\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]

Continue Reading »

விநாயகர்ச் சதுர்த்தி

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
விநாயகர்ச் சதுர்த்தி

கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்

Continue Reading »

தனித் தீவு

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 2 Comments
தனித் தீவு

அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

Filed in இலக்கியம், கதை by on September 28, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 12

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் […]

Continue Reading »

எசப்பாட்டு – கேள்வி/பதில்

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
எசப்பாட்டு – கேள்வி/பதில்

முத்தான தமிழ்கொண்டு
முழுமூச்சாய்ப் பாட்டமைக்கும்
முடிவில்லா கவிக்கூட்டமதை
முனைப்புடனே வினவுகின்றேன்…….

முக்காலம் உணர்ந்திட்ட
முனிவர்களும் சீடர்களும்
முன்வாழ்ந்த கோடிகளும்
முன்னோர்கள் அனைவருமே

Continue Reading »

சீதா எலிய

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 0 Comments
சீதா எலிய

இலங்கையின் கண்டியில் உள்ள பெரதனியா தாவரவியல் பூங்கா மிக அழகான பூங்காக்களில் ஒன்று  பார்த்திபன் கனவு படத்தில் வரும் “ஆலங்குயில் பாடிவரும்….” என்ற பாட்டு இங்கேதான் படப்பிடிப்பு நடத்தியாதகச் சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள இன்னொரு மிகச் சிறப்பான தாவரவியல் பூங்கா நுவரேலியாவில் இருக்கும் “ஹக்கல” என்ற இடத்தில் உள்ளது. இந்தப் பூங்காவுக்கு மிக அருகில்தான் சீதையம்மன் கோவில் ஒன்று உள்ளது. உயர்ந்த மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இது அமைக்கப்பட்டுள்ளது. “சீதாஎலிய” என்பது அந்த ஊரின் பெயர். இராவணன் […]

Continue Reading »

லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 1 Comment
லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி

மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்‘திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். ‘என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?’ என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களில் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color […]

Continue Reading »

எச்சம் (ஒரு சிறு விளக்கம்)

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 0 Comments
எச்சம் (ஒரு சிறு விளக்கம்)

தமிழில் சொல்லோ, சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை “எச்சம்” என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது. எச்சத்துக்குத் தொல்காப்பியம் தரும் குறியீடு ‘’எஞ்சுபொருட்கிளவி ‘’ என்பதாகும். பொருள்எஞ்சிநிற்கும் சொல் என்பது இதன் விளக்கம். பிரிநிலை எச்சம் வினை எச்சம் பெயர் எச்சம் ஒழியிசை எச்சம் எதிர்மறை எச்சம் உம்மை எச்சம் என எச்சம் சொல் எச்சம் குறிப்பு எச்சம் இசை எச்சம் எனப் பத்து வகையான எச்சங்களைத் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. “பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை எதிர்பறை […]

Continue Reading »

உலகம்

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
உலகம்

இயற்கையெனும் இனிய அன்னை
இளம்பொன் சூரியக்கதிர் கொண்டு
இருள்நிறைக் கருப்பைக் கிழித்து
இன்னொரு நாளை ஈன்றெடுத்தாள்!

Continue Reading »

வேலை

Filed in இலக்கியம், கதை by on August 31, 2015 0 Comments
வேலை

கொரியர் பையன் கொடுத்துவிட்டு போன கவர் சாவித்ரியின் அருகில் கிடந்தது. சாவித்திரி அதை கவனித்ததாக தெரியவில்லை . பார்வை எங்கோ நிலைத்திருக்க சிந்தனை  அப்பாவை சுற்றி வந்ததது. அப்பா எப்படி இருந்தார் இந்த வீட்டில் எல்லாமும் அவரே என்ற நிலை… ஆறு மாதத்துக்கு முன் அந்த விபத்து அவரை அள்ளிக்கொண்டு  போனதும் குடும்பம் தத்தளித்து விட்டது .இன்றோடு ஆறு மாதம் முடிந்து விட்டது . அப்பாவின் மறைவு  ஏற்படுத்திய தாக்கம் அவளிடம் இருந்து இன்னும் மாற வில்லை… […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad