நிழல் படங்களும்…. நிஜ ஜடங்களும்….!
இந்தச் சிறுகதையானது, தமிழர் வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின் அடிப்படையால், தோன்றும் போலித்தனமான ஏற்றத்தாழ்வு மனப்பான்மையானது, ஆங்கே கீழ்மட்ட நிலை சார்ந்தோரை, உண்மையிலேயே எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதையும்…..
ஆங்காங்கே, பரவலாகப் பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான அனுபவங்கள், ஆகியன உள்ளத்தில் தோற்றுவித்த வலிகளின் உந்துதலாலும், பிறந்த கற்பனையாகும்.
"பாரும்மா.... இன்னைக்கு நாங்க உமேசுவீட்டுக்கு வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க எல்லாரும் , "கிழிஞ்ச சட்டை.... கிழிஞ்ச சட்டை"ன்னு சொன்னாங்கம்மா...."
ஏழுவயசுக் குழந்தை திவ்யா, தனது தாயார் வைரமணியிடம் கூறுவது தெளிவாகக் கேட்டது. கடிகாரத்தை நோக்கினேன். இரவு பத்தரை.
வைரமணி அக்காவின் வீடும், நான் தங்கியிருக்கும் ரூமும் சற்று பக்கத்திலேதான் உள்ளன. கணவர் சண்முகம் ஒரு தனியார் கம்பெனியில் லாரி டிரைவராக பணி புரிந்தவர். அவர் காலமாகி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
கட்டிட வேலைகள் நடக்குமிடங்களில் கொத்தனாருக்கு சித்தாள் வேலை பார்க்கச் செல்கின்றாள் வைரமணி அக்கா.வீட்ட...