அன்றாடம்
உண்மையான அன்பே உலகிற்கு விளக்கு – பைபிள் கதைகள்
“உலகில் வெறுப்பது யாரக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்”, என்றார் அன்னை தெரசா. எத்தனை யுகங்கள் கடந்து சென்றாலும் அன்பின் வடிவமாகப் போற்றப்படுவது மாசற்ற தாயன்பே என்பது மிகையல்ல. காரணம்…… வார்த்தைகளே இல்லாத வடிவம் அளவுகோலே இல்லாத அன்பு சுயநலமே இல்லாத இதயம் வெறுப்பைக் காட்டாத முகம் ……………… அதுதான் அம்மா கிறிஸ்துவ மறையின் புனித நூலாம் திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய எற்பாட்டில் கூறப்பட்டுள்ள ஒரு நிகழ்வில் நீதியின் தேவன் பொய்மையின் கொடூரத்தை வெளிக் கொணர்ந்து உண்மையான […]
ரமலான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நாம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை 1.ஈமான் கொள்வது (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள்) ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது. ஸகாத் வழங்குவது. இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. பன்னிரெண்டு முஸ்லிம் மாதங்களில் ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள் உள்ளது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்முஸ்லிகளுக்குக் […]
தீபன் – துரத்தும் துயரம்
சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற ஃபிரெஞ்ச் திரைப்படமான “தீபன்“, மினியாபோலிஸ் அப்டவுன் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ஃபிரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் – ஃபிரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத். — நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது […]
சலங்கை பூஜை
மினசோட்டாவில் வசிக்கும் குமாரி கிரன்மாயி அவர்களின் சலங்கை பூஜை ஹாப்கின்ஸ் கம்யூனிட்டி அரங்கில் ஜூன் 4 ம் தேதி நடைபெற்றது. 12 வயதே நிரம்பிய கிரன்மாயி மேபிள் குரோவ் பள்ளியில் ஆறாம் நிலையில் படிக்கிறார். கிரன்மாயி தனது ஐந்தாம் வயதிலிருந்து பரத நாட்டியம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தாராம். ஆசிரியர் திருமதி பத்மஜா தாமிபிரகாடாவிடம் தொடங்கி, பின்பு ஆசிரியர் திருமதி சுசித்ரா சாய்ராம் அவர்களிடம் தொடர்ந்து பரத நாட்டியம் கற்றுக் கொண்டுள்ளார்.– ”கலா வந்தனம்” எனும் இந்த பரதநாட்டியப் […]
இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா
மேப்பிள் குரோவ் ஹிந்து கோவிலில் மே 27ம் தேதி இளையராஜா சல்யூட்ஸ் தியாகராஜா என்ற தலைப்பில் சைந்தவி பிரகாஷ், நிரஞ்சன், கார்த்திக், அனுஷ், ஸ்ரீராம் ரமேஷ் மற்றும் செல்வா ஆகியோர் பங்கு கொண்ட இசை நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது. இதற்கு சுபஸ்ரீ தணிகாச்சலம் தலைமை ஏற்றார். இந்த நிகழ்ச்சியை மினசோட்டாவில் கர்நாடக சங்கீதப் புகழ் திருமதி நிர்மலா ராஜசேகர் சிறப்பாகத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத கீர்த்தனைகளை இளையராஜா எவ்வாறு அவரது […]
தமிழிசை இது நம் மக்களிசை
ஒரு சனிக்கிழமை இரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். செய்வதறியாது படுக்கையிலிருந்து வெளி நடப்புச் செய்த எனக்குக் கிடைத்த அரிய காட்சியது. மதிமங்கிய பொழுதினிலும் மூன்று குமரிகள் ஒய்யாரமாக உலவிக் கொண்டிருந்தார்கள். அரைமயக்கத்தில் இருந்த எனக்கு முன்னவளும் பின்னவளும் அன்று பெரிதாக ஈர்க்கவில்லை. ஆயினும் இடையவளின் வனப்பும் மென்மையும் என்னைச் சற்று ஈர்க்கவே செய்தது. அணைத்துக் கொள்ளும் ஆசையினால் அருகினில் சென்றேன், பெயரைக் கேட்டேன், இசை என்றாள், ஊர் தமிழகம் என்று பேசத் தொடங்கினாள். பேசிய […]
வெள்ளரிக்காய் சம்பல்
பட்டப் பகல் வெய்யிலில் உடலும் உள்ளமும் குளிர்மையடைய இனிய வெள்ளரிக் காய் இதமான இன்பம் தரும் காய்கறி. பிஞ்சு வெள்ளரிக் கொடியில் இருந்து கொய்து, கொறித்துச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயைப் பலவிதமாகவும் பக்குவப்படுத்தி நம்மூர் மக்களும், இவ்வூர் மக்களும் சாப்பிடலாம். இதோவொரு இலகுமுறை தேவையானவை 1 பெரிய வெள்ளரிக் காய் 1 காரட் 1 தேக்கரண்டி சிறிதாக நறுக்கிய புதினா இலைகள் ½ தேக்கரண்டி உப்பு 2 சிறிய வெங்காயம் 2 கட்டித் தயிர் (Greek Yogurt) 1 […]






