\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஆட்டிஸம் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments
ஆட்டிஸம் – பகுதி 3

(ஆட்டிஸம் – பகுதி 2) இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி  பார்க்கலாம்.     அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள் பயோமெடிக்கல் சிகிச்சை முறை பொருத்தமான உணவு வகைகள் ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.  முதலில் […]

Continue Reading »

“குத்துக்கல்…!”

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments
“குத்துக்கல்…!”

அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]

Continue Reading »

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4

(பகுதி 3) எம்.எஸ்.வி. என்ற மாமேதை படைத்த இசைச் சாம்ராஜ்யத்தில் இறைந்து கிடக்கும் நவரத்தினங்கள் தான் எத்தனை? மேலாகப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் புலப்படாத பல நுணுக்கங்கள் கவனத்துடன் அணுகினால் ஆச்சரியமேற்படுத்துகின்றன. தோண்டத் தோண்ட பொங்கி வரும் இசை ஊற்றில் தான் எத்தனை பாவங்கள், ராகங்கள். உணர்வுப்பூர்வமாக காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, வீரம், ஆற்றாமை என்று மட்டுமே மேலோட்டமாக அவற்றைப் பிரித்துவிட இயலாது. ஒரு சில கடடுரைகளில் அவரது இசைச் சிறப்புகளை விவரித்துவிடலாம் என்று […]

Continue Reading »

மழைத் துளிகள்

Filed in இலக்கியம், கவிதை by on December 28, 2015 0 Comments
மழைத் துளிகள்

மழையின் கேள்வி !!!

விவசாயி :
வானம்
மும்மாரி பொழிய விதைத்தவன்
தொழுதான் …!!!!

மழை :
டேய் மானிடா…..
நீ என்று தான்
என்னைப் போற்றுவாய்?
நான் பெய்யனப் பெய்தாலும்
வைகிறாய் ; பெய்யாமல் பொய்த்தாலும் வைகிறாய் .
என் செய்வேனடா …?

Continue Reading »

எசப்பாட்டு – ஆண்களின் அவலம்

Filed in இலக்கியம், கவிதை by on December 28, 2015 1 Comment
எசப்பாட்டு – ஆண்களின் அவலம்

தேர்வு பலர் எழுதினாலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பது தேன் போன்ற மகளிரே தேடிப் பார்த்துப் புடிச்சாலும் தேசம் முழுதும் சலிச்சாலும் தேருவது ஆண் மகனின் தேக்க நிலை எங்குமே ! தேங்கும் நிலை தவிர்த்து தேம்பி அழுவது தொலைத்து தேர்ச்சி பெறுவது எந்நாளோ? வெ/ மதுசூதனன்.  

Continue Reading »

யார் அந்த இராவணன் பகுதி – 3

Filed in இலக்கியம், கட்டுரை by on December 27, 2015 0 Comments
யார் அந்த இராவணன் பகுதி – 3

(பகுதி – 2) இராவணன் எப்படி அரக்கன் ஆக்கப்பட்டான் இராவணன் என்பதற்குப் பேருரிமையுடையவன் என்றும் பேரழகன் என்றும் பொருள் உண்டு. “இரா”  என்றால் ‘இருள்’ அல்லது ‘கருமை’ என்பது பொருளாகும். இருள் போன்ற கரிய நிறத்தினை உடையவனாதலால் இராவணன் (இராவண்ணன்) என அழைக்கப் பட்டான். இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை எனும் அளவிற்குச் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான். கதைக்காகத் தமிழ் அரசனான இராவணனை அப்படிக் காட்டியிருந்தாலும் அவனின் வீரம் என்றுமே போற்றுதலுக்குறியது. மாற்றான் […]

Continue Reading »

மாரியால் மாறினோம்

Filed in இலக்கியம், கவிதை by on December 27, 2015 2 Comments
மாரியால் மாறினோம்

மரத்துப் போன ஜனங்கள்
மடங்கிச் சுருங்கிய மனங்கள்
மானுடம் மறந்த தன்னலம் ; யாவும்
மாறிடக் கண்டோமே மாரியால்!!

மண்டியிருந்த பேதங்கள் மக்கிப் போயின!
மதர்த்திருந்த மதங்கள் மரித்துப் போயின!
கண்டறியா அண்டைமனிதர் கடவுளாயினர்;
கடல்கடந்த அன்னியமனிதர் வள்ளலாயினர்!

Continue Reading »

சம்மதம் முதல் 5 நிமிடங்களில்

Filed in இலக்கியம், கட்டுரை by on December 27, 2015 0 Comments
சம்மதம் முதல் 5 நிமிடங்களில்

Category – career, business, personal development அரட்டைப் பேச்சிற்கும், அவசியமான வர்த்தகப் பேச்சிற்கும் வித்தியாசம் தெரியாமல் அவலப்படுபவர்கள் பலர். இது தொழிநுட்பத்துறையிலுள்ளோர்க்கு மாத்திரம் உள்ள பிரச்சனையல்ல, இது விளம்பரம், விமர்சனம் ஏன் விற்கும் தொழிலில் உள்ளவரும் அவர்கள் காரியங்களில் மேம்படவேண்டிய அறிந்து கொள்ள வேண்டிய விடயம். தமிழில் ஒரு பழிமொழி ஒன்றுண்டு. எல்லாம் தெரிந்த பல்லி கூழ் பானைக்குள் விழுவதைப்போல. ஊர்ப்புறங்களில் பல்லியின் சத்தம் பார்த்து ஜோஸ்யம் சொல்வார்களாம். ஆனால் நாட்டுப்புறத்தில் அடுக்களையில் திறந்திருக்கும் பானையில் […]

Continue Reading »

சமத்துவம்

Filed in இலக்கியம், கதை by on December 27, 2015 0 Comments
சமத்துவம்

அதிகாலை 5 மணி…… என்றும் போல் அன்றும் கணேஷின் வீடு முழுவதுமாக எழுந்திருந்தது. அம்மா சரஸ்வதி எழுந்து படுக்கையை மடித்து வைத்துக் கொண்டிருந்தார். கணேஷின் அப்பா கோவிந்தராஜ ஐயர் எழுந்து குளியலறைக்குச் சென்று குளியலைத் தொடங்கியிருந்தார். கணேஷ் ட்ராக் பேண்ட் டி. ஷர்ட் சகிதமாக ஹாலில் அமர்ந்து ஷூ மாட்டிக் கொள்ளத் தொடங்கியிருந்தான். வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் நடந்தால் மெரீனா பீச், அதில் தினமும் ஜாகிங்க் செய்வது அவனுக்கு மிகவும் பிடித்தமான வழக்கங்களில் ஒன்று. தங்கை […]

Continue Reading »

ஒரு துளி கண்ணீர்

Filed in இலக்கியம், கதை by on December 27, 2015 2 Comments
ஒரு துளி கண்ணீர்

“அம்மா சீக்கிரம் கிளம்பணும். எனக்குப் பதினோரு மணிக்கு விசா interview”. “ஏம்பா சேது உனக்கு இந்த விசா கிடைச்சா எங்கள விட்டு அமெரிக்கா போயிடுவியா?” அம்மா கண்களில் கண்ணீர் தளும்பக் கேட்டாள் . சேது சட்டையை அயர்ன் செய்தபடி, “அம்மா திரும்பியும் அழாதே. நான் ரெண்டு வருஷம் தான் போகப் போறேன். எங்க ப்ராஜெக்ட் முடிஞ்சதும் திரும்பி வந்துடுவேன். ரெண்டு வருஷம் நாம சேர்க்கற பணம் புவனா கல்யாணத்துக்கு வெச்சுக்கலாம் “. “கடவுளே, காசுக்காக என் பிள்ளையை […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad