வார வெளியீடு
ரொறோன்ரோ தமிழர்த் தெரு விழா
வருடா வருடத் தமிழர் கோடைவிழாவாகிய தெரு விழா மீண்டும் கோலாகலமாக ஆகஸ்ட் 25-26 தேதிகளில் ரொறோன்ரோ நகரின் ஸ்காபரோ பகுதியில் மார்க்கம் வீதியில் நடைபெற்றது. குறிப்பாக மக் நிக்கல் அவனியூ விற்கும் பாஸ்மோர் அவனியூவிற்கும் இடையே நடைபெற்றது. பண்டைய யாழ்ப்பாண ஆஸ்டின் மார்டின் கார்களும், ஆகா, ஓகோ என்று சுவைக்க ஐஸ்கிரீம் பழங்களும், சுடச்சுடக் கூழும் கிடைக்கப் பெற்றன. யாழ்ப்பாண மண்வாசனை மறவாதவருக்கு பனம் பண்டங்கள் பலவும், பசியாறப் பலவகைப் பணியாரங்களும், அப்பம்,தோசை கொத்து உரொட்டிகளும் கிடைக்கப்பெற்றன. […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
சில மாதங்களுக்கு முன்னர், தமிழ்த் திரையுலகில் காலத்தால் அழியாத காவியப் பாடல்களைத் தந்த கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரது பிறந்த தினத்தையொட்டி பனிப்பூக்கள் இதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். அதைப் படித்து, ரசித்த சில நண்பர்கள் கண்ணதாசன், விஸ்வநாதன்–ராமமூர்த்தி கூட்டணியில் வந்த, சுவாரசியமான பாடல்களைப் பற்றி எழுதுமாறு கேட்டிருந்தார்கள். இக்கூட்டணியில் உருவான பெரும்பாலான பாடல்கள் தனித்துவமானவை என்றாலும் கூட சில பாடல்களில் ஒளிந்திருக்கும் நுட்பம் என்னை ஆச்சரியப்படுத்தியதுண்டு. அவற்றில் சில பாடல்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். பொதுவாக காதல் […]
பூப்பனை என்றாகி..
நான் பூப்பனையானேன் பூத்துக்கொண்டே வளர்கிறேன் எனது பூவில் அழகில்லை எனது பூவில் இனிமை இல்லை எனது பூவில் ஒரு கனவும் இல்லை கடல் ஓரத்து மணல் வெளியில் உயர்ந்து நிற்கிறேன் கடற் காற்றின் தடவுதலில் நான் வளர்ந்து போகிறேன். எனது முகத்தில் உதயசூரியன் உப்பு நீரைத் தெளித்துவிடுவான் உப்புக் காற்றைச் சாமரத்தோடு கலப்பான் கானலை விசிறுவான் போதையோடு சரிந்துகிடக்கும் மனிதக் கட்டைகள் என்னைத் தூரமாய்ப் பார்த்து உரையாடுவர். நான் பூப்பனையானேன் எள்ளிநகைக்கும் தூக்கணாங்குருவிகள் என்னில் கூடுகளுக்குச் சொருகும் […]
கனவுகள்
ஆழ்மனதில் அமிழ்ந்திருக்கும், நிகழ்வுகளும் நினைவுகளும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் எண்ணங்களின் வண்ணங்களும் கற்பனையின் சிற்பங்களும் அசைந்தெழுந்து மலர்ந்திடுமே ஆழ்ந்துறங்கும் நித்திரையில், கனவுகளாய்! மனங்களுக்கு மகிழ்வு தரும் கனவுகள் உண்டு மனங்களையே கலங்க வைக்கும் கனவுகளும் உண்டு கடமைகளை உணர வைக்கும் கனவுகள் உண்டு – மன குழப்பத்திற்குத் தீர்வு தரும் கனவுகளும் உண்டு வீரதீரச் செயல் புரியும் கனவுகள் உண்டு வீறிட்டுக் கதற வைக்கும் கனவுகளும் உண்டு கனவுகளில்….. இன்பங்களில் திளைக்கலாம் நினைத்ததெல்லாம் அடையலாம் […]
பரதேசிகள்
நாற்றங்காலில் புற்களுக்கிடையில் முளைத்திருக்கும் நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து முடிபோடுவார் தாத்தா நடவுநட்டு மீந்த நாற்றுகளை யாருக்காவது தானமளிப்பர் விவசாயிகள் நெற்கட்டுகளைத் தூக்க இன்னும்நாங்கள் வளராததால் தப்புகதிர்களைப் பொறுக்கும் வேலை எங்களுக்கு களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும் நெல்மணிகளை ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி கமிட்டியில் அநியாய விலைக்கு எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல் கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய் பட்டினிச்சாவறியா பரதேசிகள் கை […]
வீட்டுத் தரகர்
புகையிலைத்தரகர் , மாட்டுத் தரகர் , வெங்காயத் தரகர் , கலியாணத் தரகர் , காணித்தரகர் என்று பல தரகர் தொழில் புரிவோரைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இத்தொழில்களில் வீடு வாங்கி விற்கும் தரகர் தொழிலானது அதிக இலாபத்தைத் தரக்கூடிய தொழிலாகும். குறைந்த அளவில், மூன்று சதவிதம் கொமிஷன் கிடைத்தால் கூட அதே ஒரு பெரிய வருமானமாகும். வீட்டுத் தரகர் கட்டிடக் கலையை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தால் மட்டும் போதாது, சட்ட நுணுக்கங்களையும் , எவ்விதம் வங்கியில் […]
அலை பாயும் மனதினிலே !
சிற்பி கையிலே சிற்றுளி செதுக்க முடியாமல் சிலையாக நின்றான் அலைபாயும் மனதோடு ! அவன் வசிப்பது வசந்த மாளிகை புசிப்பது அறுசுவை உணவு துயில்வது பஞ்சு மெத்தை துக்கம் மனதோடு தழுவி தூக்கம் கண்களைத் தழுவாமல் தூங்காமல் அலை பாய்கிறதே! அவன் பொய் முகத்தை மெய் முகமெனக் காட்டி பணம் பதவி புகழ் நாட்டி பசித்தவன் போல் மன நிம்மதி தேடி கடல் அலைகள்போல் கவலையில் அலைகின்றானே ! உலகில் காதலே அலைபோலே […]
உயிர்ச்சொற்களுக்கான சவப்பெட்டி
எப்போதுமான முகாந்திரமற்ற இலையுதிர்தல் தொடர்கிறது வீதியின் விளிம்புகளில்….. வசந்தத்தை ஒரு வாளியில் மொள்ளுகிறது ஆளும் அரசுகள். ஆங்காங்கே உடைந்துக்கிடக்கின்றன செத்துப்போன இந்திய நாணயங்கள் காலாற நடந்த வீதியின் வீச்சை கணத்த இதயத்தோடு பார்க்கும் நடுத்தரவர்க்க நாய்கள் அவ்வப்போது முளைக்கும் இலவச எலும்புத்துண்டுகள் கூப்பாடு போடலாமென்று கூடிமுடிவெடுத்தது வாலாட்டிக்கூட்டங்கள். நிமிர்த்தவா முடியும்? எப்போதும்போல் வந்தது ஐந்தாண்டுக்கொருமுறை நாடகம். கிடைத்தன எலும்புத்துண்டுகள் ஜனநாயகத்தின் வாய்மூடிவிட்டது. ஜனங்களின் வயிறுகள் காலிக்குடுவைகள். மக்களுக்கான சவப்பெட்டியை மக்களே சுமந்தனர் மடிநிறைய. பெட்டிநிறைய வழிந்தது மக்களாட்சி… […]
அழகே..
குளுகுளு காற்று அழுவது கேட்டேன் உன் பார்வையின் குளுமை அதற்கில்லையாம் சலசலத்தோடும் நதியின் கண்ணீர் பார்த்தேன் உன் நகைத்தல் இனிமை தன்னிடம் இல்லையாம் பளபளத்து ஜொலித்தபூ வாடிடக் கண்டேன் உன்னுதட்டு பொலிவைப் பெறுவது கடினமாம் பரபரக்கும் பட்டாம்பூச்சி பறவாமைக் கண்டேன் உன் முகவண்ணம் கண்டு பொறாமை கூடியதாம் வரிவரியாக எழுதும் கவிஞரின் வெற்றுத்தாள் கண்டேன் உன் நளினத்திற்கு உவமை காணாமல் தவித்தாராம் தரதரவெனக் காளையர்கள் கண்ணிமைக்காதது கண்டேன் உன் சிலைவடிவைக் […]






