\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 2 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-8

(பகுதி-7) பிரிவுத்துயர் எண்ணற்ற சொந்தங்கள் இருந்தும் அவர்களைப் பிரிந்து யாருமற்ற அனாதைகள் போல தனிமையில் வாழ்வது தான் துயர்களில் கொடுந்துயர். புலம்பெயர்ந்த இளைஞர்கள் பலர் இன்று உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தாய், தந்தை, உடன் பிறப்புக்களைப் பிரிந்து உழைப்பு, உயிர்ப் பயம் போன்ற காரணங்களினால் புலம்பெயர்ந்தோர் சதா அதே நினைவுடன் தமது காலத்தைக் கடத்திக் கொண்டிருக்க மறுபுறம் மனைவி, பிள்ளைகளைப்பிரிந்து வெளிநாடுகளுக்குச் சென்று பல வருடங்களாகத் தனிமையில் வாடும் கணவன்மார் மற்றும் தந்தைமார்களின் நிலையோ […]

Continue Reading »

மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)

மினசோட்டாவில் இந்தியத் திருவிழா – 2014 (IndiaFest)

மினசோட்டா மாநில இந்தியக் குழுமியம் கோலாகலமாக 2014ஆம் ஆண்டுக்கானபண்டிகையைக் கொண்டாடினார்கள். இந்தக் கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி சனிக்கிழமை மதியம் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மினசோட்டா மாநிலத் தலைமையக மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழா மினசோட்டா மாநில ஆளுனர் மதிப்புக்குரிய மார்க் டெய்ட்ன் (Mark Dayton) அவர்களின் அனுசரணையுடன், விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு ஏறத்தாழ 10,000 மக்கள் வருவர் என எதிர்பார்க்கப்பட்டது. வருகை தந்தவர்கட்கு நல்லெண்ணத்தைப் பகிரும் வகையில் […]

Continue Reading »

மொகஞ்சதாரோவின் மதுரா

மொகஞ்சதாரோவின் மதுரா

ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை அழகிய அல்லிப்பூப் போல மலர்ந்தது. சேவல்கள் கூவின, பறவைகள் பாடின, பசுக்கள் கதறி கன்றுகளை அழைத்தன. ஆகா காலை நேரம் குழந்தைகளும், பெரியவர்களும் இலேசாகச் சோம்பல் முறிந்து எழுந்து கொண்டனர். குட்டி மதுரா தனது தாய் தந்தையினர் எழும்ப முதல் எழுந்துவிட்டாள். அவளும் செங்களுநீர் மொட்டுகள் போல அழகிய மழலை முகமுடையவள். காலையில் குயில் கூவலையும், கதிரவன் செங்கதிர்கள் வீட்டின் மரத்தூண்களினால் ஆன முகட்டுத் துவாரங்களினூடு தனது கட்டிலிற்கு […]

Continue Reading »

மூளையும் நனவு உணர்ச்சியும்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 0 Comments
மூளையும் நனவு உணர்ச்சியும்

நீங்கள் வீதியீல் ”நடமாடும் பிரேதத்தை”க் (Zombie) கண்டீர்களானால் அது நனவு அற்றது என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியமா? முடிந்தால் உங்கள் பதில்களை யோசித்தவாறு படிக்க ஆரம்பியுங்கள் இந்தக் கட்டுரையை. தற்போது ஹாலிவுட்டில் இருந்து நமது தமிழ்ச் சினிமாக்களிலும் சரி பல நடமாடும் பிரேதங்கள், குருதி குடிக்கும் வாம்பயர்கள் (vampires) எனக் குரோதமான, திகிலான (Horror Thrillers) படங்கள் வெளிவந்தவாறுள்ளன. அந்தப் படங்களில் எல்லாம் நடமாடும் பிரேதங்களை  ரசிகர்கள்பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளத் தயாரிப்பாளர் பின்னிசை, நிறங்கள், நிழல்கள் […]

Continue Reading »

மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 0 Comments
மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்

எமது மாநிலமானது 10,000 க்கும் மேற்பட்ட ஏரிகள் கொண்டு செழிப்புற்றுக் காணப்படும் மாநிலம் என்று பெருமைப்படுவோம். உண்மையில் மாநில வனக்காப்புத் திணைக்களம் (Department of Natural Resouces  – DNR) 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மாநிலம் 11,842 ஏரிகளை உள்ளடக்கியுள்ளது. எனினும் சில வரலாற்றுப் பத்திரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் நிலப்பரப்பளவில் 10 ஏக்கர்களிலும் பெரிதாக இருந்துள்ளன என்கின்றன. மினசோட்டா என்ற சொல்லே பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல்லொன்றாகும். மினி Minni என்பது […]

Continue Reading »

மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்

மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்

என்ன? எங்கே? எப்போது? Renaissance Festival மறுமலர்ச்சிப்பண்டிகைஉங்கள் கற்பனையை மாத்திரம் கொண்டு வாருங்கள் ஐரோப்பியப் போர்வீரர்,பழைய ராசா, ராணி வாழ்க்கையைப் பார்த்து மகிழ ! Shakopee சனி,ஞாயிறுAugust 16-Sept 28 Sponsel’s மினசோட்டா அறுவடைப் பண்டிகைபூசணிக்காய்,ஆப்பிள்,சோள வயல் புதிர், வைக்கோல் வண்டிச்சவாரி, குதிரை ஏற்றம், சிறுவர் விளையாடும் ஆட்டுக்குட்டி, பசு, கன்று மான்குட்டி,முயல் போன்றவையுள்ள விலங்குச்சாலை [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Jordan திங்கள் -வெள்ளி10 மணி – 5 மணி சனி,ஞாயிறுகாலை […]

Continue Reading »

மனதில் உறுதி வேண்டும்

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
மனதில் உறுதி வேண்டும்

மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா . 11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம். நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது. என்னடா , இதோ வரேன்னு போன […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 14

உலகச் செம்மொழி – அத்தியாயம் 14

அத்தியாயம் 13 செல்ல இங்கே சொடுக்கவும் இப்படி ஆதி மனிதன் ஆதாம் ஏவாள் முதல் நோவா வரை தமிழ் மூலப் பெயர்களையே கொண்டுள்ளனர். தமிழைக் கடவுளாகப் போற்றும் மரபு நம்முடையது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திரு கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பட்டிமன்றத்திற்கு வந்திருந்தார். நடுவராகக் கவிப்பேரரசு வைரமுத்து அமர்ந்திருந்தார்.. கனிமொழியைப் பேச அழைக்கும் போது ’தமிழ் அனைவருக்கும் தாய் என்றால் இவருக்கு மட்டும் தந்தை’ என்று கலைஞர் கருணாநிதியைத் தமிழாக உருவகித்தார். தமிழ் […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

முன்கதைச் சுருக்கம்:  (பகுதி 5) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு […]

Continue Reading »

சஞ்சிகை விபரம்

Filed in முகவுரை by on September 8, 2014 12 Comments
சஞ்சிகை விபரம்

பனீப்பூக்கள் குழுவினர் விவரம்

Continue Reading »

ad banner
Bottom Sml Ad