\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

நிக்கொட்டீன் (Nicotine) போதைப்பொருளானது புகைத்தலின் போது உட்கொள்ளப்படும் போதைப்பொருளாகும். இது மன அழுத்தம், உளைச்சலை உண்டு பண்ணும் உடல் உட்சுரப்பிகளில் (Hormones) உடன் கலந்து மூளையின் இரசாயன அமைப்பை மாற்றி மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறது. தலைப்புச் செய்தி – புகைப்பிடித்தல் மதுபானத்தையும் அருந்தத்தூண்டும் என்று உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். நவீன மயமான இருப்பத்தியோராம் நூற்றாண்டில் மனித வர்க்கம் புதுமை பலவற்றைச் சாதிப்பினும் சுகாதார ரீதியில் பார்க்கும் போது பழமையான சில கடைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடவும் தொடர்ந்தும் பாடுபடுகிறது எனலாம். […]

Continue Reading »

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், […]

Continue Reading »

மேய்ப்பனை இழந்த மந்தைகள்

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
மேய்ப்பனை இழந்த மந்தைகள்

காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.

Continue Reading »

வயற்காற்று (பாகம் – 01)

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]

Continue Reading »

விதி

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
விதி

விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!

Continue Reading »

என் காதலே

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
என் காதலே

காதல் காவியம் படைத்தேன் உனக்கு
கண்ணே அருகில் வாராய்
உயிரெனும் ஓவியம் வடித்தேன் உனக்கு
உயிரே நீயும் பாராய்

Continue Reading »

காதலியே …

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 3 Comments
காதலியே …

காரிகையே எந்தன் காதலியே
கண்ணில் ஏனிந்த காந்தம் கொண்டாய்?
கணைத் தொடுத்தாய் எனைக் கடைந்தெடுத்தாய்
காதல் கலையெனப் பெயரும் தந்தாய்-உன்
விழி யசைவில் எனை வீழ்த்திச் செல்லும்
வித்தையை எங்கு கற்றாய்?

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 3 Comments
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-4

உலகின் மூலைமுடுக்கெல்லாம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்று வசித்து வருகின்றபோதிலும் அவர்கள் அங்கும் நிம்மதியுடன் வாழ்கின்றனரா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. எண்ணற்ற கனவுகளுடன் ஊரில் திரிந்தவர்கள் ‘அகதி’ என்ற பட்டம் சூட்டப்பட்டு நாடுநாடாக அலையும் போது அவர்களுடைய கண்முன் அசைகின்ற எல்லாவற்றிறும், தான் ஓர் ‘அகதி’ என்ற உணர்வைப் பெறுகிறான். இவை அவலநிலையின் உச்ச வெளிப்பாடுகளாகி அவர்களை எழுதத் தூண்டுகின்றபோது, இந்த அவல வாழ்வின் உணர்வுகள் அப்படியே கவிதைகளாகப் புனையப்பட்டன.

Continue Reading »

சத்யா நாதெல்லா

Filed in இலக்கியம், கட்டுரை by on February 25, 2014 0 Comments
சத்யா நாதெல்லா

ஆந்திர மாநிலம் ஹைதராபாதை பூர்விகமாகக் கொண்ட, இந்திய அமெரிக்கரான, சத்யா நாதெல்லா மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1969 ஆம் ஆண்டு பிறந்த சத்யா, ஹைதராபாத்தில் பேகம்பேட் அரசினர் பொதுப்பள்ளியில் ( இதே பள்ளியில் படித்த சாந்தனு நாராயண் தற்போது அடோபி நிறுவனத்தின் செயல் அதிகாரியாக உள்ளார்) படித்தவர். மங்களூர் பல்கலைக் கழகத்தில் பி. டெக். (மின்பொறியியல்) முடித்த சத்யா, பின்னர் அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் கணிப்பொறி அறிவியல் முதுகலைப் பட்டமும், சிகாகோ […]

Continue Reading »

பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

Filed in இலக்கியம், கவிதை by on February 25, 2014 0 Comments
பாலுமகேந்திரா – ஒரு பொக்கிஷம்

ஐயா நீங்கள் இறந்து விட்டதாகப்
பலர் பேசிக்கொள்கிறார்கள்.
பாசாங்கற்ற பன்முகக் கலைஞனே
பூவில் இருந்து பிறந்த தேனே
சிப்பிக்குள் உதித்த முத்தே
ஐயா உங்களைப் பின்தொடர்ந்தவர்கள்
சிகரம் காண ஊக்கம் தந்த ஏணி நீங்கள்.

Continue Reading »

ad banner
Bottom Sml Ad