\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

சத்யா நாதெல்லா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
சத்யா நாதெல்லா

ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]

Continue Reading »

பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.

Continue Reading »

அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments
அமெரிக்காவில் தெருக்கூத்தை மேடையேற்றிய நாயகன்

2014ஆம் ஆண்டு மின்னசோட்டா தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாய் இருந்த நிகழ்ச்சி தெருக்கூத்து. ஒரு மணிநேரம் நடந்த இந்தக் கூத்து நிகழ்ச்சி பெரியோர் முதல் சிறியோர் வரை எல்லோரையும் கவர்ந்ததாக அமைந்திருந்தது. மின்னசோட்டாவிலுள்ள வளங்களை மட்டும் வைத்துக் கொண்டு சாத்தியப்படாத ஒன்றை சாத்தியப்படுத்திய உயர்திரு சச்சிதானந்தன் அவர்களுடன் ஒரு நேர்முக பேட்டி நடத்தினோம். கேள்வி : வணக்கம் சச்சிதானந்தன் வெங்கடகிருஷ்ணன், உங்களைப் பற்றியும் நீங்க வளர்ந்த சூழல் பற்றி எங்கள் பனிப்பூக்கள் வாசகர்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். […]

Continue Reading »

நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
நீர்க்கசிவுப் பாதிப்பு செலவை நிவர்த்தி செய்தல்

(Household Water Damage Prevention) ஆயிரம் ஆயிரமான நீர்ச்சுனைகளும் ஆறுகளும்  காணப்பெறும் அழகிய மினசோட்டா மாநிலத்தில் வெப்பதட்ப காலவித்தியாசங்களும் வித்தியாசமாகவே காணப் பெறுகின்றன. இதன் காரணமாக இவ்விடம் மக்களும் வதிவிட கட்டிடப் பொருட்கள் நம்மில் பலர் பிறந்த பூமியில்  கிடைக்கும் விதத்திலிருந்து வித்தியாசமாகக் காணப்படுகிறது. மினசோட்டா மாநிலத்தில் வதிவிடம் வாடகைக்குப் பெறினும், வீட்டு உரிமையாளராக இருப்பினும் நீர்க்கசிவு, நீர்த்தேக்கத்தால் ஆகும் மிகுந்த செலவான பாதிப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என்று அறிந்திருப்பதும் சிக்கனம் தரும் சிந்தனையே. பிரதானமாக […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

பகுதி 2 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் […]

Continue Reading »

தவிக்கும் தமிழன்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 3 Comments
தவிக்கும் தமிழன்

சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]

Continue Reading »

எசப்பாட்டு – காதல்

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 10 Comments
எசப்பாட்டு – காதல்

காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]

Continue Reading »

பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]

Continue Reading »

காதலர் தினம்

Filed in இலக்கியம், கதை by on February 25, 2014 2 Comments
காதலர் தினம்

1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்‌ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]

Continue Reading »

கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

கனிபோன்ற காதல் காதலைப் பாடுவதில் தனக்கு எவரும் நிகரில்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன். உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கையுணர்வு காதல். கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். காதல் கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? இது போன்ற கற்பனைகள் தனது காதலையும், தான் காதலிப்பவரையும் எப்படியெல்லாம் வர்ணித்து அழகு செய்கின்றன? காதல் கொண்ட சாமானியனுக்கே கவித்துவம் பிறக்குமென்றால், கவியரசரின் புலமையையும், கற்பனையையும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad