admin
admin's Latest Posts
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-18
இன உணர்வு (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17) இன உணர்வு என்பது எல்லா இனத்தினர்க்கும் உரித்தானதொன்று. தத்தம் இனம் சார்ந்து சிந்திக்கப் பழகிக் கொண்டவர்கள் மனிதர்கள் மட்டுமல்லர். காகங்கள் கூடத் தம்மினத்தில் ஒன்று இறப்பினும் கூடி அழும். சிறிதளவு உணவு கிடைப்பினும் கூடி உண்ணும். இத்தகைய இனமான உணர்வு தமிழரிடத்தில் சொற்ப அளவில் இருப்பதை எண்ணிப் பெருமை கொள்வோம். “பட்டினிப் பிசாசு தின்னும் ஓர் ஆப்பிரிக்கக் குழந்தைக்காய் வழியும் என் கண்ணீரை என் இனத்துக் குழந்தைக்காய் மட்டும் […]
ஈழத்துச் சித்தர்கள்
சித்தில் வல்லவர் சித்தர் என்பது பண்டைய தமிழ் மக்களின் பாங்கான வாய்மொழி. சித்து என்பதற்கு அறிவு என்றும் ஒருபொருள் உண்டு. எனவே சித்தர்கள் என்பவர்கள் அறிவுடையார், புத்திஜீவிகள் (Intellects) என்றும் தற்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளலாம். ஆயினும் ஈழத்திலும், தமிகத்திலும் சித்தர்கள் பலதர அறிவு சார்ந்த விடயங்களிலும், யோகமார்க்கத்திலும் வல்லவராயிருந்து வந்தனர். பலதுறைகளிலும் கவனம் செலுத்திய தமிழ்ச் சித்தர்கள் வைத்தியத் துறையிலும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டனர். சித்தர்கள் சத்திர சிகிச்சை முறை, மூலிகைத் தயாரிப்பு, தாவரவியல் என பலதரப்பட்ட […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 3
(எங்கேயும் எப்போதும் MSV – 2) ராக் அண்ட் ரோல் (Rock and Roll) நாற்பதுகளில் அமெரிக்காவில் பிரபலமடைந்தவொரு இசை வடிவம். ஜாஸ், ப்ளூஸ் போன்ற ஆப்பிரிக்க இசை வடிவங்களின் நீட்சியே ராக் அண்ட் ரோல். ஜாஸ், ப்ளூஸ் போன்ற இசைகளோடு கண்ட்ரி மியூசிக் (நாட்டார் இசை) கலந்திருப்பதால் ஜாஸில் தொக்கியிருக்கும் சோகம் ராக் அண்ட் ரோல் இசையில் காணப்படுவதில்லை. தொடக்க காலங்களில் ஜாஸ் இசையைப் போன்றே ராக் அண்ட் ரோலிலும் பியானோ, பிராஸ் இசைக் கருவிகளின் […]
கலிஃபோர்னியா பாரதியார் பிறந்தநாள் விழா
பாரதி தமிழ்ச் சங்கம் இந்து தர்மத்தை அடியொற்றி இயங்கும், உலகத் தமிழர்களுக்கான ஒரு அமைப்பு, பாரதி தமிழ்ச் சங்கம் பாரதியார் பிறந்தநாள் விழாவை டிசம்பர் மாதத்தில் Milpitas Shridi Sai கோயிலில் நடத்தியது. இது சென்னை வெள்ள நிவாரணத்திற்கு நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியாகவும் நடை பெற்றது. இந்தக் கட்டுரை, இந்த நிகழ்ச்சி குறித்த ஒரு சிறு குறிப்பே. முதலில் திரு முரளி ஜம்பு முன்னுரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து, திரு. வெங்கடேஷ்பாபு நிகழ்ச்சியைத் தொடக்கவைத்தார். முரளி […]
லக்ஷ்மன், மாலதி – நேர்முகம்
1987 ல் முதன் முதலில் ஒரு பத்துப் பேருடன் கூடிய ஒரு சிறு குழுவாக தொடங்கப்பட்டு, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு மிக பிரபலமான இசை குழுவாக மக்களிடையே அங்கீகாரம் பெற்ற ஒரு இசைக் குழு என்றால் அது லக்ஷ்மன் சுருதி தான். தொழில் நுட்பங்கள் அதிகமாக புகுந்த இந்தக் காலத்திலும், முழுக்க முழுக்க மனித உழைப்பே கொண்டே இந்த இசைக் குழு செயல்படுகிறது. அந்த குழுவின் தலைவர் லக்ஷ்மன் அவர்களுடன் ஒரு உரையாடல். கேள்வி : […]
வெழல் வெய்த – வசந்த மாளிகை
மச்சு வீடுகள் எங்கும் மல்கிவிட்ட இந்தக் காலத்தில் குச்சு வீடுகள் நமக்கு மறந்து போனதில் வியப்பொன்றும் இல்லையே. ஆம் வெழல் வெய்த கூரை வீடுகளை இன்று காண்பது அரிதாகி விட்டது. இன்று ஏழ்மையின் அடையாளமாகக் காணப்படும் இந்த வீடுகள்தாம் சிலகாலத்திற்கு முன்புவரை ஒட்டுமொத்த சமுதாயத்தின் அடையாளமாகத் திகழ்ந்தது என்றால் நம்ப முடிகிறதா? எனது சிறுவயதில் வெழல் வெய்த கூரை வீட்டில் வாழ்ந்திருக்கிறேன். அந்தப் பட்டறிவும் அதில் உள்ள இன்ப துன்பங்களைப் பட்டியலிடும் முயற்சியே இந்தக் கட்டுரை. ஆம்! […]
வெள்ளப் பாதுகாப்புக் கைமுறைகள்
வெள்ளத்தின் முன்பு கட்டிடங்களை வெள்ளப்பெருக்குத் தரைகளில் தவிர்த்தல் கட்டிடங்களின் அத்திவராம் போடும் போதே அடமழை வெள்ளப் பெருக்குத் கடைமுறைகளைக் கையாளுதல் – குறிப்பாக மண்மேட்டு அணை, சீமந்துக் கல்பாறை அணை மற்றும் தறிக்கட்டைகள் போடுதல் கட்டிடத்தின் தாழ்ந்த பகுதிகள், நில அடி அறைச்சுவர்களில் தடித்த நீர் ஊறுதல் தடுக்கும் சீமெந்து மற்றும் கட்டிடப் சாந்துகளைப் waterproof compounds பூசுதல் காலநிலை அறிவிப்புக்களில் வெள்ள அவதானத்திற்கும், வெள்ள அபாயத்திற்குமான வித்தியாசங்களைத் தெளிவாக அறிந்து கொள்ளல் வெள்ள அவதானம் – […]
பஞ்சாமிர்தப் பழரசப்பாகு
பஞ்சாமிர்தம் என்றால் வழக்கமாக வாழைப்பழம், பேரிச்சை,முந்திரி, தேன் என்றுதான் தெரிந்தவர்கள் மனம் போகலாம். ஆயினும் நாம் இவ்விடம் இதமான பலவர்ணச் சுவையுடைய கனிகளின் சுழைகள் கொண்டு பழரசப்பாகு செய்ய முனைவோம். தேவையான பொருட்கள் 2 நன்கு பழுத்த மாம்பழம் 1 பழுத்த பப்பாப்பளம் 1 அன்னாசிப்பழம் 2 தோடம்பழம் (Orange) 2 வாழைப்பழம் 1 தேசிக்காய் 4 ounce/110 g சீனி ½ கோப்பை தண்ணீர் 1 தேக்கரண்டி வனிலா வாசனைத் திரவியம் வேண்டியவர்கள் 5 தேக்கரண்டி […]
முதற் காதல்
எழுதி எழுதித் தீர்த்தாலும் இனி
எழுதுவதற்கு இல்லையென இருந்திட இயலாது….
அழுது அழுது தீர்த்தாலும் இனி
அழுவதற்கு ஏதுமில்லையென அமைந்திட இயலாது…
அரும்பாக இருக்கையிலே அழகாக அரும்பியது
துரும்பாக இருந்ததையும் தூசிதட்டி விரும்பியது
குறும்பாக நடந்ததெல்லாம் குறுகுறுத்துப் பருகியது
இரும்பான இதத்தையும் இளக்கிடவே திரும்பியது







