\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

தீபாவளி ஃப்ளாஷ்பேக்

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments
தீபாவளி ஃப்ளாஷ்பேக்

கொளுத்திப் போட்ட பட்டாசு கதைகள் பலவும் சொல்லிடுது….. குழந்தைப் பருவ தினங்களிலே குதூகலம் நிறைந்த தீபாவளி…. மாதம் இரண்டு முன்னமேயே மாறாது மலர்ந்திடும் கனவதுவே…. முழுதாய் நீளும் கால்சட்டையோ முன்னம் போலே அரைக்காலோ தந்தை சற்று மனம்வைத்து தனக்குப் பிடித்ததைத் தருவாரோ? விரும்பி வாங்கிய துணிமணியை விரைவாய் டெய்லரும் தைப்பாரோ… தினமும் அவரின் கடைசென்று திரும்பி வந்தோம் வெறுங்கையாய் !! முந்தைய தினத்தின் நள்ளிரவில் முடித்தே கொடுக்க, மகிழ்ந்தோமே !! தெருவில் முதலாய் நம்வீட்டில் தெறிக்க வேண்டும் […]

Continue Reading »

அன்பின் பெருமை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 1 Comment
அன்பின் பெருமை

அன்பு என்பது நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்று போல அவசியமானது. “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது “ என்பது  வள்ளுவர் வாக்கு. இல்லறம் நல்லறம் ஆக அன்பு இன்றியமையாதது அன்பினால் கிடைக்கக்கூடிய பலன்கள் எண்ணிலடங்கா. நமது ஆற்றல், மன வலிமை, உடல் வலிமை, அறிவாக்கம் இவற்றுக்கு உறுதுணையா‌க நிற்பது அன்பே. நமது வாழ்க்கை ஒரு கணித மேடை போன்றது. நமது நண்பர்களையும், சுற்றத்தாரையும் கூட்ட வேண்டும் (+) பகைவரை விலக்க வேண்டும் (-) […]

Continue Reading »

வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
வன்முறை மறுப்பு நாள் – NON VIOLENCE DAY

இந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இந்தியாவின் தேசத் தந்தை ஆன காந்தியின் 147 ஆவது பிறந்த நாளை “வன்முறை மறுப்பு நாள்” (NON-VIOLENCE DAY) முதன் முறையாக மினசோட்டா மாநிலத்தின் தலைநகரக் கட்டிட அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை  இந்திய மினசோட்டா அசோசியேஷன் மற்றும் மினசோட்டா இந்துக் கோவில்இரண்டும் இணைந்து  ஏற்பாடு செய்து இருந்தனர். புருஷ் கோரி இந்திய மினசோட்டா அசோசியேஷன் சார்பில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழக்கினார். மினசோட்டா மாநில அமைப்பு சார்பில்  மாநில உறுப்பினர்கள் […]

Continue Reading »

கேனன் காட்டாற்று வெள்ளம்

Filed in கலாச்சாரம், வரலாறு by on October 31, 2016 0 Comments
கேனன் காட்டாற்று வெள்ளம்

மினசோட்டா மாநிலத்தின் நாட்டுப்புறமும், பட்டினங்களும் இலையுதிர் காலத்திலே பல அடைமழைகளினால் அல்லல் பட்டவாறுள்ளன. செயின்ட்பால் தலைநகரத்தின் தென்கிழக்கில்  நார்த்ஃபீல்ட் எனும் அமைதியான விவசாய நிலங்கள் மற்றும் சிறிய பல்கலைக் கழகங்கள் கொண்ட ஊர் ஒன்றுள்ளது. கால்ரன் கல்லூரி, மற்றும் செயின்ட் ஓலஃப் பல்கலைக் கழகங்கள் நூற்றாண்டுகளாக நார்த் ஃபீல்ட் ஊரை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. வளமான இலைகள் கோலாகலமாக ஒருபுறம் நிறம் மாற அதேசமயம் கேனன் (Cannon River) எனும் பட்டினத்தூடு செல்லும் காட்டாறு மடை கடந்து பாய்ந்தவாறுள்ளது. […]

Continue Reading »

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு

96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள். இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என […]

Continue Reading »

காதல் பிசாசே ..

Filed in இலக்கியம், கதை by on October 31, 2016 0 Comments
காதல் பிசாசே ..

ஒன்பது மணிக்கே வெயில் சுட்டெரித்தது. பரங்கிமலை ரயில் நிலையத்தில் வெயிலைப் பொருட்படுத்தாது  கூட்டம் நிரம்பி வழிந்தது. நீலப் புடவை கட்டிய பெண் ஒருத்தி ‘பரக் .. பரக்’ என்று இரண்டு கைகளிலும் தென்னந் தொடப்பத்தைப் பிடித்து பெருக்கிக் கொண்டிருந்தார். யாரோ சாப்பிட்டுவிட்டுப் போட்ட கொய்யாப் பழத்தின் ஒரு பாதி உருண்டோடியது. எங்கிருந்தோ விர்ரென்று பறந்து வந்த காகம் அரை செகண்ட் அமர்ந்து, தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, கா கா என்று கரைந்து பழத்தைக் கொத்திக் கொண்டு […]

Continue Reading »

வாசகர்களுக்கு வணக்கம் !

Filed in தலையங்கம், முகவுரை by on October 31, 2016 0 Comments
வாசகர்களுக்கு வணக்கம் !

இந்த இதழ் வெளிவரும் நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு வாரங்களில், உலக ஜனநாயகத்தில் மிகப்பெரிய ஒன்றான அமெரிக்க நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கும். பண்டைய காலத்து குடவோலை முறை தொடங்கி இன்றைய காலத்து நவீன இயந்திரங்களின் உதவியுடன் நடத்தப்படும் தேர்தல்கள் வரை, இவை அனைத்தின் எதிர்பார்ப்புகளும் சாதாரண மனிதர்கள் தங்களுக்குத் தேவையான தலைமையைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பதுதான். நாட்டின் பல துறைகளும் நாணயம் குறைந்து விட்டது என்பது உண்மைதான் என்றாலும், இன்றும் சாதாரணக் குடிமக்கள் வாக்களித்து […]

Continue Reading »

ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

Filed in இலக்கியம், கட்டுரை by on October 31, 2016 0 Comments
ஆட்டிஸ அன்புத் தம்பியுடனான அன்றாட வாழ்க்கை

பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட என் தம்பி சஞ்சித் எனக்குக் கிடைத்ததை ஆசிர்வதிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இந்தப் பத்து வருட காலத்தில், பல ஏற்றத்தாழ்வுகள் வாழ்க்கையிலே, ஆனால் எந்தச் சந்தர்ப்பத்திலும் இது போன்ற ஒரு தம்பி கிடைத்தது தவறு என்று எண்ணியதில்லை, இனிமேலும் எண்ணப்போவதில்லை என்பது உறுதி. அன்பான, அறிவான, பாசம் மிகுந்த அற்புதக் குழந்தை என் தம்பி, வாழ்க்கையில் ஒரு நாள் மிகவும் உயர்ந்த நிலைக்கு வருவான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. […]

Continue Reading »

மனிதத் தத்துவம்

Filed in இலக்கியம், கவிதை by on October 31, 2016 0 Comments
மனிதத் தத்துவம்

மனிதனே…
உன்னையே திரும்பிப் பார்
உள்ளம் சென்ற வழியில்
துள்ளித் திரிந்தாய்
இளமையில்….

இருப்பது பொய்
போவது மெய்
உணர்ந்து கொண்டாய்
முதுமையில்….

Continue Reading »

கவித்துளிகள்

கவித்துளிகள்

இயற்கையின் சாரல் வறட்சியின் வெற்றி மழைத்துளி மண்ணைத் தொடும் வரை… வந்தபின் வறட்சியின் சுவடு மறைந்தே போய்விடும்…. மண்ணின் வாசமும் மழையின் சாரலும் மகிழ்ச்சியில் மனம் இலேசாகி நம் நாசித் துவாரங்களை ஊடுருவும் ….!! தளிர்கள் செழித்து செடியாகி செடி நுனியில் வண்ணமிகு மொட்டுக்கள் நாணி மலர்ந்து தலை துவட்டும் …..!! மொட்டுக்கள் நனைந்திடக் கூடாதென இலைகள் கேடயக் குடைகளாகும் காற்றின் சலசலப்பில் இலைக் குடைக்குள் மறைந்தபடி கண்ணாமூச்சி விளையாடும் மழைத்துளிகளோடு…..!! மனம் கமழ் பூமணங்கள் காற்றில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad