிப்பாக மினசோட்டா மாநிலத்தில் அழகான […]
இடி, மின்னல், மழை மங்கை!

நெற்றிப் பரப்பினில் சுற்றிப் பறந்திடும் கற்றைக் கூந்தலைச் சற்றே விலக்கிச் சிரித்தாள்!! விலக்கலில் வழிந்த வியர்வையும் மெதுவாய் விழிகளைத் தாண்டி விழுவதில் விழுந்தேன்!! நாசிகளைக் கடக்கையில் சுவாசித்துத் தணிந்ததால் வீசிய கனலது தூசியாய் மேகமாகியது! மங்கையின் வியர்வையும் பொங்கிய கனலினால் தங்கியே வான்புக கங்கையாய்ப் பொழியுதோ? கண்ணதன் ஒளியுமே மண்ணிதின் மீதிலே எண்ணத்தின் வேகமாய் மின்னலாய்ப் பாய்ந்ததோ? கன்னியவள் குலுங்கிடக் கடலலையும் குதித்திடுமோ? என்னவளும் சிணுங்கிட இடியதுவும் சினந்திடுமோ? […]
முத்தமிழ் விழா

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தினர் 2023ஆம் ஆண்டிற்கான முத்தமிழ் விழாவை ‘ஓக்டேல்’ நகரில் அமைந்துள்ள ‘ரிச்சர்ட் வால்டன்’ பூங்காவில் உள்ள வெளிப்புற மேடையில் ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று நடத்தினர். இந்த விழாவில் பறை மற்றும் சிலம்பம் பயிற்சிப் பட்டறையைக் காலை நேரத்திலும், மக்களிசை மற்றும் மரபுக் கலை நிகழ்ச்சிகளை மதியத்திற்குப் பிறகும் நடத்திக் காட்டினர். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் பறை பட்டறையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பறையிசை கற்றுக்கொடுத்தார். அதே போல், […]
டைகர் கா ஹுக்கும் ..

72 வருடங்கள், எட்டு மாதங்கள், 10 நாட்கள் – இந்தப் படம் வெளியாகும் தினம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வயது. முக்கால்வாசி மனிதர்களுக்கு, அந்த வயதில் கழிப்பறை செல்வதற்கே துணை வேண்டும். இவரால் மட்டும், இன்னும் அந்த லட்சக்கணக்கான ரசிகர்களை வசீகரிக்க முடிகிறது என்பதை நினைத்தால் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. 1978இல் வெளிவந்த ‘பைரவி’ கதாநாயகனாக அவரின் முதல் படம். அதைத் தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்துப் பெற்று, கிட்டத்தட்ட நாற்பது வருடங்கள் என்று வைத்துக் கொள்ளலாம். […]
மரணிக்கும் மனிதம்

ஜூன் 8, 1972ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ‘கிம் பக்’ எனும் வியட்நாமிய சிறுமியின், போர் பதட்டத்தால், ஆடைகளின்றி தெருவில் ஓடும் புகைப்படம் ஒன்று வியட்நாம் போரை நிறுத்தக் காரணமாகயிருந்தது என்பது வரலாறு. அதே போல் இன்று, பெண்கள் இருவர், ஆடைகள் களையப்பட்டு, காமச் சீண்டல்களுடன் தெருவில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்படும் காணொளி, சமூக ஊடகங்களில் பரவி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பெண்களின் நிலைமைக்கு அத்தாட்சியாகப் பதியப்பட்டுள்ளது. மிக வேகமாகப் பரவிய இந்தக் காணொளி உலக […]
மணிப்பூர்

மணிப்பூர் – இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இந்தாண்டு மே மாதம் துவக்கம் முதல் இங்கு மேத்தயி எனப்படும் மேத்தி மற்றும் குக்கி/நாகா இனப்பிரிவினருக்கிடையே பல காலமாகவே இருந்து வந்த பூசல்கள் வலுபெற்று போராட்டமாக மாறத் துவங்கியது. பிரிட்டிஷ்காரர்கள் வருவதற்கு முன்பிருதே இப்பகுதியில் இனக்கலவரங்கள் பரவியிருந்தது. கிபி 33 ஆம் ஆண்டிலிருந்தே மணிப்பூர் வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன. அச்சமயத்தில் மேத்தி இனக்குழுவினர், பகாங்பா எனும் மன்னரின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகச் சொல்லப்படுகிறது. சனாமயிசம் (Sanamahism) எனும் […]
உலகளாவிய கொதிநிலை (Global Boiling)

‘புவி வெப்பமயமாதல்’ என்ற சகாப்தம் முடிந்து ‘உலகளாவிய கொதிநிலை’ என்ற சகாப்தம் தொடங்கிவிட்டது என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்தாண்டு ஜூலை மாதம், காலநிலை பதிவுகள் தொடங்கப்பட்ட 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு, உலகின் வெப்பமான மாதமாகப் பதிவாகும் என்ற அதிர்ச்சித் தகவலையும் பகிர்ந்துள்ளார். காலநிலை மாற்றங்கள், எதிர்பார்த்ததை விட அதி பயங்கர வேகத்தில் நடந்து வருகிறது. ‘தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம்’ (National Oceanic and Atmospheric Administration), […]
மனம் நாடும் மனித போக்குகள்

முன்னேற்றம் என்பது செய்பவை யாவற்றையும் துரிதமாக செய்தல்; இதற்கு இலத்திரனியல் Digital தொழில் நுட்பங்களை உபயோகித்தல் என்பது சாதாரணமாகி விட்டது. இவ்வகை நுட்பம் தெரியாவிட்டால், நாம் பின்தங்கி விட்டதாகவும் ஒரு சிந்தனை எம்மிடையே காணப்படுகிறது. நாம் மனிதர்; எமது சுபாவம், குணாதிசயம் இரண்டும் இணைந்து சமூகவியல் வாழ்வை அமைத்துக் கொள்வதே எங்கள் நோக்கம். அண்மைக்காலத்தில் எதையும் திறமையாக, துரிதமாக, இலத்திரனியல் மென்பொருளூடு செய்து முடித்து விடவேண்டும் என்ற உந்தல் இருந்து கொண்டே இருக்கிறது, இருந்தாலும் மனம் […]
பணிவாய்ப்புத் துறையில் செயற்கை நுண்ணறிவு

கல்லூரிப் படிப்பை முடித்து, பெருங் கனவுகளுடன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தில் காலெடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு உதவப்போகிறது. டோக்கியோ, யப்பானை தளமாகக் கொண்ட ஃபோரம் இன்ஜினியரிங் கிரேடுகள் மற்றும் பலவற்றின் அடிப்படையில் பொருந்தக்கூடிய தன்மையை அளவிடுகிறது சென்ற நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் 1.2 மில்லியன் பயனாளிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, யப்பானைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களை வேலை வாய்ப்புகளுடன் பொருத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. ஃபோரம் இன்ஜினியரிங் நிறுவனத்தின் புதிய […]