admin
admin's Latest Posts
எசப்பாட்டு – காதல்
காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்
அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே… ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் பகிர்ந்து […]
வாழ்த்து மடல் – லெட்சுமணன்
அ.லெட்சுமணன், சென்னை – 35 21/04/2014 பனிப்பூக்கள் செட்டிநாட்டுப்பகுதியில் திருமணச்சடங்குகளில் ஒன்று “பூ மணம் இடுதல்” . இதில் என்ன செய்வார்கள் என்றால், பூக்களைப் பாலில் தோய்த்து மணமக்களின் கை மற்றும் தோள்களில் இரு வீட்டாரும் வைப்பார்கள். இந்தச் சடங்கின் விளக்கம் என்னவென்றால், பூக்கள் எவ்வாறு மணம் பரப்புகிறதோ அதே போல் மணமக்களும் இந்த பூவுலகில் புகழ் மணம் பரப்ப வேண்டும் என்பதாகும். அதே போல் இந்தப் பனிப்பூக்களும் தேசம் கடந்து பனி தேசத்தில் […]
வாழ்த்து மடல் – தரணி
மினசோட்டாவில் உள்ள பனிப்பூக்கள் தமிழ்நாட்டில் உள்ள வள்ளுவர் கலைக்கல்லூரியில் கலைப்பூக்களாக பூத்துக் குலுங்குகிறது. இணையதளத்தில் வள்ளுவர் கல்லூரிக்கு வாய்ப்புகளை வழங்கும் பனிப்பூக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பனிப்பூக்கள் இணையதளத்தில் வள்ளுவருக்கு எப்படி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்பதனை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறோம். பனிப்பூக்களானது நாணயத்தின் இருபுறமும் உள்ளது போல் செயல்படுகிறது. ஒருபுறம் கலை, கட்டுரை, கவிதை, சிந்தனை போன்ற வளரும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கிறது. மறுபுறம் அன்பு, அரவணைப்பு என கட்டித் தழுவுகிறது. அமெரிக்காவில் உள்ள […]
பசி! வீடில்லேன்! (Hungry! Homeless!)
வறுமை எந்தப் பருவத்தும் வந்து சேரும்! – அந்த
வறுமை, ஆண் பெண்ணென்று பார்ப்ப தில்லை!
பெருமையெலாம் பிரிந்தேகும்! நாணம் போகும்! – பெற்ற
பெருங்கல்விப் பட்டமெலாம் பின்னுக்(கு) ஏகும்!.
எம்.ஜி.ஆர்.
தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் எம்.ஜி.ஆர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் எனும் பெயரே, தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள பலர் மனதில் எம்.ஜி. ஆர். எனும் மூன்று எழுத்துக்களாக நிலை பெற்று விட்டது. இவரது பெற்றோர் கோபாலமேனன், சத்யபாமா. கோபாலமேனன் அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றி வந்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் பல இடங்களுக்கு மாற்றல் செய்யப்பட்டு இறுதியில் அவர் தனது வேலையை துறந்து குடும்பத்துடன் இலங்கை சென்றார். […]
பாலுமகேந்திரா ஒரு சகாப்தம்
1939 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் “அமிர்தகழி” என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலநாதன் மகேந்திரன் என்பதாகும். சிறு வயது முதலே படப்பிடிப்பில் ஆர்வம் மிக்க இவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து பின்னர் திரைப்பட ஒளிப்பதிவுக்கலை பற்றிய படிப்பில் 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். தனது பட்டப் பின் படிப்புக்காக முழுவதும் இயற்கை ஒளியைக் கொண்டு வடிவமைத்த திரைப்படமே […]
சித்திரக் கதை – பூதன் – கதை
1. பூதம் ஐந்தும் பதமாய்ச் சேர்ந்த பலவான் பூதன்….
2. வியர்வை சிந்தி வேட்டை முடித்ததும் விசனமற்ற ராத்தூக்கம்
3. பொழுதது புலர்ந்திட, பிறவிடம் விட்டு பிறப்பிடம் திரும்பினான்..
4. திரும்பிய பூதன் திடுக்கிடும் வகையில் திக்கெல்லாம் அழிவு







