\n"; } ?>
Top Ad
banner ad

வார வெளியீடு

மாயாஜால உலகம்

மாயாஜால உலகம்

இருபது, முப்பது வருஷங்களுக்கு முன்பு வாழ்க்கை என்பது எப்படி இருந்தது? எழுவோம், தயாராவோம், பள்ளிக்கோ, கல்லூரிக்கோ, அலுவலகத்திற்கோ, கடைக்கோ செல்வோம், வீடு திரும்புவோம், இடையில் சாப்பிடுவோம், உறங்குவோம். கரண்ட் பில் கட்டுவதற்கு லைன், ரயில் டிக்கெட் எடுப்பதற்கு லைன், சினிமா டிக்கெட் எடுப்பதற்கு லைன். சாயங்கால வேளைகளில் தெருவில் ஆங்காங்கே நின்று பேசிக் கொண்டிருப்போம். இன்று? வாழ்க்கை எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது? நிற்க. எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டோம் என்று புலம்பும் கட்டுரை அல்ல இது. […]

Continue Reading »

கேள்வி

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
கேள்வி

ஒரு கேள்வி.. பூமி எங்கும் குளிர் பரப்பி, வெளிச்சத்திற்காக மட்டும் சுடாத சூரியனை எழுப்பி, விடிந்திருக்கிறது இந்த நாள். தன் வாழ்வின் இறுதி நாளை வண்ணங்கள் பரப்பிக் கொண்டாடிவிட்டு, நளினமாகக் காற்றில் ஆடி, விழுதலை வெற்றியாக்கி, நிலத்தை அடைகிறது ஒரு பழுத்த இலை.. மரத்திலிருந்து நிலம் பார்த்த இலை, இப்பொழுது நிலத்தில் இருந்து மரம் பார்க்கிறது. உறவல்ல.., பிரிவு உணர்த்தும் பிரம்மாண்டம்… சருகிடம் அந்த மரம் கேட்கும் ஒரு கேள்வி அதனை மீண்டும் இலையாக்கும். அந்தக் கேள்விக்காக […]

Continue Reading »

எதிர்பாராதது…!? (பாகம் 1)

Filed in கதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
எதிர்பாராதது…!? (பாகம் 1)

“ஒரு வீடு நல்லாயிருக்கணும்னா அந்தக் குடும்பத் தலைவன் சரியா இருக்கணும்….எல்லா விஷயத்துலயும், தான் சரியா இருக்கிறது மூலமா மற்றவர்களுக்கு அவன் ஒரு வழி காட்டியாகவும், தவறுகள் நடக்கக் கூடாதுங்கிறதைப் பாதுகாக்கிறதாகவும் அமையும். அப்பத்தான் குடும்பத்துல இருக்கிற மற்ற உறுப்பினர்களுக்கு அவன் மேல ஒரு மரியாதையும், மதிப்பும், அவரவர் செயல்கள் மேலே ஒரு பயமும், கருத்தும், கரிசனமும் இருக்கும்….” சொல்லிவிட்டு கங்காவின் முகத்தை உற்று நோக்கினார் தாமோதரன். எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாயிருந்தாள் அவள். பதில் சொன்னால் மேலும் […]

Continue Reading »

நன்றி நவிலல் நாள் விருந்து 2017

நன்றி நவிலல் நாள் விருந்து 2017

* English Version * மினசோட்டா மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி “நன்றி நவிலல் நாள்” விருந்தை Dr.டேஷ் குடும்பத்தினர் மற்றும் மினசோட்டா இந்து கோவில் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு உள்ளுர் சங்க அமைப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாநில நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் வந்து பங்கேற்றனர்.   இந்த விருந்தில் மாலை சிற்றுண்டி, கலைநிகழ்ச்சி, மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் பாட்டு, பரதம் மற்றும் குச்சிப்புடி நடன […]

Continue Reading »

கார்மேகங்கள்

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
கார்மேகங்கள்

பகலிலும் குளிருதோ கதிரவனுக்கு… போர்த்திக் கொண்டான் கார்மேகப் போர்வையை! நனையாமலிருக்க எவர் பிடித்த குடை கார்மேகங்கள்! பூமிக்கு முகங் காட்டிய மேகப் பெண்கள்… வானுக்கு முகங் காட்ட திரும்பிக் கொண்டதோ! அதன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்களோ மழைத்துளிகள்! கூந்தலின் வாசந் தானோ மண் வாசனை! கதிரவ மன்னனின் மனைவிமார்களோ இம்மேகங்கள்! அவன் நோய்வாய்ப்பட்டதால் கூடி அழுகிறார்களோ? இம்மேகப்பெண்கள்! ஆடையிழக்கும் பூமிப்பெண்ணிற்குப் பச்சை சேலை வழங்கும் கருமைநிற மாயக் கண்ணன் இக்கார்மேகங்கள்! வான் காரிகையின் மார்பகங்கள் மேகங்கள்! தாய்மையடைந்த […]

Continue Reading »

கடவுளை அன்பு செய்வதைப்போல் உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

கடவுளை அன்பு செய்வதைப்போல்  உங்கள் அயலாரையும் அன்பு செய்யுங்கள்…!

“அன்புசெய்” என்பதே கிறிஸ்துவ மறையின் அடிப்படை. அன்புசெய்வதில் நம் இதயம், மனம் மற்றும் ஆன்மா இந்த மூன்றும் ஒருமித்தால்தான் எந்த ஒரு மனிதனும் முழுமனிதனாக முடியும். இந்த நியதியைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார். “முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் கடவுளை அன்புசெய்” (மத்தேயு 22:37) என்று இயேசு தம்முடைய சீடர்களிடம் சொன்னார். மேலும், “கடவுளை அன்பு செய்வதைப் போல உங்களுடைய அயலாரையும் அன்புசெய்யுங்கள்” (மத்தேயு 22:39) என்று சொன்னார். இது எல்லாவற்றிற்கும் அடிப்படையானது அன்பு. திருவிவிலியத்தில் […]

Continue Reading »

அடிப் பெண்ணே…!!

Filed in கவிதை, வார வெளியீடு by on November 26, 2017 0 Comments
அடிப் பெண்ணே…!!

மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]

Continue Reading »

நன்றி நவிதல் நாள் வாழ்த்துக்கள்!

Filed in வார வெளியீடு by on November 22, 2017 0 Comments
நன்றி நவிதல் நாள் வாழ்த்துக்கள்!

Continue Reading »

கவித்துளிகள்

Filed in கவிதை, வார வெளியீடு by on November 19, 2017 0 Comments
கவித்துளிகள்

நீ எனக்குத் தேவையில்லை…!! தனிமையின் சொற்களை விழுங்கி செரித்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… நடுங்கும் விரல் கொண்டும் தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன். நீ எனக்குத் தேவையில்லை… அட்சய பாத்திரம் அதை நான்கு வாங்கி வைத்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… சகாய விலை பேசி உடல் புகுந்து பழகிவிட்டேன் .. நீ எனக்குத் தேவையில்லை… எரியும் பகலொன்றில் உன் எச்சில் தேடும் நிமிடம் வரை நீ எனக்குத் தேவையே இல்லை .. எரியாத பகலென்று ஏதும் உண்டா […]

Continue Reading »

அரவணைப்பு

Filed in கவிதை, வார வெளியீடு by on November 19, 2017 1 Comment
அரவணைப்பு

அரவணைத்து  உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம் அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !! கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் ! கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் ! உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் ! உடன்  பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் ! நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு  பருவம் நிழலான நட்பதனையே  நிதம் அணைக்கும் இளம் பருவம் இதழோடு இதழ் சேரும் அவர் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad