\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?

வேற்றுமையைக் காட்டுவது ஏனோ?

சாம்பல் மேடுகள் சரிவரச் சமைக்கிறதா – இன்று போரில் உயிர்த்த வெண்புறாக்களுக்கு விடிவில்லை. மல்லுக்கட்டிப் புறநகர்ச் சமைந்த மாந்தர்க்கில்லை – சரிநிகர் வாழ்விங்கு செல்லரித்துப் போன மனப்புண்ணை ஆற்றுதல்தான் என்ன வகை? மந்திரி சகமாந்தர் என ஆரைத்தான் நம்புவது ஐயோ! வேற்று நாடுகள் தாமும் வேற்றுமையைக் காட்டுவது ஏனோ? தோலுக்கு ஒவ்வோர் நிறம்  சதைத் தொகுப்பிற்கு ஒவ்வோர் நிறை மாந்தர் தம்முன் வேற்றுமைதான் எத்தனையோ! அண்டிப் பிழைக்க வந்து தாய்நாடு நாம் துறந்தோம் வந்துசேர் நாட்டிற்கூடப் பெண்டீர் […]

Continue Reading »

கடிதம்

Filed in கதை, வார வெளியீடு by on June 22, 2020 0 Comments
கடிதம்

“அம்மா இண்டைக்கு போஸ்மென் கெம்பஸ் செலக்சன் லெற்றர் கொண்டு வருவான், கொஞ்சம் கவனமா இருங்க“. “சுமன் மஞ்சுக்கிட்டயும் சொல்லப்பா”. மஞ்சுவை சுமன் அழைத்தபோது “அண்ணா நேற்றுப் புள்ளா அம்மாவும் நானும் கடப்பில காவல் இருந்தனாங்க, இண்டைக்கும் அப்பிடித்தான், அத நீ சொல்லயா வேணும்“. “அதுதானே வாயாடி” எனக்கூறி சுமன் கடைக்குப் புறப்பட்டுச் சென்றான். “அம்மா லெற்றர் வருதோ இல்லையோ றோட்டால போற எந்தப் போஸ்மெனயும் நான் விடுறதாயில்ல” எனக்கூறிக் கதிரை ஒன்றைத் தூக்கிக்கொண்டு வீதியில் உள்ள மரநிழலிற்குச் […]

Continue Reading »

இங்கேயும் … இப்போதும் ….

இங்கேயும் … இப்போதும் ….

“டேய்… உங்க பாண்டிச்சேரியில தெருவுக்கு நாலு ஆஸ்பிட்டல் கூட இருக்கலாம். ஆனா… அங்க எத்தன  ஆஸ்பிட்டல் இருந்தாலும், பெரியப் பெரிய சர்ஜெரிக்கெல்லாம் அங்க இருந்து பெரும்பாலானவங்க  சென்னைக்குத்தாண்டா  வராங்க. மாஸ்டர் செக்-அப் செஞ்சிக்கப்போறேன்னு சொல்ற…. பேசாம கெளம்பி இங்க வாடா. ஒரே நாள் தான். எட்டு ரூவால இருந்து பத்து ரூவாக்குள்ள முடிஞ்சிடும். ” குமரேசன், சந்தானத்திடம் வம்படித்தான். “குமரேசா… நீ சொல்றதெல்லாம் சரிதான். இங்கியே கூட எனக்கு தெரிஞ்ச நர்ஸ் ஒருத்தவங்க, சென்னைல போய் செய்துக்கிட்டா… […]

Continue Reading »

நிழல் படங்களும்….  நிஜ  ஜடங்களும்….!

நிழல் படங்களும்….  நிஜ  ஜடங்களும்….!

இந்தச்  சிறுகதையானது, தமிழர்  வாழ்வியலில், வசதி – வாய்ப்புக்களின்  அடிப்படையால், தோன்றும்  போலித்தனமான  ஏற்றத்தாழ்வு  மனப்பான்மையானது,  ஆங்கே  கீழ்மட்ட நிலை  சார்ந்தோரை, உண்மையிலேயே  எப்படியெல்லாம்  பாதிக்கிறது  என்பதையும்….. ஆங்காங்கே, பரவலாகப்  பட்டுக்கொண்ட – கேள்விப்பட்ட – சொரியலான  அனுபவங்கள்,  ஆகியன  உள்ளத்தில்  தோற்றுவித்த  வலிகளின்  உந்துதலாலும், பிறந்த  கற்பனையாகும்.   “பாரும்மா…. இன்னைக்கு  நாங்க  உமேசுவீட்டுக்கு  வெளையாடப் போனோமா, அப்போ என்னையும் தம்பிப் பயலையும் பாத்து பசங்க  எல்லாரும் , “கிழிஞ்ச சட்டை…. கிழிஞ்ச சட்டை”ன்னு  சொன்னாங்கம்மா….” ஏழுவயசுக் […]

Continue Reading »

அப்பா…

அப்பா…

டெஸ்பாட்ச் சுந்தரம் தான் அப்பா ரிசப்ஷனில் வந்து காத்திருக்கிற விஷயம் சொன்னான். அப்பா எப்போதாவது இப்படி ரிசப்ஷனில் வந்து  உட்காருபவர் தான். பெரும்பாலும் அம்மாவோடு சண்டை போட்ட நாட்களாக அவை இருக்கும். சண்டை என்றால்,  அம்மா பாட்டுக்கு பேசிக்கொண்டே போவாள். அப்பா மௌனமாக கேட்டுக் கொண்டிருப்பார். பொறுக்க முடியாது போகிற சில நாட்களில் மட்டும் சட்டையை மாட்டிக்கொண்டு இப்படி ரிசப்ஷனில் வந்து உட்கார்ந்து கொள்வார்.  அதைப் போன்ற சமயங்களில் அப்பாவைப் பார்ப்பதற்கு ரொம்பப் பாவமாக இருக்கும். அவன் […]

Continue Reading »

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

சுவடி கூறும் தமிழ் மருத்துவ முறைகள் நூல் ஓர் ஆய்வு

நூற்றாண்டைக் கடந்து உலகளாவிய நிலையில் சரித்திரம் படைத்த நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்றாகும். இந்நூலகமானது பல்துறை சார்ந்த ஓலைச்சுவடிகளின் கருவூலமாகத் திகழ்கிறது. எண்ணற்ற மருத்துவச் சுவடிகளைக் கொண்டுள்ளது. அவை நம் பழந்தமிழரின் இயற்கை மருத்துவ அறிவையும் நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பெற்ற தமிழ் மருத்துவ முறைகள் எனும் நூலினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. நூல் உருவாக்கம்  ஒவ்வொரு ஆண்டும் தஞ்சை சரசுவதி மகால் நூலகத்தில் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராத்தி, […]

Continue Reading »

என்னால் சுவாசிக்க முடியவில்லை

என்னால் சுவாசிக்க முடியவில்லை

“அம்மா .. என்னால் சுவாசிக்க முடியவில்லை .. ” அமெரிக்க நாட்டுப் போர் வீரர் நினைவு நாளான மே மாதம் 25 ஆம் நாள், மினியாபொலிஸ் நகரின், நிழற் சாலையில் ஒலித்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் ஓலக் குரல் பலரது மனங்களில் ஆழப் பதிந்து அமெரிக்கா முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. செய்தித் தாள், சமூக ஊடகங்கள் முழுதும் இந்த மனிதரின் முகம் வியாபித்து உலக மக்கள் பலருக்கும் இந்த மனிதரின் முகம் பரிச்சயமாகிப் போனது. இந்தளவுக்குப் பிரபலமடைய ஜார்ஜ் […]

Continue Reading »

கம்பனடிப்பொடி

கம்பனடிப்பொடி

கம்பன்ன்ன்ன்ன் வாஆஆஆஆஆஅழ்க………. கம்பன்ன்ன்ன்ன் புகழ் வாஆஆஆஆஆஆழ்க…… கன்னித் தமிழ் வாஆஆஆஆஆஆழ்ழ்க……… தென் தமிழகத்தில், குறிப்பாகச் செட்டிநாட்டு ஊர்களில், பிறந்த நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேற்சொன்ன பாட்டும், அது பாடப்படும் ராகமும் காதுக்குள் உடனடியாக ரீங்காரமிடத் தொடங்கும். அந்த ரீங்காரத்துடன் கூடவே, சட்டையணியாத மார்புடன் ஸ்படிக மணிமாலை, மூக்குக் கண்ணாடி, நெற்றி நிறைய விபூதி அணிந்த வழுக்கைத் தலையுடன் சாமுத்ரிகா லக்‌ஷணம் நிரம்பப் பெற்ற அந்தக் கண்டிப்பு முகம் கண்களுக்குள் தோன்றும். அந்த முகத்துக்குச் சொந்தக்காரர் கம்பனடிப்பொடி என […]

Continue Reading »

தண்டனை

தண்டனை

இந்திய பீனல் கோடுகள் வளைந்து நெளிகின்றன!!   நீதி தேவதை காதுக்கும் கவசம் கேட்கிறாள்!   சட்டங்கள் தடுமாறுகின்றன புதிதாய்க் குற்றங்கள் !!   யார் கொடுத்தச் சுதந்திரம்? அன்னாசியில் அணுகுண்டு வைத்து – அப்பாவி யானைக்குக் கொடுக்க!   கருவறைக்குள்ளும் கை குண்டு வைப்பார்களோ?   அரஜாகத்தின் உச்சகட்டம் – இந்த நரகாசுரர்கள் தண்டிக்கப்படுவார்கள்!!   எடுக்கட்டும்  கடவுளவன் இன்னொரு அவதாரம் தீபாவளிப் போல்- இன்னொரு பண்டிகை வரட்டும்!!   கடவுளின் சொந்த நாட்டில் இவ்வரக்கர்கள் […]

Continue Reading »

நான்மணிக்கடிகை காட்டும் நீர் மேலாண்மை

நான்மணிக்கடிகை  காட்டும்  நீர்  மேலாண்மை

உலக வரலாற்றினை நோக்குமிடத்து, தமிழரின் வரலாறும் பண்பாடும் தனித்துவம் வாய்ந்தது. மனிதகுல நாகரிக வளர்ச்சிக்கும் இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் முன்னோடிகள் தமிழர்களே! இதனை நம் பழந்தமிழ் இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இவ்விலக்கியங்கள் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய அறத்தையும் நீதியையும் எடுத்துரைப்பதோடு, அவன் உயிர் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகிய நீர் சேகரிப்பின் இன்றியமையாமையையும் கூறுகின்றன. அவ்வகையில், நீதி இலக்கியமென்று போற்றப்படும் நான்மணிக்கடிகை நீர் சேகரிப்பின் மகத்துவத்தையும் அதன் அவசியத்தையும் முன் வைக்கிறது. இதனை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது. […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad