வார வெளியீடு
நன்றி நவிலல் நாள் விருந்து 2017
* English Version * மினசோட்டா மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி “நன்றி நவிலல் நாள்” விருந்தை Dr.டேஷ் குடும்பத்தினர் மற்றும் மினசோட்டா இந்து கோவில் நிர்வாகத்தினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விருந்துக்கு உள்ளுர் சங்க அமைப்பினர்கள், கோவில் நிர்வாகத்தினர், மாநில நிர்வாகத்தினர் மற்றும் உள்ளுர் பிரமுகர்கள் வந்து பங்கேற்றனர். இந்த விருந்தில் மாலை சிற்றுண்டி, கலைநிகழ்ச்சி, மற்றும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கலை நிகழ்ச்சியில் பாட்டு, பரதம் மற்றும் குச்சிப்புடி நடன […]
கார்மேகங்கள்
பகலிலும் குளிருதோ கதிரவனுக்கு… போர்த்திக் கொண்டான் கார்மேகப் போர்வையை! நனையாமலிருக்க எவர் பிடித்த குடை கார்மேகங்கள்! பூமிக்கு முகங் காட்டிய மேகப் பெண்கள்… வானுக்கு முகங் காட்ட திரும்பிக் கொண்டதோ! அதன் கூந்தலிலிருந்து உதிர்ந்த பூக்களோ மழைத்துளிகள்! கூந்தலின் வாசந் தானோ மண் வாசனை! கதிரவ மன்னனின் மனைவிமார்களோ இம்மேகங்கள்! அவன் நோய்வாய்ப்பட்டதால் கூடி அழுகிறார்களோ? இம்மேகப்பெண்கள்! ஆடையிழக்கும் பூமிப்பெண்ணிற்குப் பச்சை சேலை வழங்கும் கருமைநிற மாயக் கண்ணன் இக்கார்மேகங்கள்! வான் காரிகையின் மார்பகங்கள் மேகங்கள்! தாய்மையடைந்த […]
அடிப் பெண்ணே…!!
மழைத் தூரலில் வானம் இலைகளின் உரசலில் மரம் உறைபனியிலும் மலரின் மணம் அடை மழையிலும் உறை பனியிலும் என்னவளின் ஆலய தரிசனம் ….!! எனக்கோ அவளின் நித்திய தரிசனமே….!! இரவின் மடியில் நிலவோ சற்றே இளைப்பாற பறவைகளின் கிரிச் ஒலியின் இசையில் தென்றலும் சங்கீதம் இசைக்க ரம்மியமான இரவில் என்னவளின் சலங்கை ஒலிக்க … மழையின் சாரலில் மெய்சிலிர்த்துப் போனேனடி …! அருகினில் நீ … குளிர்காய்கிறேனே நான் …!! உதட்டோரப் புன்னகையில் கரைகிறேனே….! மின்னல் இடையசைவில் […]
கவித்துளிகள்
நீ எனக்குத் தேவையில்லை…!! தனிமையின் சொற்களை விழுங்கி செரித்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… நடுங்கும் விரல் கொண்டும் தழல் மூட்டத் தெரிந்து கொண்டேன். நீ எனக்குத் தேவையில்லை… அட்சய பாத்திரம் அதை நான்கு வாங்கி வைத்துவிட்டேன். நீ எனக்குத் தேவையில்லை… சகாய விலை பேசி உடல் புகுந்து பழகிவிட்டேன் .. நீ எனக்குத் தேவையில்லை… எரியும் பகலொன்றில் உன் எச்சில் தேடும் நிமிடம் வரை நீ எனக்குத் தேவையே இல்லை .. எரியாத பகலென்று ஏதும் உண்டா […]
அரவணைப்பு
அரவணைத்து உறவு சொல்லும் அன்பான பரிமாற்றம் அரண் அமைத்துத் தடுக்காத அன் பாற்றுப் பிரவாகம் !! கன்றொன்று பசுவதனைக் களித்தணைத்தல் வாத்சல்யம் ! கதிரொன்று தலை கவிழ்ந்து நிலமணைத்தல் பெரும்போகம் ! உயிரோடு உடல் தந்த அவர் அணைத்தல் அது நேசம் ! உடன் பிறந்து உடன் வளர்ந்த அவர் அணைத்தல் பாசம் ! நிலவோடு நிதம் பேசி அணைத்தல் ஒரு பருவம் நிழலான நட்பதனையே நிதம் அணைக்கும் இளம் பருவம் இதழோடு இதழ் சேரும் அவர் […]
சிங்கறால் பொரித்த சோறு
வட அமெரிக்கப் பண்டிகைக் காலங்கள் அண்மிக்கின்றன, இதன் போது கடலுணவு வேண்டும் தமிழர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கீழேயுள்ள சமையலைத் தருகிறோம். சிங்கறால் பொரியல் சோறு இறால், மற்றும் நண்டு, கணவாய், சிப்பி போன்ற கடல் உணவுகளுடனும் தயாரித்துக் கொள்ளலாம். கடலுணவு வகைகளின் சுவை, அவை எவ்வளவு பக்குவமாகச் சமைக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும். தேவையானவை: 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி பப்பிரிக்கா (paprika) 1 – 2 கரண்டி கறித் தூள் 2 கோப்பை […]
போர்வை
மினியாபொலிஸில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. லேசாகக் குளிரும் இந்த அறையில் போர்வைக்குள் தஞ்சம் புகுந்து ஜன்னலின் வழியே மழையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதாவது எழுதலாம். என்ன எழுதுவது..? இந்த மழை பற்றியா? வேண்டாம் நிறைய எழுத வேண்டும். இந்த மழையின் குளிரிலிருந்து காக்கும் இந்தப் போர்வை பற்றி எழுதலாமா ..? அட, புதுசா இருக்கே..!! எழுதுவோம்.. நல்லா இருந்தா பாராட்டிச் சொல்லுங்க.. நல்லா இல்லைனா..? வேற என்ன பண்றது ? அதையும் சொல்லுங்க .. கேட்டுத் […]






