\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

வலி சுமந்த பயணம்

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 0 Comments
வலி சுமந்த பயணம்

விழியிரண்டும் குழிவிழுந்து மொழியிழந்து முகம்வாடி
உடல் மெலிந்து தள்ளாடி நடைபோகும் பயணமிது…
ஊரிழந்து உறவிழந்து ஊணுறக்கம் தானிழந்து
உண்ணவழி ஏதுமின்றி கொடியதொரு பயணமிது…

Continue Reading »

கவித்துளிகள் சில…

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 0 Comments
கவித்துளிகள் சில…

அமாவாசை
சிதறிய நட்சத்திரங்களுக்குள்
செத்துக் கிடக்கிறது ஒரு நிலா.

கையடக்கத் தொலைபேசி
சட்டைப் பையில் பதுங்கியிருந்து
பணம் பறிக்கும் இரகசியக் கொள்ளைக்காரன்…

Continue Reading »

பயணங்கள் முடிவதில்லை!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 4 Comments
பயணங்கள் முடிவதில்லை!

“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல். “ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்” அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா. “ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப்  பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து […]

Continue Reading »

இந்தியப் பயணம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
இந்தியப் பயணம்

உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும். அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் […]

Continue Reading »

வாங்க ப்ரீயா பேசலாம் !!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment
வாங்க ப்ரீயா பேசலாம் !!

என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க.. ”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி. “காப்பி […]

Continue Reading »

ஏன் கடவுளே?

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 2 Comments
ஏன் கடவுளே?

கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற
கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற
கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட
கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…

Continue Reading »

கோமடீஸ்வரர்

கோமடீஸ்வரர்

1980 களில், பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆகாயத்தில் பறந்து கொண்டே மலர் தூவி வணங்கியது பெருமளவு விவாதத்திற்குள்ளானது நினைவிலிருக்கலாம். அந்தக் கோமடீஸ்வரர் சிலை அமைந்திருக்கும் ஷ்ரவணபெளகொளா (Shravanabelagola) செல்லும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. மதச் சம்பந்தமான காரணமெதுவுமில்லாமல், சாதாரணச் சுற்றுலாவாகத் தொடங்கிய இந்தப் பயணம் பாதித்த ஒரு சில குறிப்புக்களைப் பகிர்ந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். கர்நாடக மாநிலத்தில், பெங்களூர் நகரிலிருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் […]

Continue Reading »

மினசோட்டா ஆமிஷ் சமூகம்

மினசோட்டா ஆமிஷ் சமூகம்

மினசோட்டா ஆமிஷ் சமூகம் (Amish Community in Minnesota) மினசோட்டா மாநிலத்தின் தென்கிழக்கு  மூலையில் மாநில நெடுஞ்சாலை  52 யில், பிரஸ்டன்  (Preston) நகரத்துக்கும், புரொஸ்பர் (Prosper) நகரத்துக்கும்  குதிரை வண்டிகளுக்கென  அகன்ற பாதை அமைக்கப்பட்டிருப்பதை அவதானிக்கலாம். இந்தப் பகுதியில் அமைதியான எளிமையான, இயற்கையான விவசாயக் கிராமிய வாழ்க்கையை ஒற்றி வாழ்கிறது  ஐரோப்பியாவில் இருந்து குடியேறிய ஆமிஷ் சமூகம்.  ஹார்மனி (Harmony), மற்றும் காண்டன் (Canton) பகுதிகளில்,   ஆமிஷ்  சமூகத்தை சேர்ந்த ஏறத்தாழ 100 குடும்பங்கள் வாழ்கின்றனர். இவர்கள் 1970 […]

Continue Reading »

அமெரிக்காவிலும் சாதி…

அமெரிக்காவிலும் சாதி…

2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றில் இந்தியாவின் சாதி சமுதாயம் ‘இன வெறுப்பை” ஒட்டியது என்று பிரகடனப் படுத்தியது. இதற்கான குறிப்பை இந்த இணையதளத்தில் காணலாம்: https://www.cbc.ca/news/world/story/2007/03/02/india-dalits.html இந்திய அரசாங்கம் இந்தியாவின் சாதிகள் முறை இன வெறுப்பு அல்ல என்றும் சாதிகளையே அழித்து விட்டோம் என்று மறுத்துரைத்தது ஒரு தனிக்கூத்து. ஐ.நா.வின் மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு அறிக்கை https://www.hrw.org/reports/2001/globalcaste/ அதைச் சற்றுத் தள்ளி வைத்து நடப்புச் செய்திக்கு வருவோம். அமெரிக்காவிலும் சாதி உள்ளதா? என்று […]

Continue Reading »

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள்

இசையுலக இழப்புகள் இம்சித்துத் தொடர்கிறது .. இம்முறை நாம் இழந்தது இரு பெரும் கவிஞர்களை. எம்.கே. ஆத்மநாதன் தமிழ் திரையுலகம் எளிதாய் மறந்து விட்ட ஒரு பெயர். பாடலாசிரியர், இசையமைப்பாளர், இயக்குனர், கதாசிரியர் எனப் பல துறைகளில் பரிமளித்தவர். மிகக் குறைந்த பாடல்களே (120) எழுதி யிருந்தாலும் அனைத்துமே முத்தான பாடல்கள். உனக்காக எல்லாம் உனக்காக — (புதையல்) தடுக்காதே என்னை தடுக்காதே — (நாடோடி மன்னன்) இன்று போய் நாளை வாராய் – (சம்பூர்ண ராமாயணம்) […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad