\n"; } ?>
Top Ad
banner ad

கதை

எதிர்பாராத முடிவு !   

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 2 Comments
எதிர்பாராத முடிவு !   

               விநாயகர் படத்தின் அருகில்,  மாட்டியிருந்த அழைப்பு மணியின் சப்தம் கேட்டு வாசல் கதவைத் திறந்தேன்.   திறந்தவள் திகைத்தேன்.  முன் பின்  தெரியாத பெண் ஒருத்தி , என் எதிரே  நின்று கொண்டிருந்தாள்.  ‘என்ன ?’  என்பது போல் அவளைப்  பார்த்தேன்.  அவள் வெகு அலட்சியமாக “ உன்னால் ஒரு கொலை செய்ய முடியுமா ? “ என்று சம்மந்தமில்லாமல்  என்னைப் பார்த்துக்  கேட்டாள். நான் அவளைப் பார்த்து “ […]

Continue Reading »

சின்ன சபலம்

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 0 Comments
சின்ன சபலம்

மினியாபோலிஸ் நகர மையப் பகுதியில் இருந்தது அந்த லவ்ரி சந்து. மிகவும் குறுகலான ஒருவழிப் பாதை. தெருவின் ரெண்டு பக்கத்திலும் புராதனமான, பராமரிக்கப்படாத கட்டிடங்கள். காரை பெயர்ந்து சிதிலமடைந்து சிதைந்து போயிருந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளைப் பார்த்ததும் இந்தியாவின் ஹவுசிங் போர்ட் வீடுகள் நினைவுக்கு வந்தன விஸ்வாவுக்கு. இதை ஓரளவுக்கு எதிர்பார்த்துத் தான் தனது ஆடி காரை வீட்டில் வைத்துவிட்டு சாந்தியின் கரோலோவை எடுத்து வந்திருந்தான். ஜி.பி.எஸ். ‘யு ஹேவ் அரைவ்ட் அட் யுவர் டெஸ்டினேஷன்’ என்றாலும் அது […]

Continue Reading »

நிஜம் நிழலாகும்

Filed in இலக்கியம், கதை by on April 25, 2016 3 Comments
நிஜம் நிழலாகும்

“பெட்டி எல்லாம் எடுத்து வெச்சாச்சா ? கேள்வி கேட்டபடி நடந்து வந்தான் ராஜு . சந்த்யா ஆமோதிக்கும் விதம் தலையை அசைத்தாள் . அவனுடைய அடுத்த கேள்வி என்ன என்று அவளுக்குத் தெரியும். கேட்காமல் இருந்தால் நல்லது என்று மனதிற்குள் நினைத்தாள். “கேமரா எடுத்து வெச்சாச்சா?. சார்ஜ் போட்டாச்சா? “ பதில் சொல்லாமல் மழுப்ப நினைத்தாள் சந்த்யா . ஆனால் அவள் மௌனமே ராஜுவிற்கு இன்னும் ஆர்வத்தைத் தூண்டியது. “கேமரா எடுத்து வெச்சாச்சா? புதிசா வாங்கின DSLR […]

Continue Reading »

நிறமற்ற சினிமா

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நிறமற்ற சினிமா

படம் ஓடிக் கொண்டிருந்தது…. அது நிறங்களின் சிறகை, திரை தாண்டி துளிர்த்துக் கொண்டிருக்கிறதோ… என்றொரு சந்தேகம்… சற்று நேரம் வரை வரவில்லை.. என் கண்கள் எனக்கு முன்னால் சற்று வலது பக்கம் அமர்திருந்த அவளைக் காணும் வரை…எனக்கு, திரை தாண்டிய நிறங்களின் கூடு என் மேல் பொழிகிறதோ என்று தோன்றவேயில்லை.. மாயங்களின் வலையை நான் பின்னிக் கொண்டே இருப்பதற்குத் தகுந்தாற் போல… அவள் முகம் இன்னும் சற்று மெல்ல திரும்பி இருந்தது…..என் கண்கள் பாதி கன்னம் தெரிந்த […]

Continue Reading »

நாப்பதுக்கு மேலே…

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நாப்பதுக்கு மேலே…

ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]

Continue Reading »

முதுமையும் மழலையே

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 4 Comments
முதுமையும் மழலையே

அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான்.    “பத்ரி   எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு,    “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]

Continue Reading »

சாருலதா

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 2 Comments
சாருலதா

ஆண்டு 1940 : அதி காலைச் சூரியன் இன்று சோம்பலுடன் இருந்தான் போல. அந்த மார்கழிக் குளிரில் மேகப் போர்வையைக் கலைத்தபடி மெல்ல எழுந்தான். ஆனால் சாருவிற்கு முழிப்பு வந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். வெளியில் இருந்த சின்ன செடியில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தபடி படுத்திருந்தாள் சாரு. அந்த அதிகாலையில் சிறிய குருவி மெல்ல இலைகளில் இருந்த பனியை அருந்திய அழகு பார்க்க […]

Continue Reading »

ஆத்ம சாந்தி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 0 Comments
ஆத்ம சாந்தி

காஷ்மீர், அதற்கு இரண்டு தலை நகரங்கள். குளிர் காலத்தில் ஜம்மு மற்றும் வெயில் காலத்தில் ஸ்ரீநகர். அந்த ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்த்து விட்டுத் தன் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் செல்வம். பசி வயிற்றைக் கிள்ளியது. தால் ஏரிக்கு அருகிலிருந்த கடையில் சப்பாத்தியும், பன்னீர் சாமனும் வேண்டுமென்று சொல்லி விட்டு ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். நண்பன் சங்கரும், அவனும் குளிர்கால ஆடை ஏற்றுமதி வியாபாரம் செய்கிறார்கள். இன்று சங்கர் வியாபார விஷயமாக வேறு நண்பரைக் […]

Continue Reading »

மெழுகுவர்த்தி

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 1 Comment
மெழுகுவர்த்தி

அப்பா இப்பொழுதல்லாம் அடிக்கடி கனவில வருகிறார். கூடவே அம்மாவும். இயல்பாய் அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். பழைய காலத்தைப் பற்றிக்கூடப் பேசிக் கொண்டிருக்கிறோம். அவருடன் பணி புரிந்தவர்களைப் பற்றி, வேலை செய்யும் போது நிகழ்ந்த ஏதேனும் நிகழ்வுகள் பற்றி எனச் சாவதானமாக என்னுடன் உரையாடுகின்றனர். ஒரு சில நேரங்களில் ஏதோ சொல்ல வருகிறார் அது மட்டும் சரியாகக் கேட்க மாட்டேனென்கிறது. திடீரென விழிப்பு வரும்போது யாருமில்லாமல் மனசு கனத்துப் போகிறது. திரைப்படத்தில் மூன்று மணி நேரம் முடிந்த பின்னாலும் திரைப் […]

Continue Reading »

அவன் அவளில்லை

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 0 Comments
அவன் அவளில்லை

“எல்லாம் சரி… ஆனா நான் எப்டி….?” “ஏன் உங்களுக்கு என்ன குறைச்சல்….?” “ஹெலோ…. எல்லாமே குறைச்சல்தான்…. ஏதோ ஒரு நாளுக்குதான் நான் ஓகே… வாழ்நாள் எல்லாம் எப்படி…?” என்ற சாய்பல்லவி… தன்னையே ஒரு முறை குனிந்து ஒரு தாழ்வு மனப்பான்மையோடு பார்த்துக் கொண்டாள்……. “எல்லாம் சரியா வரும்… உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா… அதுதான் முக்கியம் பல்லவி….” என்றான்.. கண்களைப் பார்த்த… கெளதம்… “அது இல்ல கெளதம்… காதல், கல்யாணம்…. குழந்தை, குடும்பம்  இப்படி வெறும் ஆசைகள் மட்டுமே […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad