வார வெளியீடு
சின்னாபின்னமாகும் ஜனநாயகம்

‘நாடாளுமன்றங்களின் ஒன்றியம்’ (Inter-Parliamentary Union (IPU)) எனும் அமைப்பு, 1997 ஆம் முதல் செப்டம்பர் 15 ஆம் நாளை சுதந்திரமான தேர்தல்கள், சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகள் போன்ற அத்தியாவசிய மக்களாட்சி கொள்கைகளை வலியுறுத்தும் விழிப்புணர்வு நாளாக அனுசரித்து வந்தது. இதனை மேலும் வலுப்பெறச் செய்ய, 2007ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை உலகளவில் மக்களாட்சி கொள்கைகளை மேம்படுத்தி, நிலைநிறுத்தும் நோக்கத்துடன் இத்தினத்தை சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. இந்நாளில் பல நாடுகளில், சுதந்திரம், சமத்துவம், […]
முத்துகள் மூன்று

முத்துகள் மூன்று அன்றாட வாழ்வில் பிரபலங்கள் உதிர்க்கும் முத்துகள் சில நம் கண்ணில் படாமல் போய்விடுவதுண்டு. அல்லது அவசரத்தில் அம்முத்துகளின் மகத்துவத்தை உணராமல் நாம் கடந்து சென்றுவிடுகிறோம். இதோ உங்களுக்காக இந்த மாத மூன்று உயர்தர முத்துகளின் தொகுப்பு. குறிப்பு :- இந்த முத்துகள் எதிலும் கருத்துக் கலப்படமில்லை. அவை முற்றிலுமாக சொன்னவரின் சொந்த வார்த்தைகள் மற்றும் கருத்துகள். மெய்யாலுமா? இந்திய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், போபாலில் உள்ள இந்திய அறிவியல் […]
ஒரு உன்னதமான குழந்தைப் பருவப் பொழுதுபோக்கு மறைந்து வருகிறது

ஒரு காலத்தில் தெருக்களில் சைக்கிள்களில் குழந்தைகள் நிறைந்திருந்தார்கள். இப்போது இல்லை. சில தசாப்தங்களுக்கு முன்பு ஒரு அமைதியான இந்திய இலங்கை கனேடிய அமெரிக்கத் தெருக்களில் நடந்து சென்றால், அருமையான ஒரு காட்சியை நீங்கள் காண்பீர்கள்: எஃகு போன்ற உறுதியுடன், எந்தப் பாதுகாப்புத் தலைக்கவசமும் இல்லாமல், சைக்கிளில் வாகனம் ஓட்டிச் செல்லும் பள்ளி வயதுக் குழந்தைகள் கூட்டம். இன்று நீங்கள் அந்த மாதிரியான காட்சியைப் பார்ப்பது குறைவு. 1990களில்,அமெரிக்காவில் 7 முதல் 17 வயது வரையிலான சராசரியாக 20.5 […]
வேலு ஆசானின் பத்மஸ்ரீ அனுபவங்கள்

பறை கலைஞர் திரு. வேலு ஆசான் அவர்கள் தான் பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தை நினைவு கூர்ந்து அந்த அனுபவங்களை நம்முடன் இந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார். பேட்டி எடுத்தவர் – சரவணகுமரன் ஒளிப்பதிவு – ராஜேஷ் கோவிந்தராஜ்
அதிபர் டிரம்பின் ஆறு மாதங்கள்

அமெரிக்காவின் நடப்பு அதிபராக, அதாவது 47வது அதிபராக, திரு. டிரம்ப் பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளது. தேர்தலுக்கு முன்னர், பல உத்தரவாதங்களை முன் வைத்து பேசினாலும், சுருக்கமாக ‘உலக அரங்கில் அமெரிக்கா இழந்திருக்கும் நன்மதிப்பையும், மரியாதையையும் மீட்பேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்புறச் செய்வேன்’ எனும் தாரக மந்திரத்தை வாக்காளர்கள் மனதில் அழுந்த பதியச் செய்து, வெற்றியும் கண்டார். வரிச் சுமையைக் குறைத்தல், விலைவாசியைக் குறைத்தல், முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்தல், உலகில் நடைபெறும் போர்களை முடிவுக்கு கொணர்தல், அமெரிக்கத் […]
கீழடி அகழாய்வு

தென் தமிழ்நாட்டில், வைகை ஆற்றின் அமைதியான வளைவில், கீழடி அமைந்துள்ளது. 2013 வரை, கோயில் நகரமான மதுரைக்கு அருகாமையில் இருப்பதைத் தவிர்த்து, மிக அரிதாகவே பேசப்பட்ட கிராமம் . ஆனால் கடந்த பத்தாண்டுகளில், இந்த சிற்றூர் இந்தியாவின் மிகத் தீவிரமான தொல்பொருள் மற்றும் அரசியல் விவாதங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. 2014ஆம் ஆண்டில் மத்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆகழ்வாய்வில் அங்கு, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் சங்க […]
கடவுள் இல்லையே

மேடையில் ஒலிபெருக்கியில் நடன வகுப்புகளின் பெயர்களை அழைத்தார் நிகழ்ச்சி தொகுப்பாளர். முதல் வரிசையில், பேத்தியின் நடனத்தைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த மீனாட்சி அம்மாள் நிமிர்ந்து உட்கார்ந்தாள். இவளது பேத்தியின் நடனப் பள்ளி தான் அடுத்து ஆடப் போகிறது. ஒலிபெருக்கியில் “இடது பதம் தூக்கி ஆடும் ..” பாடல் ஒலித்தது. பதினைந்து வயது அனன்யா அவளது குழுவுடன் நடனமாடினாள். மீனாட்சி அம்மாளின் முகத்தில் பெருமிதம், புன்னகை எல்லாம் சேர்ந்து கலந்தது. அருகில் இருந்த கணவர் சதாசிவத்திடம் “பாருங்கோ பாருங்கோ , […]
பாட்டி வீட்டுப் பரண் – பகுதி 3

முன் பகுதி சுருக்கம் அமெரிக்காவில் இருந்து ஐஷு பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்காக வருகிறாள். அங்கு பாட்டி வீட்டு தூணில் ஒரு அதிசய படிக்கட்டு இருப்பதை கண்டு அதன் உள்ளே செல்கிறாள். அந்தப் படிக்கட்டு ஒரு பரணில் சென்று விட, ஐஷு அங்கு உள்ள ஒரு புத்தகத்தின் உள்ளே இழுத்து செல்லப் படுகிறாள். … இனி இது என்ன இடம்? தான் எங்கு இருக்கிறோம் என்று ஐஷுவிற்கு புரியவில்லை. ஏதோ பெரிய வீடு. பாட்டி வீடா இது […]
பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா பேட்டி

பல்வேறு தமிழர் கலைகளைக் கற்று நிபுணத்துவம் பெற்று, அதில் பல ஆய்வுகளைச் செய்து வரும் பேராசிரியர் முனைவர் திரு. பா. இராசா அவர்கள், இந்தப் பேட்டியில் தனது குடும்பப் பின்னணி குறித்தும், இத்துறையின் மீதான ஆர்வம் குறித்தும் விரிவாக பேசியுள்ளார். நேர்காணல் & படத்தொகுப்பு – சரவணகுமரன் ஒளிப்பதிவு – இராஜேஷ் கோவிந்தராஜ்