வார வெளியீடு
மணியோசை
அறையில் ஏர் கண்டிஷனர் ‘ஹுஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சவிதாவின் நீள விரல்கள் லேப்டாப்பில் சடசடவென்று தட்டிக் கொண்டிருந்த சத்தமும் கூடவே சேர்ந்து கேட்டது. அவ்வளவு ஏன், அடுத்து என்ன எழுதுவது என்று சவிதா தன் கட்டைவிரல் நகத்தால் தனது லிப்ஸ்டிக் உதட்டை வருடியது கூட தெளிவாகக் கேட்டது. ‘ட்ரிங்… ட்ரிங்…’ …காலிங்பெல். யாராக இருக்கும்? ரூம் சர்விஸ் கூட எதுவும் சொல்லவில்லையே. ஒரு வேளை விஸ்வா ஏதாவது சொல்லியிருப்பானோ? ‘ட்ரிங்…. ட்ரிங்… ட்ரிங்… ட்ரிங்…’ […]
‘உலகச் சாலைகளின் சந்திப்பு’ எதுவென்று தெரியுமா?
அமெரிக்காவின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படும் நியூயார்க்கில் உள்ள ‘டைம்ஸ் ஸ்கொயர்’ தான் உலகச் சாலைகளின் சந்திப்பு (Cross Roads of the World) எனப்படுகிறது. புதுவருடம் பிறந்து விட்டது என்று அறிவிக்கும், உலகப் புகழ்பெற்ற ‘பால் டிராப்’ நிகழ்வு நடைபெறுவது இங்கு தான். இன்று மன்ஹாட்டன் நகரின் பிராட்வே சாலையும், ஏழாவது அவென்யுவும் சந்திக்கும் இடம்1880 களில், வெட்ட வெளியாக, குதிரைகள் வாங்கி விற்கும் பெருஞ்சந்தையாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடம் லாங் ஏக்கர் சதுக்கம் (Long […]
வந்தார் ரஜினி!!
கடந்த ஒரு வாரமாகத் தனது ரசிகர்களைச் சந்தித்துப் புகைப்படம் எடுத்துவந்த ரஜினிகாந்த், டிசம்பர் 31 ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைபாட்டை அறிவிப்பதாகக் கூறியிருந்தார். அதனால் 31 தேதியன்று ரஜினி அறிவிக்கப்போகும் முடிவின் மீது மீடியா மற்றும் அவரது ரசிகர்களது பார்வை குவிந்து இருந்தது. இதுவரை பலமுறை தனது அரசியலைக் குறித்துச் சூசகமாகப் பேசிவந்த ரஜினிகாந்த், இந்த முறையாவது அழுத்தம்திருத்தமாக ஏதேனும் கூறுவாரா அல்லது நழுவும் மீனாகவே இருந்துவிடுவாரா என்ற கேள்வி அனைவருக்கும் இருந்தது. இதுவரை அரசியல் […]
மினசோட்டாவில் கர்நாடக சங்கீதம்
கர்நாடக சங்கீதம் என்னும் சாகரத்தில் கல்பித சங்கீதம், கல்பனா சங்கீதம் என்று இரு வேறு சாகரங்கள் உண்டு. இதில் ஒரு சாகரத்தைக் கடப்பதற்கே ஒரு ஆயுட்காலம் போதாது. இதில் இரண்டு சாகரங்களையும் கற்று, முறையாகப் பயிற்சி செய்து, அதில் தேர்ந்து, வெற்றி பெறுவதென்பது அசாத்தியமான காரியம். குருவருளும் , திருவருளும் கூட இணைந்து செல்வி.நந்தினி ஸ்ரீதர் மாதிரி சிறிய வயதிலேயே சங்கீதத்தில் தலை சிறந்த பாடகர்களாக வருவது மிகப் பாராட்டத் தக்க விஷயம். செல்வி. நந்தினி ஸ்ரீதர் […]
விடைபெறும் 2017
‘காய்ந்த நிலங்கள் கருகும்; காலத்தே வெள்ளம் பெருகும்; லண்டன், இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் பெருவாரிநோய் பரவும்; வல்லரசு நாடொன்று போர்த் தாக்குதலால் நிலைகுலையும்; சில காலம் உலகில் நோய்கள் ஒழியும், அமைதி பரவும்; மீண்டும் போர் துவங்கும்; அரசியொருத்தியின் ரகசியங்கள் வெளிவரும்; இரண்டு முறைகள் தவறி மூன்றாவது முறை மேற்கத்திய நாடொன்று கிழக்கத்திய நாடுகளால் வீழ்ச்சியுறும்’ இந்த வரிகள், நாஸ்டிராடாமஸ் ஐநூறு ஆண்டுகளுக்கு முன், தனது ‘தீர்க்கதரிசனங்கள்’ என்ற புத்தகத்தில், 2017ஆம் ஆண்டுக்கான கணிப்புகளாக எழுதியவை. உலகில் […]
வேலைக்காரன்
தனி ஒருவன் படத்திற்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜாவும், ரெமோ படத்திற்குப் பிறகு சிவகார்த்தி்கேயனும் இந்த வேலைக்காரனில் கைகோர்த்திருக்கிறார்கள். தங்கள் முந்தையப் படங்களில் வெற்றிப் பெற்ற இயக்குனரும் நாயகனும் தரும் அடுத்தப் படம் என்பதால் இயல்பாகவே இப்படத்தின் மீது ஒரு நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பைப் படம் பூர்த்திச் செய்ததா எனப் பார்ப்போம். கொலைகாரக் குப்பத்தில், குப்பத்து மக்களுக்கெனப் பிரத்யேக ஃஎப்.எம். சர்விஸ் தொடங்குகிறார், அம்மக்களுக்கான அக்கறையுடன் அங்கிருக்கும் படித்த வேலையில்லாத இளைஞரான சிவகார்த்திகேயன். அந்த வானொலிக்கான […]
எதிர்பாராதது…!? (பாகம் 6)
( * பாகம் 5 * ) இன்று பிரேம்குமாருக்குப் படப்பிடிப்பு எதுவுமில்லை. நாளை காலையில் ஊட்டியில் இருக்க வேண்டும். ஃப்ளைட் பிடித்து கோவை சென்று, அங்கிருந்து காரில் உதகமண்டலம் சென்று விடலாம். அதுதான் அவன் பிளான். ஆனால் நந்தினியையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாயிருந்தது முதலில். இப்போது அது மாறிவிட்டது. அவளாகத்தான் அதைக் கெடுத்துக்கொண்டாள். இப்போதுதான் சூடு பிடிக்கிறது விஷயம். மனசு ஏன் இப்படிப் பறக்கிறது? . திருமணத்தை முடித்துக் கொண்டு செட்டிலாகக் […]
பூனை
காலத்தை வெல்ல வேண்டுமே ! கால்களில் காகமும் குருவியும் — காலையில் கிழக்கு நோக்கி பணிக்குப் பறக்கும் தந்தை – வேகுமோ அரிசியும் பருப்பும் வேகத்தில் நடக்கிறது சமையல் – அவகாசம் கொடுக்காத அவசரம் – வேலைக்கு நேரமாகிறதே – மேற்கே பறக்கும் தாய் – ஓ ! குட்டிப்பூனையே ! அந்தக் குழந்தையிடம் அன்பு காட்ட , பாசம் பொழிய , உன்னைத்தவிர யாரிருக்கார் இந்த பொருள்சார் உலகில் ? – கவிஞர் டாக்டர் எஸ். […]
அமெரிக்காவில் விடுமுறை 2017 கொண்டாட்டங்கள்
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் என்றாலே நினைவுக்கு வருவது விடுமுறை கொண்டாட்டங்கள், நத்தார் (Christmas) தினக் கொண்டாட்டம் மற்றும் சிறப்பு விருந்துகள் ஆகியவையே ஆகும். இந்தக் கொண்டாட்டங்களின்போது வண்ண வண்ண அலங்கார விளக்குகள் பலவற்றை அலங்கரித்துச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு மையக் கருத்தை வைத்து அலங்காரம் செய்வார்கள். அதுபோன்ற அலங்காரங்களிலும், கொண்டாட்டங்களிலும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்களுக்காக:






