admin
admin's Latest Posts
கடவுளுமில்லை… கர்மமுமில்லை..
‘கடவுள் இல்லைன்னு இப்ப சொல்லு பாக்கலாம் ..’ அவன் பேசிய பாஷை புரியாவிடினும் இதைத்தான் சொல்கிறான் என்று ஊகிப்பதற்குள், கைத்துப்பாக்கியின் பின்புறத்தால் தலையைக் குறி வைத்து அடித்தான் அவன். அவனது கை பின்னுக்குப் போன வேகத்தில் முகத்தை லேசாகத் திருப்பினார் தீனா. தலையைக் குறி வைத்த அந்த அடி சற்றுக் கீழிறங்கி நெற்றிப் பொட்டுக்கும் கண்ணுக்கும் இடையில் கிழித்துக் கொண்டு சென்றது. இருட்டிக் கொண்டு வந்தது தீனாவுக்கு. ஏதோ சொல்ல முனைவது தெரிந்தது. முடியவில்லை அவரால். கையால் […]
காணாமல் போன வாழ்வு
இன்றைய மாலைப் பொழுதில்
விசாரணைக்கென வந்திருந்த
இராணுவ அதிகாரியின்
அதட்டல் நிறைந்த விசாரணையில்
நான் ஆடிப்போய் விட்டேன்
வழமை போலன்றி
சோர்ந்து போகாதே ! மனமே !
துச்சினான் இறைமகன் இயேசு, சிலுவை மரத்திலே வஞ்சிமகன் அவள் கன்னித்தாய் பார நெஞ்சினிலே.. கெஞ்சிய நெஞ்சத்தோடு பரனைப் பார்க்கையிலே.. எஞ்சிய வார்த்தை “இதோ உன் மகன்” கேட்கையிலே தஞ்சியே வாழ “இதோ உன் தாய்” அரவணைப்பிலே வாழு மனிதா ! வாழு ! உலகம் எஞ்சிய அளவிலே உயிர்த்தார், ஜெயித்தார் ஜெயராஜன் உனக்கே !!! – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
மறை நூலில் இறை வாக்கு
புனித வெள்ளி மலர நிறை ஞாயிறு ஒளிர மறை நூலின் இறை வாக்கு குறையறப் பொளிர்ந்து இறை மகன் இயேசு இரத்தமும் உடலுமாய் இங்கும் அங்கும் எங்கும் நிறைந்து உயிர்த்த காட்சி மனம் மகிழ்ந்தது இனம் களித்தது குணம் தெரிந்தது கனம் பொருந்தியது மானுட இரட்சிப்பு பரம பிதா பரன் வாக்கு – ஜெசிந்தா அல்ஃபோன்ஸ்
பால் உரொட்டி
இது பலகாரமாக உண்ணப்படும் பண்டம். உரொட்டி உணவு வகையானவை தமிழரிடையே பண்டைய காலத்தில் இருந்து உட்கொள்ளப்படும் இலகுவான மாச்சத்துப் (starch) பண்டம். முந்தைய காலத்தில் தீட்டிய அரிசிமாவில் இருந்து செய்யப்பட்டிருப்பினும், தற்காலத்தில் கோதுமை மாவு (wheat flour) சேர்த்து செய்யப்பட்டு வருகின்றது. கோதுமை மாவுப் பண்டங்கள் பல உட்கொள்ளல் எம்மவர்களுக்கு உடல் ஒவ்வாமையைத் தருவதையும் தற்காலத்தில் அவதானிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்தச் சமையல் முறையில் நாம் எமது மூதாதையர் வழிக்குச் செல்வோம். தேவையானவை 3 கோப்பை தீட்டிய […]
அகத்தின் அழகு
உலகில் உள்ள ஜீவராசிகளில் மனிதன் தான் வெளித்தோற்றத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறான். இன்பத்தை அடைய எல்லாருமே ஒருவிதத்தில் அல்லது பலவிதத்தில் முயன்று கொண்டு இருக்கிறோம். அனால் வேதங்களோ, நாம் ஆனந்தத்தாலே உருவாக்க பட்டவர்கள். மாயை மறைப்பதால் அதை உணராமல் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம் என்று சொல்கிறது. அதை அப்படியே நம்பச் சொல்லவில்லை, அப்படிச் சொல்லும் நிலையிலும் நான் இல்லை. அனால், அதில் அறிவியலுடன் கலந்து ஆராய்ந்து பார்போம். “இது என் கை” என்று நான் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 16
(அத்தியாயம் 15 செல்ல இங்கே சொடுக்கவும்) கொடுந்தமிழாயிருந்த மூலமொழி பின் திராவிடமொழிகளாய்த் திரிந்துவிட்டது. மூலத்தமிழிலிருந்து முதலில் பிறிந்த முதல் மொழியாக பாவாணரால் கருதப்படுவது தெலுங்கேயாகும்.அது திரிந்த காலம் ஏறத்தாழ கிமு 1500ம் ஆண்டாகும். தெலுங்கு நாட்டிற்கு கீழ் தென்பகுதி முழுவதும் தமிழ் என்னும் ஒற்றை மொழியே வழங்கி வந்துள்ளது. தமிழிலிருந்து திரிந்த திராவிட மொழிகளை வடதிராவிடம், நடு திராவிடம் , தென் திராவிடம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பனம்பாரனாரும் தொல்காப்பியரும் ஒரே கல்விச்சாலை மாணாக்கர்கள் […]
புனித வெள்ளி
கிறிஸ்துவ மறை நெறியில் தவக்காலம் மற்றும் புனித வாரம் சேர்த்து 46 நாட்கள் மிகவும் முக்கியமான காலம். இயேசுநாதருடைய தியாகம், பிறருக்காக வாழ்தல் போன்ற நற்பண்புகளை அனைவரும் கடைபிடிக்கவும், ஒவ்வொரு கிறிஸ்துவரும் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனிமனித சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நிதானமான ஆன்மீகச் சிந்தனை மற்றும் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவும் உகந்த நாட்களாக இந்தத் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் (Ash Wednesday) தவக்காலத்தை விபூதி புதன் அன்று கிறிஸ்தவர்கள் […]







