இலக்கியம்
ஒரே ஒரு சந்திரன்
(பாகம் 3) 1952 ஆம் ஆண்டு ராமச்சந்திரனின் நடிப்பில் வெளிவந்த படங்கள் ‘அந்தமான் கைதி’, ‘ குமாரி’, மற்றும் ‘என் தங்கை’. அந்தமான் கைதி, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, குடும்பத்துடன் இந்தியாவுக்கு வரும் இளைஞன், தன் தந்தை, சிலரால் கொலை செய்யப்பட்டதை அறிந்து, அவர்களைக் கொன்று விடுகிறான். இதற்காக அந்தமான் சிறையில் தண்டனை பெரும் அவன், விடுதலையாகித் திரும்ப வந்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதோடு, கயவர்களால் கற்பழிக்கப்பட்ட ஒரு ஏழைப் பெண்ணை மணந்து கொள்வதான புரட்சிக் […]
சிந்திய சிந்து
காட்டிலும் மேட்டிலும் களைப்புடன் உழைத்திட்ட காளையும் கன்னியும் கண்ணயர்ந்து சுவைத்திட காதலும் கடவுளும் கருத்தினில் படைத்திட்ட, காரிருள் நீக்கியே கவிபுனைந்த கதிரோன்! சாவதின் பயமது சங்கடமாய்த் துரத்திட சாரமாய் வாழ்க்கையின் சங்கதி உணர்த்திட சாரதியாய் வந்திட்ட கண்ணனைப் பணிந்திட சாயுங்கால சொர்க்கமாய்க் குளிர்ந்திட்ட நிலவவன் !!! தாயகம் முழுவதும் தருக்கரால் பிடிபட தானமும் தவங்களும் தழைக்காது மிதிபட தாயவள் தளையறுக்கத் தலைமகனாய் உதித்திட்ட, தாங்கொணா வெப்பமாய்த் தகித்திட்ட தலைவனவன் !!! நாவினில் கலைமகளை நலமுறவே அமர்த்திட […]
தற்கொலை தவிர்ப்போம்
இக்கட்டுரை வெளியாகும் செப்டம்பர் 10ஆம் நாள் ‘உலகத் தற்கொலைத் தடுப்புத் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நீட் (National Eligibility and Entrance Test) கடந்த சில தினங்களில் தமிழ் வாசிக்கத் தெரிந்த அனைவரையும் உணர்வு பூர்வமாகப் புரட்டி போட்ட செய்தி அனிதாவின் தற்கொலை. ‘கனவு காணுங்கள்’ என்ற கூற்றைக் கடந்து மருத்துவராகும் லட்சியத்தோடு மிகச் சிறந்த முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, மருத்துவப் படிப்புக்கான விளிம்பில் நின்ற அவருக்கு, ‘நீட்’ நுழைவுத்தேர்வு பற்றி பரிச்சயமும், பயிற்சியும் இல்லாததால், அதில் வெற்றி […]
ஹார்வி பாதிப்புகளுக்கு உதவுங்கள்
ஆகஸ்ட் இறுதி வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ், லூசியானா உள்ளிட்ட மாகாணங்களைத் தாக்கிய ஹார்வி சூறாவளியின் பாதிப்புகளை அறிந்திருப்பீர்கள். இதுவரை 70க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 13 மில்லியன் மக்கள் பல்வேறு வகைகளில் பாதிப்படைந்துள்ளனர். சுமார் 40000 மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்புக் கூடாரங்களில் தங்கும் நிலை. ஆகஸ்ட் மாத மத்தியில் ஆப்பிரிக்கக் கரையில் உருவாகிய வெப்ப மண்டலம், சூறாவளிப் புயலாக உருமாறி ஆகஸ்ட் 25 ஆம் தேதி டெக்ஸாஸில் உள்ள அரன்சாஸ் துறைமுகத்தைத் தாக்கிய போது, […]
கொலு பொம்மை
”நீ ஆத்தப் பாத்துக்கோடா… நான் ஒரு இரண்டாத்துக்குப் போய், குங்குமம் வாங்கிண்டு வந்துடறேன்”…. அம்மா சொல்லிக் கொண்டு புறப்படத் தயாரானாள். “அம்மா, என்னம்மா.. என்னப்போய்… இது பொம்மனாட்டிகள் சமாச்சாரம்..யாராவது வந்தான்னாக்கா நான் என்ன பண்ணுவேன்??” என்று இழுத்த கணேஷைப் பார்த்து, “நான் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேண்டா.. அதுக்குள்ள யாரும் வரமாட்டா.. அப்டியே வந்தாலும் உக்கார வை, நான் வந்துடறேண்டா” சொல்லிக்கொண்டே அவன் பதிலுக்கும் காத்திராமல் வெளியேறினாள் மங்களம் மாமி. ”அம்மா, அம்மா” என்று தான் கத்திக் கொண்டிருப்பதைக் […]
எழுத்தறிவித்த இறைவன்
எழுந்து நடந்திட இயன்றிடாப் பாலகனை எழுச்சித் தலைவனாய் மாற்றிட்ட சிற்பியவர்… எழுமையிலும் பணிந்து வணங்கிட மறக்கத்தகா எழுத்து அறிவித்த இணையிலா இறைவனவர் ….. பிதற்றலாய்த் தொடங்கிய பேதையின் வாழ்க்கையை பிறர்போற்றி வாழ்த்திடும் வகைமாற்றிய வித்தகரவர்….. பிழைப்பினை நடத்திடப் பிறர்கையை நம்பிவாழும் பிணிபோக்கி தன்னம்பிக்கை ஊட்டிய தலைவரவர்….. தவழ்ந்து வருதலும் தன்னால் ஆகாதென்ற தரக்குறை நிலைமாற்றித் தருக்காய்ச் சமைத்தவரர்….. தன்னலம் கொண்ட மாந்தர்கள் நிறைந்த தரணிதனில் பிறர்க்கெனத் தனையுருக்கும் மெழுகானவர்…… வாயில் வைத்த விரலதனைச் சுவைத்துவாழும் வாழ்க்கையே நிலையென […]
பெஞ்சமின் ஃபிராங்கிளின்
பிரித்தானியப் பேரரசு காலனிகளிலிருந்து (colonies) அமெரிக்கா சுதந்திர நாடாக வந்தமைக்கு, பலதாபகத் தந்தைகள் காரணமாக இருந்தனர். இவர்களில் முதன்மையானவர்களில் பெஞ்சமின் ஃபிராங்கிளினும் ஒருவர். இவர் நாட்டின் தாபகர் மாத்திரம் அல்ல, எழுத்தாளர், பதிப்பாளர், பெரும் விஞ்ஞானி, கண்டுபிடிப்பாளர், இராஜதந்திரி , அரசியல்வாதி, ஆசிரியர், நூலகவியலாளர் என்று சகலகலா வல்லவர். அறிவாளர் ஃபிராங்கிளினின் ஆர்வமோ வரையறையற்றது இவர் மருத்துவத்தில் இருந்து, சங்கீதம், சிலேடை, விஞ்ஞானம், தொழில்நுட்பம், மெஞ்ஞானம் என பலவற்றையும் ஆவலுடன் தம் கருத்தில், சிந்தனையில் கொண்டவர். […]






