\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

மரவள்ளிக்கிழங்குப் பொரியல்

Filed in அன்றாடம், சமையல் by on October 3, 2016 2 Comments
மரவள்ளிக்கிழங்குப் பொரியல்

வட அமெரிக்காவில் கூதல் காற்று அடிக்கத் தொடங்குகிறது, ஆமாம் இலையுதிர்காலத்தை அணுகுகிறோம் என்பதற்கான அறிகுறிகள் பல. எனவே படிப்படியாக நமது உடல் குளிரைத் தாங்கவும்,  நாக்குகள் நல் உருசி பெறவும் நாடுவது கொழுப்பு, எண்ணெய் சார்ந்த தின்பண்டங்களே. குளிர்ப்பிரதேசங்களி்ல் வாழ்பவர் பருவகாலத்தைப் பொறுத்து பொரித்தல், அகலடுப்புச் சமையலில் (oven baking) நாட்டம் கொள்வது இயல்பு. இந்தக் காலகட்டத்தில் சூடான சோற்றிற்கும், சுகமான ஒடியல்  மாக்கூழிற்கும், தனியாகக் கொறித்திடவும் சுவையானது மரவள்ளி்க்கிழங்குப் பொரியல். தேவையானவை 1 – முழு […]

Continue Reading »

ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை

ஐடாஸ்கா & பெமிட்ஜி – ஒரு பார்வை

காவிரி பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் காவிரி குறித்த ஒரு நினைவு. கர்நாடகத்தவருக்கு, காவிரி, அவர்கள் வீட்டுப் பெண்; குல தெய்வம். அதைப் பெங்களூரில் இருக்கும் போதும் கண்டிருக்கிறேன். கர்நாடகத்தைச் சுற்றி வரும்போதும் கண்டிருக்கிறேன். கன்னடப் படங்களில் நல்ல பெண் கதாபாத்திரங்களுக்குத் தான் காவிரி என்று பெயர் வைப்பார்கள். குடகு மலையில் காவிரி ஆரம்பிக்கும் இடமான தலை காவிரி என்னும் இடத்தில் கோவில் கட்டிக் கும்பிடுகிறார்கள். தவறே இல்லை, இயற்கை தானே நம்மை வாழ வைக்கும் தெய்வம்!! […]

Continue Reading »

அழகே உன்னை ஆராதிக்கிறேன்

Filed in இலக்கியம், கவிதை by on October 3, 2016 0 Comments
அழகே உன்னை ஆராதிக்கிறேன்

சோழர் கல்வெட்டில்
உன் அழகு பொறிக்கப்பட்டிருக்கும்
நீ இராஜராஜன் காலத்தில் பிறந்திருந்தால்…..

பாண்டியன் நெடுஞ்செழியன் காலத்தில்
நீ பிறந்திருந்தால்
சங்கம் வளர்த்த மதுரையை
தீக்கிரையாகாமல் காத்திருக்கலாம் ….

Continue Reading »

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்

பெருகும் காதல் பூட்டு கலாச்சாரம்

பெங்களூரில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, நண்பரொருவர் ஒரு திங்கள் கிழமையின் மதிய உணவுவேளையில் சொன்ன விஷயம் இது. வாரயிறுதியில் ஓசூரில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருக்கிறார். நல்ல கூட்டம். நீள வரிசை. பொறுமையாக நகர்ந்து கொண்டிருந்தது, பக்தர் குழுக்கள். ஒரு பெரிய கதவைக் கடக்கும் போது, நமது நண்பர் அந்தக் கதவில் மாட்டியிருந்த ஒரு உலோக வளையத்தைத் தட்டியவாறு சென்றிருக்கிறார். அதைப் பார்த்த அவரது மனைவியும் அதை ஒரு தட்டுத் தட்ட, பின் தொடர்ந்த நண்பர் குடும்பமும் அந்தச் […]

Continue Reading »

மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

Filed in இலக்கியம், கதை by on October 3, 2016 6 Comments
மனிதரோடு மனிதர் பேசும் வழக்கம் இனி உண்டோ?

தொலைபேசி அழைக்கும் சத்தம் கேட்டது. கையை மடக்கி fit bit ஐ அழுத்தி அழைப்பது வாசு எனக் கண்டு கொண்டாள் . கடிகாரம் மணி 6 எனக் காட்டியது. அங்கே இப்போ மணி 5 தானே. தூக்கம் வரலையா? வியந்தபடி அழைப்பை இணைத்தாள் . “குட் மார்னிங் வாசு என்ன நம்ம ஊருTime zone லேயே இருக்கீங்களா?”. “ஆமாம் . சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பணும். பிரணவ் என்ன பண்ணறான் ?” “அவன் தூங்கறான். ஒரு அரைமணி […]

Continue Reading »

நவராத்திரி

நவராத்திரி

பாட்டி கொடுத்த முப்பெரும் தேவி செட், போன முறை திருச்சி போனபோது  வாங்கின கிருஷ்ணர் உறியடி செட், மைசூர் சாலையில் அத்தை வாங்கித்  தந்த அஷ்டலக்ஷ்மி செட். இப்படி ஒவ்வொண்ணும் பரணிலிருந்து இறங்க ,இறங்க நவராத்திரி களை கட்டத்  தொடங்கிவிட்டது.  ஒவ்வொரு முறையும் காலிறுதித் தேர்வுக்கு இறுதியில் வரும் அந்தப் பத்து நாட்கள் நவராத்திரி விடுமுறை மறக்க முடியாத ஒன்று. ஒரு ஓரமாக டப்பாக்கள் எல்லாம் அடுக்கி, இந்த முறை வித்தியாசமான முறையில் படி செய்ய முயற்சி […]

Continue Reading »

வேர்வையின்றி வெற்றியில்லை…..  பைபிள் கதை

வேர்வையின்றி வெற்றியில்லை…..  பைபிள் கதை

மனிதனாகப் பிறந்த நமக்கு, கடவுள் பல்வேறு வரங்களைக் கொடையாகத் தந்திருக்கிறார். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது. இதை அழகாக கிறிஸ்துவ மறையின் புனித நூலான திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதர் மக்களுக்கு ஒரு உவமையின் மூலமாக எடுத்துரைப்பதை இங்கு காணலாம். ஒருநாள் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு […]

Continue Reading »

வித்தியாசம் 13 காண்க

வித்தியாசம் 13 காண்க

Continue Reading »

முகமறியாக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on September 20, 2016 0 Comments
முகமறியாக் காதல்

முகம் தேவையில்லை
முகவரியும் தேவையில்லை
முகமறியா முகப்புத்தகத்தில்
முதல்வனாய் என்னுள் முளைத்த
மூன்றெழுத்துக் காதலுக்கு …!!

மனதில் தோன்றிய முதல் காதல்
மனிதனாய்ப் பிறந்ததன் பயனை அறியச் செய்த காதல் …
மனிதனுள் புதைந்த சுவடுகளை
மனதினுள் புகுந்து வெளிக்கொணரும்
மகத்துவமே காதல் ….!!

Continue Reading »

மினசோட்டா ஸ்டேட் ஃபேர்

மினசோட்டா ஸ்டேட் ஃபேர்

எந்தவொரு மக்கள் வாழும் இடமென்றாலும், வருடத்திற்கொரு முறையேனும் மக்கள் ஒரு இடத்தில் ஒன்று சேர்ந்து, ஏதேனும் வகையில் விழா எடுப்பது பல்வேறு பிரதேசங்களில், கலாச்சாரங்களில் ஒரு வழக்கமாக பல காலமாக இருந்து வருகிறது. இந்திய, தமிழக கிராமங்களை எடுத்துக் கொண்டால், அங்கிருக்கும் கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையேனும் திருவிழா நடக்கும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இப்படியான  திருவிழாக்கள் நடப்பதுண்டு. கால ஓட்டத்தில், மக்கள் நகரங்களில் குடியேறத் தொடங்கிய பின், இத்திருவிழாக்கள் இன்னமும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad