\n"; } ?>
Top Ad
banner ad

நிகழ்வுகள்

கவிஞர் அறிவுமதி

கவிஞர் அறிவுமதி

சரிகை வேட்டியில்லை, பட்டுத் துண்டுமில்லை, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியில்லை, மொகலாய மன்னர்கள் அணியும் காலணியி்ல்லை, மொத்தத்தில் திரைப்படப் பாடலாசிரியர்/கவிஞர் என்றவுடன் நாம் வழக்கமாகக் கற்பனை செய்து கொள்ளும் உருவம் எதுவுமில்லை, ஆனால் தரமான பாடல்கள் பல எழுதி, தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பைப் பல வகையிலும் தந்தவர். பாரதிராஜா தொடங்கி, இளையராஜா வரை பல ஜாம்பவான்களுடனும் பணி செய்து, அந்த இணைப்புகளைத் தனது வாழ்க்கையின் உயர்வுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் […]

Continue Reading »

காந்தர்வக் குரலோன்

காந்தர்வக் குரலோன்

இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார், தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை […]

Continue Reading »

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படும். – பொய்யாமொழிப் புலவன் இந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க இயலுமோ? கனிவான உருவம், களையான முகம், கூர்மையான கண்கள், குழந்தைச் சிரிப்பு, நெற்றியில் புரளும் கவனமாக வளைத்து விட்ட வெளிர் முடி, எளிமையும் சிறப்பையும் ஒருங்கே காட்டும் அழகான உடை, 82 […]

Continue Reading »

இசையுதிர் மாதம்

இசையுதிர் மாதம்

ஏப்ரல் மாதம், தமிழ் இசைத்துறை மூன்று பெரும் மேதைகளை இழந்து விட்டது. பி.பி. ஸ்ரீனிவாஸ் தோற்றம்: 09/22/1930 மறைவு: 04/14/2013 பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் – பெயர் அச்சுறுத்தும் வகையில் அமைந்தாலும் இனிமையான, அமைதியான குரலும், மனமும் கொண்டவர் பி.பி.எஸ். PBS (P.B.Sreenivos) is the best PBS (Play Back Singer) எனச் சொல்வார் திரையிசைச் சக்கரவர்த்தி எம்.எஸ். விசுவநாதன். தன் தந்தையின் நண்பர் திரு. சங்கர சாஸ்திரியின் இசையில் மிஸ்டர், சம்பத் இந்தித் திரைப்படத்தில் […]

Continue Reading »

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தில் பனிப்பூக்கள்…

சென்ற சனிக்கிழமை, ஏப்ரல் 13 ஆம் திகதி, தமிழ்ப் புத்தாண்டு தின விழாக் கொண்டாட்டங்கள், மேப்பிள் குரோவ் (Maple Grove) நகரிலுள்ள இந்து ஆலயத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ”பனிப்பூக்கள்” இதழை உள்ளூரில் வாழும் தமிழர்களிடையே பரப்பும் நோக்கத்துடன் அங்கு முகாமிட்டிருந்த அதன் ஆசிரியர் குழுவின் அனுபவம் பற்றிய ஒரு சிறு நிகழ்ச்சிக் குறிப்பு; மேப்பிள் குரோவ் கோயிலுக்கு சென்றவர்களுக்குத் தெரியும்; முதன்மை வாசலில் நுழைந்தவுடன் வலது புறம் திரும்பினால் கோயிலுக்கான பகுதிகளும், இடது புறம் திரும்பினால் […]

Continue Reading »

மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சி

உள்ளுர்த் தொலைக்காட்சி விளம்பரத்தில் மேசிஸ் (Macy’s) பாக்மன்ஸுடன் (Bachman’s) இணைந்து மினியாபொலி்ஸ் மேசிஸ் வளாகத்தில் மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 7 வரை மலர்க்கண்காட்சி ஒன்று நடத்துவதாகச் சொன்னார்கள். இந்தியப்  பின்னணியில் அமைந்திருப்பதாகச் சொன்னது மேலும் ஆர்வத்தைக் கூட்டியது. வானம் மழை பெய்யட்டுமா அல்லது பனி பொழியட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்த ஒரு நன்னாளில் குடும்பத்துடன் கிளம்பிப் போனோம். நகர மையத்தில் கார் நிறுத்த இடம் தேடி அலைந்த போது, இவ்வளவு சிரமப்பட்டு வந்திருக்க வேண்டாமோ […]

Continue Reading »

திரைப்படத் திறனாய்வு – பரதேசி

திரைப்படத் திறனாய்வு – பரதேசி

65 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மக்களே தமிழ் மக்களை அடிமைகளாக நடாத்திய உண்மைப் பதிவுகளை மையமாக கொண்டு படைத்திருக்கும் பாலாவின் மற்றுமொரு சீரிய படைப்பு. ஒரு படைப்பாளியின் திறமை வெளிப்படுவது சமரசம் செய்யாமல் கதை சொல்லும் பாங்கில் தான். மனிதக் குலத்தின் கருமையான பகுதியைத்  துகிலுரித்துக் காட்டுவதில் வல்லவர் பாலா. வேறு நாடுகளுக்குக் கொத்தடிமைகளாகச் சென்றவர் அனுபவித்த பல துன்பங்களைக் கதைகளாகப் படித்திருப்போம். ஆனால் நம், சொந்த மண்ணிலேயே கொத்தடிமைகளாய் ஆக்கப்பட்ட மக்களின் கதை தான் பரதேசி. […]

Continue Reading »

திரைப்படத் திறனாய்வு – வன யுத்தம்

திரைப்படத் திறனாய்வு – வன யுத்தம்

பனிப்பூக்களில் திரைப்படத் திறனாய்வுகள் குறிஞ்சி நிலப் படங்களாகவே எழுதுவது (இதற்கு முன்பு கும்கி) ஒரு சாதாரண நிகழ்வே, எல்லோரும் காட்டுவாசிகள் எண்ணி விடாதீர்கள்! ”குப்பி” என்றொரு படத்தை எடுத்த ரமேஷ் என்பவர் இந்தப் படத்தின் இயக்குநர், சாண்டல்வுட்டை (அதாங்க கன்னடச் சினிமாத்துறையின் பெயர்) சார்ந்தவர். குப்பி படத்தில் விடுதலைப்புலிகள் என்று சொல்லப்படும் சிவராசன்/தானு பெங்களூருவில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட கதையைப் படமாக்கினார். ”வனயுத்தம்”, “குப்பி” இரண்டுக்கும் பல ஒற்றுமைகள், 1. காவல்துறையின் பார்வையில் இருந்தே கதை சொல்லப்பட்டிருக்கிறது. 2. […]

Continue Reading »

உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்கள்

உலகத் தாய்மொழி தினக் கொண்டாட்டங்கள்

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை “உலகத் தாய்மொழி தினம்” என்று ஒன்று கொண்டாடப்படுகிறது என்பது நானறிந்திராத ஒரு செய்தி. தமிழன்பர் ஒருவர் இந்த தினத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல, இதன் மீது ஒரு ஆர்வம் வர ஆரம்பித்தது. வழக்கமாக எல்லா விடயங்களையும் அறிந்து கொள்ள உறுதுணையாக இருக்கும் இணைய தளத்தைப் புரட்டத் துவங்கினேன். வழக்கமாக இணைய தளத்தில் கிடைக்கும் உண்மை மற்றும் அவரவர்களின் சொந்த அபிப்பிராயமென பல விபரங்கள் அறியப் பெற்றேன். அவற்றையெல்லாம் அறிவுக் கொள்முதலாக வைத்துக் […]

Continue Reading »

திரைப்படத் திறனாய்வு – கும்கி

திரைப்படத் திறனாய்வு – கும்கி

மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும். மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad