\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

அமெரிக்காவிலும் சாதி…

அமெரிக்காவிலும் சாதி…

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]

Continue Reading »

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]

Continue Reading »

வாலி

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
வாலி

வில்லாடி வெல்ல முடியாததை ஒளித்து மறைந்தாடி வதைத்தாய் வாலியை அன்று! சொல்லாடி வெல்ல இயலாததை நினைத்து நோயாடிக் கொண்டாயோ வாலியை இன்று? விண்ணுலகில் வாழ்த்திசைக்க இசை வித்தகரை வரிந்து வாரங்களாகவில்லை! விளைந்த சோகம் விலகுமுன், அவர்உனை வாழ்த்தும் பாடலுக்கு வரியெழுத விரைந்தழைத்தாயோ எங்கள் வரகவியை? தரைமேல் பிறந்து தண்ணீரில் மிதந்தான்! மனம்போன போக்கிலே மனிதனவனும் போனான்! அளவோடு ரசித்து அளவின்றிக் கொடுத்தான்! ஊனக்கண்ணால் பார்த்து யாவும் குற்றமென்றாயே! மெய்யென்று மேனியை யார் சொன்னது? மூன்றெழுத்து மூச்சு முடிந்தாலும் […]

Continue Reading »

ஓய்வு

Filed in இலக்கியம், கதை by on August 7, 2013 4 Comments
ஓய்வு

”கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா பிரவர்த்ததே உத்திஷ்ட நரஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமான்மிகம்” தெய்வீக த்வனியில் எம். எஸ். சுப்புலக்‌ஷ்மி அவர்கள் டேப் ரிகார்டரில் பாடிக் கொண்டிருக்க, என்றைக்கும் போல் அன்றைக்கும் அதிகாலையில் எழுந்து, கிணற்றில் தண்ணீர் இறைத்து கிணற்றடியைக் கழுவி விட்டுக் கொண்டே குளித்து முடித்தார் கோவிந்த ராஜய்யர். பாதிக் குளியலில் துவங்கிய மந்திர உச்சாடனங்கள் பூஜை அறையைச் சுத்தப் படுத்தும்பொழுதும்  தொடர்ந்து, சாமிப் படங்களிலிருந்த நேற்றைய பூமாலைகளை அகற்றுகையில் உடன்வந்து, தீபம் ஏற்றுகையில், ஊதுபத்திக் […]

Continue Reading »

கனவு மெய்ப்பட வேண்டாம்

Filed in இலக்கியம், கதை by on August 7, 2013 2 Comments
கனவு மெய்ப்பட வேண்டாம்

பிரீமியர் டைட்டில் கம்பெனியில், கடைசிப் பக்கத்தில் கையெழுத்துப் போட்டு முடித்தான் தினேஷ். “எக்ஸ்செல்லன்ட … யூ ஆர் டன் வித் ஆல் சைனிங்க்ஸ் .. யுவர் ஹவுஸ் இஸ் சோல்ட் அண்ட் க்ளோஸ்ட் நவ் .. ஹியர் இஸ் யுவர் செக் ..” எனச் செக்கைக் கொடுத்தாள் லிண்டா. செக்கை வாங்கிப் பார்த்தான். “யூ கேன் கிவ் த கீஸ் டு ஹிம்” எனச் சொல்லிக்கொண்டே அனைத்துக் காகிதங்களையும் ஒரு நீளமான கோப்பில் போட்டு, தினேஷிடம் கொடுத்துவிட்டுக் […]

Continue Reading »

நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா

நேர்மைக்கு ஒரு பாராட்டு விழா

தமிழ்நாட்டில், ஜெயங்கொண்டம் கரடிக்குளம் பகுதியைச் சேர்ந்த நீலமேகம், தினமலர் பத்திரிகை ஏஜெண்டாக இருந்து வருபவர். இவர் பேப்பர் விநியோகித்துக் கொண்டிருந்த போது, அந்தப் பகுதியில் கிடந்த ஒரு பையில் ரூ. ஒரு இலட்சத்து 53 ஆயிரத்தை கண்டெடுத்தார். உடனே ஜெயங்கொண்டம் போலீஸில் பணத்தை ஒப்படைத்தார். பின்னர் பணம் உரியவரிடம் சேர்க்கப்பட்டது. இதற்காக நீலமேகத்தின் நேர்மையை பாராட்டும் வகையில் கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி, விழா ஒன்றை நடத்தியது. கல்லூரியின் தாளாளர் க. செங்குட்டுவன் அவர்கள் […]

Continue Reading »

நட்பு

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
நட்பு

உடுக்கை இழந்தவன் கைதானோ – உள்ளக் கிடக்கை உணர்ந்தவன் அவன்தானோ படர்க்கை நிலையினில் வாழ்ந்திடிலும் நெஞ்சப் பதைப்பை உணர்ந்திடும் செவிதானோ!   இடுக்கண் களைவானோ இடித்து உரைப்பானோ எடுத்த வினைகளெலாம் எதிர்த்து வெற்றியுற மடுத்த செவிகளுடன் மரணம்வரை வருவானோ அடுத்த அன்னையென அருகிருக்கும் நட்பவனோ!!! – மதுசூதனன் வெ. ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ அவிழும் உடுப்பணிந்த அந்தக் காலத்தில்  அமிழ்தும் இருந்தது நீயுரைத்த நட்புறவில்! அழிந்துவரும் இன்றைய அவசரக் கோலத்தில்  அழகான அவ்வுறவுஇல்; அவிழா உடையணிகிறோம்! – ரவிக்குமார் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ […]

Continue Reading »

லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

லம்பேர்ட்டனில் பண்டைய இரும்புத்தொழில்

இரும்புத் தாதுப் பொருள் பண்டையத் தமிழர் நாகரீகத்தில் இடம்பெற்ற முக்கியமானதொரு உலோகம். மினசோட்டா மாநிலமும் சென்ற இரண்டு நூற்றாண்டுகளில் மிகப்பெரிய இரும்புத்தாதுப் பொருள் அகழ்வுப் பிரதேசமாக இருந்து வருகிறது. தமிழ் வரலாற்றிலும் பாண்டிய தொன்மை காலத்தை  இரும்பு காலமாக அகழ்வாராய்ச்சியாளர்கள் வகுத்து எமது தமிழ் நாகரீகத்தை படிக்கிறார்கள். இயந்திரமயமாக்கபட்ட நகர வாழ்க்கையில் நம்மில் பலருக்கு இரும்பினால் ஆன தளவாடங்களை வாங்கத் தெரியுமே தவிர அவை எவ்வாறு உருவாக்கப் பட்டன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. என்னதான் யூடியூப்பிலே கானொளியாகப் […]

Continue Reading »

அன்னை மண்ணே…

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 2 Comments
அன்னை மண்ணே…

அன்னை மண்ணே. அன்னை மண்ணே! சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா? கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய் எங்கள் வாழ்க்கை போனதம்மா வலிகள் சுமந்து புது வழிகள் தேடி விழிகள் அலைவதேனோ – எங்கள் மொழிகள் இழந்து மௌனியாகி வாயும் மூடியதேன்? யுத்தம் விளைந்த பூமியில் நாங்கள் செத்துப் பிழைக்கின்றோம் – தினம் ரத்தம் சிந்தி கொட்டும் போர் மழையில் செத்து மடிகின்றோம்! உண்ண […]

Continue Reading »

கடவுள்

Filed in இலக்கியம், கவிதை by on August 7, 2013 1 Comment
கடவுள்

கடவுள் என்றுண்டோ கற்பனை அதுதானோ கருத்துத் தெளிவதோ கலங்கிய குளமதோ கனவினில் உறைபவனோ கருத்தினை உரைத்தவனோ கதிரவனாய் ஒளிர்பவனோ கருஇரவில் கரைந்தவனோ கருணைக் கண்களோ கரம்மீது வாட்களோ கன்னியின் வடிவமோ கட்டிளங் காளையோ கருப்பு வண்ணமோ களைமிகு நல்லுருவமோ கங்கைத் தலையனோ கயலவள் மறுபாதியோ கன்னிகள் கேள்வனோ கற்பினுக் கரசனோ கனகத்தின் அதிபனோ கந்தலுடை யாசகனோ கள்வனின் காதலனோ களம்கண்ட காவலனோ கதைபல கொண்டவனோ கதைக்கவொண்ணா நிஜமவனோ கடவுள் ஒன்றுண்டோ கண்டவர் எவருளரோ கண்டிலாப் பொருளன்றோ கருத்தினில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad