admin
admin's Latest Posts
நாப்பதுக்கு மேலே…
ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]
முதுமையும் மழலையே
அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான். “பத்ரி எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு, “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். இது, கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரான செயிண்ட் பால் நகரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் 50 வது முறையாக கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது பழைய தொகுப்பு https://www.panippookkal.com/ithazh/archives/4229 சொடுக்கவும்.
குருத்தோலைச் சிலுலை கைவண்ணங்கள் பாகம் 1
சாதாரண தென்னை, பனை குருத்து ஒலைக் கீற்றானது சுமார் 24 அங்குலம் வரை அமையும். நீங்கள் இவ்விடம் தந்துள்ள பச்சை நிற காகிதத்தையோ அல்லது உங்களுக்குப் பிடித்த பலநிறக் காகிதத்திலும் கீழே உள்ளவற்றை அமைத்துப் பார்க்கலாம். ஓலைக்குப் பதிலாக நீங்கள் இறுதியில் தரப்புட்டுள்ள காகிதப்படத்தையும் அச்சடித்து வெட்டி உபயோகிக்கலாம். குருத்தோலை சிறிய சிலுவை அச்சடித்து வெட்டியெடுக்கக் காகிதம்
குருத்தோலைச் சருகைச் சிலை கைவண்ணங்கள் பாகம் 2
படங்களைப் பின்பற்றி நீங்களும் தயாரித்துக் கொள்ளலாம். ஆக்கம் – ஹனிபால் வரைவு – யோகி
கலக்கப்போவது நாங்கதான்
ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல். கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே? நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும்? பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல […]
சாவுக்கு சாவும் நம் உயிருக்கு உயிர்ப்பும்
உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்போம் என்பது இயற்கையின் கட்டாயம். இதில் ஏழை என்றோ பணக்காரன் என்றோ பகுப்பாடு கிடையாது. ஆனால் கிடைத்த வாழ்வில் சாவைவென்று உயிருள்ள வாழ்கையை எப்படி வாழ்வது என்பதை உணர்த்தவும், துன்பத்தில் துவண்டுபோன மனிதன் எப்படி துள்ளி குதித்து எழவேண்டும் என்பதை வெளிப்படுத்தவும், வாழ்வில் பாவம் மற்றும் இறப்பின் பயத்திலிருந்து மீண்டு வரவும், வாழ்க்கைக்கடலை கடப்பது எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் கடவுள் மனிதனாக பிறந்தார். மனிதனாக பிறந்த நம் எல்லாருக்கும் சாவு என்றால் […]
Internships
[pdf-embedder url=”https://www.panippookkal.com/ithazh/wp-content/uploads/2016/03/PPKL-Internships-NA.pdf”]







