இலக்கியம்
தும்பிக்கை தரும் நம்பிக்கை
வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே இந்த வரிகளைக் கேட்டால் எல்லோருக்கும் அவரவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்றங்களும் இறக்கங்களும் நினைவுக்கு வரும். அதுவே இந்த வரிகளில் உள்ள உண்மைக்கு அத்தாட்சி. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதைப் பொறுமையுடனும் மனத்தெளிவுடனும் எதிர்க்கொண்டால் தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழி கொடுக்கும். பொறுமையும் மனத்தெளிவும் எளிதில் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெய்வபக்தி இதற்கு பெரிய அளவில் உதவுகிறது. எந்த ஒரு காரியம் துவங்குவதற்கு முன்னர்ப் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11
(பகுதி 10) முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, […]
பேச்சே எங்கள் மூச்சு
உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13) எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் புலத்தில் எந்தவிதமான சிக்கலுமின்றி உறவுகளுடன் வாழக்கூடிய சூழல் இருந்திருந்தால் புலம்பெயரும் தேவை இருந்திருக்காது. யுத்தம், உழைப்பு ஆகியன ஒன்று சேர்ந்து விரட்டியடிக்க, சமூகத்தில் தானும் உயர்வான நிலையினை அடைய வேண்டும் என்ற ஆவலுடன் பல இளைஞர்கள் கடல் கடந்து சென்று பணம் பெருக்கி வாழ்ந்தனர். ‘அகதி’ என்ற பதிவுரிமை பெற்றபின்னர் நல்ல வேலை, கை நிறையச் சம்பளம் எனக் கனவுகளுடன் அலைந்தனர். “அகதியென்று ஆன பின்னால் ……………………….. ‘ஐம்பதால் […]
மாலையில் யாரோ மனதோடு பேச
”மாலையில் யாரோ மனதோடு பேச” என்று பாடிக்கொண்டிருந்த யாழினியின் பாடலுக்குக் கடலலைகள் இசை மீட்டின. தனது காதலனின் வருகைக்குக் காத்திருக்கும் யாழினியைத் தென்றல் தழுவிக் கொண்டிருந்தது. அமுதனின் வருகையைக் கண்டதும் யாழினியின் விழிகள் சூரிய ஒளியாகப் பிரகாசித்தது. தனது வருகையின் ஆனந்தத்தால் யாழினியின் மனதில் பூக்கள் பூத்துக் குலுங்குவதை அவளது விரிந்த உதடுகளின் வழியாக கண்ட அமுதன் மயங்கி அவளைக் கட்டியணைத்தான். கடலலையின் ஓசையோடு தங்கள் காதல் காவியங்களைப் பேசத் தொடங்கினர் இந்த இளஞ்சிட்டுக்கள். நான்காம் […]
மரண தண்டனை
தவறும் மானுடர்க்குத் தண்டனை சரியோ
திருந்தத் தரும் சந்தர்ப்பம் பெரிதோ….
தரணியின் இண்டு இடுக்கெலாம் இடியாய்
தகர்த்திடும் விவாதம் இஃதே இன்று……
கடவுள் தந்த உயிரைப் பறிக்க
கனம் கோர்ட்டாருக்கு உரிமை உளதோ…
களவு செய்தாலும் கலகம் செய்தாலும்
கொடுந் தீவிரத்தால் கொலைகள் புரிந்தாலும்….
மரணம் மகத்தானது
மரணமே, நீ மரிக்க மாட்டாயா?
மண்டிக் கிடக்கும் ஊடக மெங்கும்
மடலாய்ப் பிறந்து மலையாய் வளர்ந்து
மனதை அரித்த மடமை வரிகள்!
உண்டோ இல்லையோ என்ற சர்ச்சையில்லை!
உயர்குலம் இழிகுலம் என்ற பேதமில்லை!
உலகில் பிறப்பது எதுவும் நிலையில்லை!
உன்னதத் தத்துவமிதை உணர்த்தா வேதமில்லை!
இலட்சிய சிகரம்
நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா? நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா? இறைவா நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும் இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக !!! பாரத ரத்னா, அறிவியல் அறிஞர், அரசியல் வாதி, தமிழ்க் கவிஞர், இளந்தலைமுறையினருக்குச் சிறப்பான ஒரு வழி […]
மினியாபோலிஸ் ஸ்கைவே – சமத்துவ நடைபாதை
சென்ற வருடம், ஆகஸ்ட் மத்தியில் வேலை மாற்றம் காரணமாக மினசோட்டா வந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், முதன்முதலாக இங்குள்ள அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் இருக்கும் இடம், மினியாபோலிஸ் நகர மத்தியில் டவுண்டவுனில். ஞாயிற்றுக் கிழமை சாயந்திர வேளையில், அடுத்த நாள் செல்லப்போகும் அலுவலகத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று காரை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜி.பி.எஸ் வழி காட்ட, அலுவலகம் அருகே சென்று, பிறகு பக்கத்தில் இருக்கும் ஒரு பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, மீண்டும் […]
எசப்பாட்டு – இரண்டாம் காதல்
உசுருக்கு உசுரா ஆச வச்சோம்
உறவா மாறிப்போக ஆச வச்சோம்
உடனே சேந்துவாழ ஆச வச்சோம்
உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்
உலகம் சுத்திவர ஆச வச்சோம்
உலவும் தென்றலாக ஆச வச்சோம்






