அன்றாடம்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ….. பைபிள் கதைகள்
ஆதி காலத்தில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டில் பாரோன் மன்னனிடம் அடிமைகளாய்த் துன்புற்றனர். இஸ்ரயேல் மக்கள் பலுகிப் பெருகி எண்ணிக்கையில் உயர்ந்ததால், அஞ்சிய பாரோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை எதிரி நாட்டினரோடு போரில் ஈடுபடுத்தினார். அதோடு பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொல்வதற்கும் அரசனால் ஆணையிடப்பட்டது. அப்போது இஸ்ரயேல் லேவி குலப் பெண்ணொருத்தி கருவுற்று அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள். இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், கோரைப்புல்லால் […]
நாட்டிய மஞ்சரி நடனப் போட்டி (NATYA MANJARI DANCE COMPETITION 2016)
சென்ற ஆண்டைப் போல்இந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி ஸ்ரீ நாட்டிய மஞ்சரிக் குழுவினரின் நடனப் போட்டி மினசோட்டா மாநிலத்தில் ப்ளூமிங்க்டன் நகரிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வு தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ஒன்று. இந்தியப் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான பரத நாட்டியம் (classical Dance) தனி நபர் மற்றும் குழுவினர்களுக்கான போட்டிகளாகத் தனித்தனியாய் நடத்தப்பட்டது. அதேபோல் பாலிவுட் மற்றும் நாட்டுப்புற நடனங்களும் Non classical (Semi classical / Folk […]
யக்ஷகானம்
கடந்த ஏப்ரல் 2ம் தேதி யக்ஷகானம் (Yakshagana) என்ற நாட்டிய நாடகக் குழு மேபிள் க்ரோவில் உள்ள ஹிந்து கோவிலில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. . குரு கீரமானி சிவானந்த் ஹெக்டே தலைமையில் பத்து நபர்கள் கொண்ட இக்குழு “சீதா புராணம்” என்ற நாட்டிய நாடகத்தை மேடையேற்றியது. உடை, ஒப்பனை துவங்கி உரையாடல், நடனம், நாட்டிய நடிப்பு என்ற பல அம்சங்களும் பார்வையாளர்களின் கண்ணைக் கவர்ந்து, மனதைச் சுண்டியிழுத்தது என்றால் மிகையில்லை. இந்தக் குழுவை கர்நாடகா […]
சுறா மீன் கறி
மேற்கு நாடுகளில், குறிப்பாக ஃப்ளோரிடாக் குடா நாட்டிலும், கியூபா தொடங்கி அமெரிக்கா தொடும் கடல் பிரதேசத்திலும் சுறா மீன் என்றால், திரைப்படங்களைப் பார்த்து விட்டு ஐயோவென்று தலை தெறிக்க ஓடும் ஒரு கூட்டம். ஆயினும் நம்மவர்கள் சுறாப்புட்டு, சுறாக்கறியென்றால், சுடு சோற்றுடன் குழைத்து, சுவைத்துச் சுவைத்துச் சாப்பிடுவர். வங்காளக் கடலில், தென் மேற்குப் பருவக் காற்றில், லாவகமாக வலை வைத்து சிறு கட்டு மரங்கள் மற்றும் பெருந்தோணிகளிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக பால் சுறா, கருஞ்சுறா என்ற வகைகளைப் […]
திருவிவிலியக் கதைகள்: அழிவையல்ல…. மனமாற்றத்தையே…..!
(திருவிவிலியக் கதைகள்) கடவுளின் கருணைக்கு அளவும் இல்லை, எல்லையும் இல்லை. கனிவு காட்டுவதில் நல்லார் பொல்லாதவர் என்று அவர் வேறுபாடு பார்ப்பதில்லை. அவரது அறிவுறுத்தும் வார்த்தையைக் கேட்டு மனம் மாறும் அனைவர்க்கும் அவர் மன்னிப்புத் தருகிறார். அடித்தலை விட அணைத்தலே அவரது இயல்பாகும். பாவிகளின் அழிவையல்ல, அவர்களது மனமாற்றத்தையே அவர் விரும்புகின்றார். முன்பொரு காலத்தில் அதாவது கி.மு. 600 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆஸ்ரியா என்ற ஒரு பேரரசு இருந்தது. அதனுடைய தலைநகரம் நினிவே என்ற அழகான […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் 2016
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டின் கொண்டாட்ட தினம். இது, கடந்த மார்ச் 17ஆம் திகதி அன்று. மினசோட்டா மாநிலத்தின் தலைநகரான செயிண்ட் பால் நகரில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்த வருடம் 50 வது முறையாக கொண்டாட்டங்களுக்கான அணிவகுப்பு நடைபெற்றது. அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தக் கொண்டாட்டத்தின் விபரம் அறிய எங்களது பழைய தொகுப்பு https://www.panippookkal.com/ithazh/archives/4229 சொடுக்கவும்.
கலக்கப்போவது நாங்கதான்
ஃபிப்ரவரி ஆறாம் தேதியன்று மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் நடத்திய சங்கமம் நிகழ்ச்சிக்காக ஈரோடு மகேஷ், வெங்கடேஷ், கிறிஸ்டோபர் மற்றும் சசி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பனிப்பூக்கள் சார்பில் ஒரு கலந்துரையாடல். கேள்வி: சிரிப்பே மருந்துன்னு சொல்லுவாங்க. அது படி பார்த்தா நீங்க எல்லாம் டாக்டர்கள் தானே? நீங்க கொடுக்கிற மருந்து எப்படி இருக்கும்? பதில் (மகேஷ்): நான் பொதுவா சொல்ற மாணவர் ஜோக்குங்களை எல்லாரும் ரசிப்பாங்க. நிறைய பேரு என்னை வாத்தியாருன்னுதான் சொல்லுவாங்க. நான் காலேஜுல […]
சாவுக்கு சாவும் நம் உயிருக்கு உயிர்ப்பும்
உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் இறப்போம் என்பது இயற்கையின் கட்டாயம். இதில் ஏழை என்றோ பணக்காரன் என்றோ பகுப்பாடு கிடையாது. ஆனால் கிடைத்த வாழ்வில் சாவைவென்று உயிருள்ள வாழ்கையை எப்படி வாழ்வது என்பதை உணர்த்தவும், துன்பத்தில் துவண்டுபோன மனிதன் எப்படி துள்ளி குதித்து எழவேண்டும் என்பதை வெளிப்படுத்தவும், வாழ்வில் பாவம் மற்றும் இறப்பின் பயத்திலிருந்து மீண்டு வரவும், வாழ்க்கைக்கடலை கடப்பது எப்படி என்பதை தெளிவுபடுத்தவும் கடவுள் மனிதனாக பிறந்தார். மனிதனாக பிறந்த நம் எல்லாருக்கும் சாவு என்றால் […]
வெங்காயத் தண்டு வறை
நாம் வட அமெரிக்காவில் பனிதாண்டி இளவெயினில் காலத்தைப் பற்றிக் கனவு காண ஆரம்பிக்கவிருக்கும் இத்தருணத்தில் வந்துள்ள தடுமன் காய்ச்சல்களில் இருந்து சற்று நிவாரணம் தர வெங்காயத் தண்டு வறை உதவியாகவிருக்கும். தற்போது உள்ளூர் மளிகைக்கடைகளில் வெங்காயத் தண்டுகள் கிடைக்கத் தொடங்கும். தேவையானவை ½ lbs தளிர் வெங்காயத் தண்டுகள் 1 மேசைக்கரண்டி நறுக்கிய சிறுவெங்காயம் 1 தேக்கரண்டி வெண்சீரகம் ¼ கோப்பை துருவிய தேங்காய்ப்பூ 2 துண்டாக்கிய உலர்ந்த செத்தல் மிளகாய் 2 மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் […]
TCTA தமிழர் திருவிழா 2016 கொண்டாட்டம்
பிப்ரவரி 06 , 2016 ஃபிப்ரவரி 6 அன்று TCTA பொங்கல் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. பனிப்பூக்கள் வாசகர்களுக்கு அன்றைய நிகழ்வுகளை விளக்க, எங்களின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை: – ஆசிரியர். காலையில் இருந்தே மனம் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்திருந்தது. இன்று டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன் மற்றும் பாடசாலையின் பொங்கல் மற்றும் தமிழர் திருவிழா! அனைத்து நண்பர்களையும் குழந்தைகளையும் ஒன்றாகப் பார்க்கும் பெருவிழா!. முகநூலில் வெளியான விழா முன்னோட்டம் எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்திருந்தது. […]






