admin
admin's Latest Posts
எழுதுங்கள் வெல்லுங்கள்
மேற்காணும் இரண்டு படங்களையும் பார்த்தவுடன் என்ன தோன்றுகிறது? உங்களின் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுங்கள். மனதில் தோன்றுவதை கவிதை வடிவில் எழுதி சமர்ப்பிக்கவும். எல்லாப் போட்டிகளுக்கும் உள்ளது போல சில விதி முறைகள் கீழே; படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்குக் கடைசி திகதி: 02/15/14. உங்களது படைப்பு இதற்கு முன் இணையத்திலோ பத்திரிகையிலோ வெளியாகி இருக்கக் கூடாது. கவிதை வடிவமாக இருத்தல் அவசியம் மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைகூ என்று எந்த வடிவத்தில் இருப்பினும் சரியே. இருபது வரிகளுக்கு […]
தலையங்கம்
வாசகர்களுக்கு வணக்கம். பனிப்பூக்கள் ஆசிரியர் குழு சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் தங்களின் வாழ்வு மேலும் ஒளிமயமானதாக ஆக எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள். மினசோட்டாவில் வாழ்பவர்கள் கடந்த சில வாரங்களாக உதிரத்தை உருக்கும் குளிரை அனுபவித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நாள் தட்பம் பூஜ்யத்திற்கு நாற்பது அலகு குறைவான (Minus Forty Degree Fahrenheit) நிலையை அடைந்தது. மினசோட்டா மாகாணத்தின் வட எல்லையிலுள்ள […]
ஸ்ரீனிவாச ராமானுஜன்
உலகளாவிய அளவில் இந்திய நாட்டின் அடையாளமாக இருப்பதும் , இந்தியர்கள் கணிதத்தில் மேம்பட்டவர்கள் என்னும் கருத்தை நிலை நிறுத்துவதும் ஸ்ரீனிவாச ராமானுஜன் என்ற ஒற்றை மனிதர். டிசம்பர் 22 1887 அன்று பிறந்த ராமானுஜனின் 125வது பிறந்த தினத்தை இந்தியா மட்டுமல்லாது மற்ற நாடுகளிலுள்ள கணிதத்துறையைச் சார்ந்த அனைவரும் போற்றி க் கொண்டாடினர். சென்ற ஆண்டை “நாட்டின் கணித வருடம்” என்றும் டிசம்பர் 22ம் தேதியை “நாட்டின் கணித நாள்” என்றும் அறிவித்தது இந்திய அரசாங்கம். ஈரோட்டில் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2
முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் […]
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 3
”ஆண்டவன் எங்கே இருக்கிறான்?” நாத்திகருக்கும் எழும் நியாயமான கேள்வி. ஞானிகள் பலரும் பல விதங்களில் விடையறிந்திருக்கிறார்கள். இந்த மகாப் பெரிய தத்துவத்தை நம்போல் சாதாரணருக்கும் விளங்கும் வண்ணம் தெள்ளத் தெளிவாக விடையளிக்கிறார் நம் கவியரசர். ”ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம் அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் – இதில் மிருகம் என்பது கள்ள மனம் – உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் – இந்த ஆறு கட்டளை […]
வரும் நாட்களில் ..
நாட்காட்டி தீர்ந்ததால் கரைந்தே
நரைகூட்டிக் காட்ட முனைந்தே
நாடகத் திரையென விழுந்தே
நொடியில் முடிவதோ கடந்தாண்டு?
வாங்க ஃப்ரீயா பேசலாம்
”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.” “ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?” “என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..” “அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத […]
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
அரசியல் சாணக்கியர் என்று பலரால் அழைக்கப்பட்ட ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரி பிறந்தது 1878ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 10ம் நாள். இவர் அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார். சமஸ்கிருத பண்டிதரான அவர் தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப்படிப்பு ஓசூரில் துவங்கியது. படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் […]







