\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

ஆட்டிஸம்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 3 Comments
ஆட்டிஸம்

வாழ்க்கையில் இதற்கு முன் கேட்டிராத வார்த்தை… கேட்ட முதல் முறை எனக்குத் தோன்றிய உணர்வு, “இது கடைசி முறையாக இருக்காது என்பதே”…  புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே, ஆனாலும் கற்றுக் கொண்டு சாவதானமாய் அடுத்த விஷயத்திற்குப் போய்விடும் ஒரு வார்த்தையல்ல “ஆடிஸம்” என்பதை நானும் எனது மனைவியும் மிகவும் விரைவிலேயே உணர்ந்தோம். எங்களின் வாழ்வின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், இரண்டறக் கலக்கவிருக்கும் ஒரு வார்த்தை, ஒரு வாழ்க்கை என்பதை முதல் முறையாகக் கேட்கையில் […]

Continue Reading »

மினசோட்டாவின் கதை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
மினசோட்டாவின் கதை

ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும் மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும். அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த யாவற்றையும் குளிரில் உறைத்து […]

Continue Reading »

எசப்பாட்டு

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 0 Comments
எசப்பாட்டு

மண்ணுக்கும் மரத்துக்கும் தாகமுன்னா
மழை கொட்டியே தாகத்தைத் தீக்குதடி!
வண்டுக்கும் தும்பிக்கும் தாகமுன்னா
வண்ண மலரும் தேன்தந்து தீக்குதடி!

Continue Reading »

தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 0 Comments
தமிழர் கை வைத்தியக் குறிப்புக்கள்

அசீரணம் – ஓமம்(basil) அரைத்துப் பசும்பாலிலோ, அல்லது பச்சடியாகவோ உட்கொள்ளலாம். அத்துடன் 2 அவுன்ஸ் தேனையும் தண்ணீரில் கலந்து சாப்பிடலாம். கண்ணீர் வடிதல் – இதைத் தவிர்க்க வெறும் வயிற்றில் பாதாம் பருப்பை (Almonds) மெதுவாக மென்றுத் திண்ணலாம். காது வலி  – மூன்று உள்ளிப்பூண்டு நகங்கள் வாதுமை (Almond) ஆகியவற்றை எண்ணெயில் அவை கருகும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். தேவையான நேரம் 3 சொட்டுக்களை வலிதரும் காதில் விட்டுக்கொள்ளவும். குமட்டல் (Feeling to vomit )– […]

Continue Reading »

அந்தமும் ஆதியும்

Filed in இலக்கியம், கவிதை by on October 25, 2015 1 Comment
அந்தமும் ஆதியும்

இல்லாத பலதை இலக்காய்க் கொண்டு
கொண்டதை யெல்லாம் எளிதில் மறந்து
மறக்க வேண்டியதை மலையெனச் சுமந்து
சுமையாகிப் போனதை எண்ணி வருந்தி

Continue Reading »

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1

Filed in இலக்கியம், கட்டுரை by on October 25, 2015 2 Comments
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1

Fusion எனும் ஆங்கில வார்த்தைக்கு இணையத்தில் பொருள் தேடிய போது இணைவு, கலவை எனப் பல தமிழ்ச் சொற்கள் கிடைத்தன. ஒரு இணையப் பக்கத்தில் இந்த ஆங்கிலச் சொல்லுக்கு உருகுதல் என்று பொருள் தந்திருந்தார்கள். மறைந்த இசை மேதை M.S.V. யின் பாடல்களைப் பற்றிய தொடரின் ஒரு பகுதியாக Fusion இசைப் பாடல்கள் பற்றிய இக்கட்டுரைக்கு இது மிகப் பொருத்தமான சொல்லாகப் பட்டது. Fusion என்பது இரண்டு வகையான இசைப் பகுப்புகளை ஒன்றாக உருகியோடச் செய்வதாகும். ஆப்பிரிக்க […]

Continue Reading »

கொலைபேசி

Filed in இலக்கியம், கதை by on October 25, 2015 0 Comments
கொலைபேசி

உடல் எடையைக் குறைக்கும் குறிப்புகள் ; பல்லை வெண்மையாக்க வழிவகைகள்; விக்டோரியா சீக்ரெட்டின் ‘புஷ் அப்’ ரகசியங்கள்; விரல் நகங்களில் விரிசல் வராமல் எப்படிப் பார்த்துக் கொள்வது; தலைமுடியைச் சுருட்டையாக்குவது எப்படி; சில கசமுசா படங்கள்; பலான வீடியோக்கள் ; டாம்பான், ரெஸ்டாரண்ட் கூப்பன்கள் இத்யாதி இத்யாதி விஷயங்கள் தான் கிடைத்தன… ஏகப்பட்ட வாட்ஸ்அப், டெக்ஸ்ட் மெசேஜ் எனப் பல பேருடன் தகவல் பரிமாறல்கள் .. அலுப்பாக இருந்தது வம்சிக்கு.. நான்கு மணி நேரமாகத் தேடி, கடந்த […]

Continue Reading »

கிழித்தெறியப்படும் கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on September 28, 2015 0 Comments
கிழித்தெறியப்படும் கவிதைகள்

இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்

Continue Reading »

விலையில்லா விளையாட்டு!

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 2 Comments
விலையில்லா விளையாட்டு!

நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை. இதைக் காணுகையில் […]

Continue Reading »

இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 28, 2015 1 Comment
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad