\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

காந்தி ஜெயந்தி நினைவூட்டல்

பன்முறை படித்துக்கூறினாய்
வன்முறை வழி ஆகாதென்று
உன்னுயிர் போனது
வன்முறை பேயதானால்
முதன்முறை மானுடம் மறைந்தது
உன்னுயிரை பறித்தெடுத்து

பல்லுயிர் பறித்துக்கொண்டு
இன்னுமேன் ரத்தவெறி இந்த
இனவெறி ஜாதிவெறி மதவெறி
கொண்ட நெறியர்கள் போர்வையில்
வெறியர்களுக்கு

மற்றவெறிகளை பின்னுக்குத்தள்ளி
மதவெறிதனை முன்னிறுத்தும்
ரத்தவெறி காட்டேரிகள் உன்வழி
உன் பாதை பயணிக்கும் நாள்தனை
எதிர்பார்த்து ஏங்குகிறோம்

காந்தி எனும் சரித்திரசகாப்தம்
என்றும் எம் நினைவில் ஏந்தி
காந்தி கண்ட சாம்ராஜ்யம்
என்று வருமென மனம் ஏங்கி
காந்தி ஜெயந்தி நினைவூட்டல்!

-வெ. மீனாட்சி சுந்தரம்

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

banner ad
Bottom Sml Ad