கதை
பிள்ளைக் கனி அமுதே

பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?” “சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?” “ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.” “சின்னப் […]
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 3

பகுதி 2 முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். காயமடைந்தவனுக்கு டாக்டர் தேசிகன், அவர் மகள் டாக்டர் புஷ்பா மற்றும் நர்ஸ் ரோஸி சிகிச்சை கொடுத்துக் கொண்டிருகிறார்கள். காயமடைந்தவன் […]
தவிக்கும் தமிழன்

சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]
காதலர் தினம்

1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 2

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் ஒருவன் இன்னொருவனைக் கத்தியால் குத்துவதைப் பார்க்கின்றனர். பேருந்திலிருந்து இறங்கி ஓடிச் செல்வதற்குள் குத்தியவன் ஓடிவிட, கணேஷும் சிதம்பரமும் மட்டும் காயமடைந்தவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். சிகிச்சை பெறுகையில் காயமடைந்தவன் கணேஷிடம் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றைக் கொடுக்க, அதில் ஒரு கொலை நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்யப் […]
செங்குளம்

சூரியன் மேற்கில் ஓடி மறைந்து கொண்டிருந்தது. நேரம் ஆறு ஆறரையைத் தாண்டியிருக்கும் என மனதில் நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன். பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் சத்தம் என் காதைப் பிளந்தது. அண்ணாந்து வானத்தைப் பாத்தேன். சிறு பறவைகள் கூட்டமாகப் பறப்பது போலவும்… காற்றில் உதிரும் இலவம் பஞ்சுக் கூட்டம் வானவெளியில் சல்லாபம் புரிவது போலவும் ஒன்றுடன் ஒட்டி உரசியபடி வானத்தில் இருந்து கொத்துக் கொத்தாக எண்ணுக்கணக்கற்ற துண்டுப் பிரசுரங்கள் தரையை நோக்கி வந்துகொண்டிருந்தன… கடும் போருக்கு […]
செட்டிநாட்டு சம்பாஷணை

”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]
இருபத்தி நான்கு மணி நேரம்

முன்குறிப்பு: ஆங்கிலத் தொலைக் காட்சித் தொடர் “24” பார்த்திருப்பீர்கள். அதனை அடியொற்றித் தமிழில் ஒரு தொடர்கதை எழுதலாமென்ற யோசனை இன்று காலை படுக்கையை விட்டெழும் பொழுது தோன்றியது. உடனே செயல்படுத்தத் துவங்கினோம். அந்த ஆங்கிலத் தொடரில் வருவது போல், இந்தக் கதையில் நடக்கும் சம்பவங்கள் நிஜ மணித்துளிகளில் (Real-time) நடந்தேறுகிறது. அதைவிடுத்து வேறெந்த விடயமும் அந்தத் தொடரைப் பார்த்து எழுதப்பட்டதல்ல என்பதை இப்பொழுதே உறுதிமொழியாய் உரைக்கின்றோம். திங்கட் கிழமை காலை 8.00 மணி கணேஷ் – நம் […]
களவினால் ஆகிய ஆக்கம்

வடிவேலு – பிறர் பொருளைக் கன்னமிட்டுப் பிழைப்பு நடத்துபவன். மாதத்தின் முதல் வாரத்தில் அளவுக்கு அதிகமாய் கையில் பணம்புரளும் – மற்றவர்களுக்கு சம்பள காலம் என்பதால். பேருந்தில் ஏறி ஒரு நிறுத்தத்தில் இருந்து இன்னொரு நிறுத்தம் வந்து சேரும் முன்னர் – கண் மூடி கண் திறக்கும் சிறு இடைவெளியில் – கால்சட்டைப் பையிலிருக்கும் பர்ஸோ, கட்கத்து மத்தியில் வைத்திருக்கும் மஞ்சள் பையோ, இவனின் கண்களிலிருந்து தப்புவது கடினம். மிகவும் சாமர்த்தியமாய் பணத்தை அடித்து விடும் “திறமைசாலி”. […]