அன்றாடம்
திரைப்படத் திறனாய்வு – 24
சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும். படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற […]
உள்ளூரில் ஒரு உலகச் சுற்றுப் பயணம்
ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் மினசோட்டாவின் செயிண்ட் பால் ரிவர்செண்டரில் வருடாவருடம் நடைபெறும் ‘ஃபெஸ்டிவல் ஆப் நேஷன்ஸ்‘ (Festival of Nations) திருவிழா, இவ்வருடம் மே மாதத்தின் 5, 6, 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. சென்ற வருட விழாவைப் பற்றிய நமது கட்டுரையில், இந்த நிகழ்வு பற்றிய பல தகவல்களைக் குறிப்பிட்டிருந்தோம். அதை இந்த இணைப்பில் காணலாம். https://www.panippookkal.com/ithazh/archives/5906 இந்த வருட விழாவின் சிறப்பம்சமாக, நம் தமிழர் (கவனிக்க, நாம் தமிழர் […]
ஆழ்நித்திரை
நாம் அனைவரும் தினந்தோறும் செய்யும் விடயம் உறங்குவது. ஆன்மிக ரீதியாக இதைப் பற்றி சற்று அலசிப் பார்ப்போம். இந்த விடயத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கீழே “கமெண்ட்” எழுதி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். வேதங்கள் மனிதன் மூன்று நிலையில் உள்ளான் என சொல்கிறது. முழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்நித்திரை. ஆசை, சோகம், பொறாமை என பல உணர்வுகள் நமக்கு முழிப்பில் இருக்கும் தருணம் வருவதுண்டு. புத்த மதத்தை எடுத்துகொண்டால் மனிதன் கெடுவது ஆசையால். நாம் வாழும் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)
சென்ற ஆண்டைப் போல்இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஸ்ரீ நாட்டிய மஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியம் (classical Dance) தனி நபர் மற்றும் குழுவினர்களுக்கான போட்டிகளாகத் தனித்தனியாய் நடத்தப்பட்டது. அதேபோல் பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்களும் Non classical (Semi classical / Folk […]
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ….. பைபிள் கதைகள்
ஆதி காலத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பாரோன் மன்னனிடம் அடிமைகளாய்த் துன்புற்றனர். இஸ்ரயேல் மக்கள் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்ததால், அஞ்சிய பாரோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை எதிரி நாட்டினரோடு போரில் ஈடுபடுத்தினார். அதோடு பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்வதற்கும் அரசனால் ஆணையிடப்பட்டது. அப்போது இஸ்ரயேல் லேவி குலப் பெண்ணொருத்தி கருவுற்று அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், கோரைப்புல்லால் […]
யக்ஷகானம்
கடந்த ஏப்ரல் 2ம் தேதி யக்ஷகானம் (Yakshagana) என்ற நாட்டிய நாடகக் குழு மேபிள் க்ரோவில் உள்ள ஹிந்து கோவிலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. . குரு கீரமானி சிவானந்த் ஹெக்டே தலைமையில் பத்து நபர்கள் கொண்ட இக்குழு “சீதா புராணம்” என்ற நாட்டிய நாடகத்தை மேடையேற்றியது. உடை, ஒப்பனை துவங்கி உரையாடல், நடனம், நாட்டிய நடிப்பு என்ற பல அம்சங்களும் பார்வையாளர்களின் கண்ணைக் கவர்ந்து, மனதைச் சுண்டியிழுத்தது என்றால் மிகையில்லை. இந்தக் குழுவை கர்நாடகா […]
சுறா மீன் கறி
மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம். ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் […]
திருவிவிலியக் கதைகள்: அழிவையல்ல…. மனமாற்றத்தையே…..!
(திருவிவிலியக் கதைகள்) கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை, எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லாதவர் என்று அவர் வேறுபாடு பார்ப்பதில்லை. அவரது அறிவுறுத்தும் வார்த்தையைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்புத் தருகிறார். அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார். முன்பொரு காலத்தில் அதாவது கி.மு. 600 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆஸ்ரியா என்ற ஒரு பேரரசு இருந்தது. அதனுடைய தலைநகரம் நினிவே என்ற அழகான […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். இது, கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரான செயிண்ட் பால் நகரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் 50 வது முறையாக கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது பழைய தொகுப்பு https://www.panippookkal.com/ithazh/archives/4229 சொடுக்கவும்.






