admin
admin's Latest Posts
பெற்றோர்க்காக!!
அன்பில் எனை ஈன்றெடுத்து
ஆசையாய் வளர்த்தெடுத்து
இம்மையில் மறுமை சேர்த்து
ஈகையின் பெருமை வார்த்து
பயணக் கட்டுரை
சிறு வயதில் ‘கற்கண்டு’ பத்திரிகையில் லேனா தமிழ் வாணனின் பயணக் கட்டுரையைப் படித்து ரசித்ததுண்டு. பல சமயங்களில் அவரின் பயணக் குறிப்பைப் படிக்கையில் இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எந்நாள் என்று நினைத்ததுண்டு. அவரைப் போன்ற அனுபவமோ, பேரோ, புகழோ வந்திராவிடினும் ஒரு சில பயணங்கள் தந்த அனுபங்களைப் பகிரலாமென்ற எண்ண உந்துதலே இந்தக் கட்டுரையின் காரணம். நம் இந்திய நாட்டின் பலங்களில் ஒன்றான அதே சமயத்தில் பலவீனங்களிலும் ஒன்றானது உறவுகளுக்கு இடையேயான நெருக்கம். இந்த விதத்தில் […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். மினசோட்டாவில் கோடைக் காலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் துவங்கியது போலிருந்த கோடைக் காலம், கண் சிமிட்டி முடிப்பதற்குள் முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாய் அனைவரும் உணர்கின்றோம். வாழ்க்கைச் சக்கரம் மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது. பொய்யாமொழிப் புலவன் கூறியது இதுவே; நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். கண்ணுக்குத் தெரியாத காலம் என்பது ஒரு நாள் போலக் காட்டி உயிரினை அறுக்கும் வாளாகும், […]
தமிழனென்று சொல்லடா – அருணகிரிநாதர்
ஏற்கனவே எழுதியுள்ளபடி, தமிழுக்குத் தொண்டு செய்த பெரியவர்களைப் பற்றி எழுதுவதே இந்தத் தொடரின் நோக்கம். மேற்கத்திய மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் தமிழ் இளைஞர் சமுதாயம் மட்டுமின்றி, தினந்தோறும் தமிழ் தமிழென மேடைகளில் முழங்கி, தமிழால் வயிற்றுப் பிழைப்பை நடத்தி, ஆனால் தமிழுக்கென எந்தவிதத் தியாகமும் புரிந்திடாத போலித் தமிழறிஞர்கள் பலரும் அறியாத அல்லது அறிந்து கொள்ள முயலாத இன்னொரு மாபெரும் தமிழறிஞர் அருணகிரிநாதர். அவர்கள் அறிந்து கொள்ள முயலாததற்குப் பல சொந்த லாபங்களே காரணமென்று அவர்களை ஒதுக்கிவிட்டு […]
சுமக்கும் நினைவுகள்
தளிர்க் கரங்கள் பற்றி நின்ற
தண்மை இன்றும் நினைவை வருடுது
சற்றே ஒதுங்கிய வெண்ணிறப் பற்கள்
சடுதியில் வந்து சாகசம் புரியுது….
காலம்
இறந்த காலம் முடிந்த கதை, திருத்த முடியாது, எதிர் காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. நிகழ் காலம் மட்டும் தான் நம் கையில் உள்ளது. அதனால் தான் அதை ஆங்கிலத்தில் “Present ” என்று சொல்கிறோம் – ஞானி காலம் அறிவியல் வாயிலாக பல கோணங்களில் பலமுறை ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. காலத்தை துல்லியமாக கணிக்கக் கூடிய பல கருவிகள் இருக்கின்றன. நொடிப்பொழுதை கோடிப் பகுதியாகப் பிரித்து அளக்கக் கூடிய திறமையும் அறிவும் அறிவியல் மேதாவிகளுக்கு உண்டு. காலத்தைப் […]
எசப்பாட்டு – வாழ்க்கைச் சக்கரம்
இருவர் புரிந்திட்ட காமத்தின் விளைவோ?
இறைவன் அருளிய இணையிலா விதியோ?
இயற்கை ஊன்றிய இன்பமான விதையோ?
இயல்பாய் உயிரினம் ஆற்றிய வினையோ?
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8
(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]







