admin
admin's Latest Posts
தவிக்கும் தமிழன்
சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]
வறுமை வசந்தமாகிறது!
தொலைந்த நாட்களுக்குக் கிடைத்தபரிசுதான்
தொங்கிப் போன தாடியும்
சுருங்கிப் போன சட்டையும்
மனம் இருந்திருந்தால்
சுயமானத்தை இழந்திருக்க மாட்டேன்
இன்னும் என் கண்ணில் உள்ளது
ஒளி
முறிந்த மொட்டுக்கள்
தெருக் கோடியில் அட்டை பிடித்து நிற்கிறார் மூத்தவர்
நரைத் தாடியில் சட்டைக் கிழிந்து நிற்கிறார் மூத்தவர்
இளம் வயதில் படை வீரனாய் ஓட்டினார் கப்பலை
இன்று வீதியில் கடும் வெய்யிலில் நிற்கிறார் மூத்தவர்
காதலர் தினம்
1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]
நம்பிக்கை
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
அமெரிக்கா
உனக்கும் எனக்கும் ஒரே மொழி
ஆங்கிலம்
உனக்கும் எனக்கும் ஒரே ஆடை
கந்தலாடை
தாத்தா – பெண்
இயற்கை அழகை எல்லாம்
அள்ளிப் பருகி – ஒளி இழந்து
இன்று அமைதியாய்
அடங்கிப் போனது விழிகள்!
சிறுமி – பெரியவர்
அண்ட ஒரு இடமில்லையோ?
அன்னமிடக் கையில்லையோ ?
ஆதரிக்க உறவில்லையோ?
ஆதரவே சிறு பலகை தானோ?
ஒரு அபலையின் அழுகுரல்
உதைபட்ட பந்தாக உருண்டோட
உறவினரால் நிலைகுலைந்து போனேன்!
எதைச் சொல்லி நான் அழுவேன் இன்று
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்
என்னை விட்டுச் சென்றவர் வருவார் என்று
வாடிய என் முகத்தில்
கண்ணீர் கூட இல்லை அழுதுவிட
எசப்பாட்டு – காதல்
காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்
அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே… ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் பகிர்ந்து […]







