\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

நேர்மைக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
நேர்மைக் காதல்

கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.

அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 9

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 9

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த […]

Continue Reading »

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

இரு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 8 ஆம் திகதி, தமிழ் எழுத்துலகச் சூரியன் ஒன்று அஸ்தமித்தது. தமிழ் எழுத்துலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் பற்பல சூரியன்கள் ஒளிர்ந்து பிரகாசமுறச் செய்தன என்பது நாமறிந்ததே. எனினும், ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு விதமான ஒளிக்கிரணங்கள்  உண்டென்று , அதன் ஒளிக்கிரணங்களினால் அனுதினமும் மலர்ச்சியுறும் தாமரை போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு அத்துபடி.   தனது நிலவுலகப் பயணத்தைச் சமீபத்தில் முடித்துக் கொண்ட, ஒப்பாரும் மிக்காருமற்ற, இன்னொரு ஒளிக்கிரணம், ஜே.கே. என்று சமகாலத்தவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட […]

Continue Reading »

கோமகன்

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
கோமகன்

சிவகங்கை மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்துப் பெரிய கோவில் பரபரத்துக் கொண்டிருந்தது. பூசாரி சுப்ரமணிய ஐயரும் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனும், சிவனுக்கும் அம்மைக்கும் அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணிய ஐயர் செய்கின்ற சந்தனகாப்பு அலங்காரம் சுத்துப்பட்டுப் பதினெட்டு கிராமத்திலும் பிரபலம். பதினெட்டு கிராமத்திலும் எல்லா  கிராமத் திருவிழாக்களிலும் சுப்பிரமணிய ஐயரின் சுவாமி அலங்காரமே பேசும் பொருளாக இருக்கும். கடந்த இரண்டு வருடமாகத்தான் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனைக் கோவிலில் சுவாமி கைங்கரியங்களுக்கு அனுமதித்திருக்கின்றார். “மணி இத கவனமா பார்த்துச் […]

Continue Reading »

இது கவியல்ல நிஜம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
இது கவியல்ல நிஜம்

வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம்   மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக்  கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ   சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12) அந்நிய மனோநிலை உணர்வு புதிய உணர்வு நிலைகளும் அந்நிய மொழியின் ஆதிக்கமும் தமிழ்க் கவிதை மரபில் சில மாற்றங்களை விளைவிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் அதிகமானவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டனர். எம்மவர்களின் நாளாந்த வாழ்க்கை மேலைத்தேச நாட்டினர் போல் அமைந்ததல்ல. சமூகப் பொருளாதார ரீதியாகக் குடும்ப உறவுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை எமக்குத் தனித்துவமானது. ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் முற்றிலும் புதிதான ஒரு வாழ்வியற் […]

Continue Reading »

வாடகை சைக்கிள்

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
வாடகை சைக்கிள்

நம் சிறுவயது மகிழ்ச்சியும்,  நினைவுகளுமான  கூட்டாஞ்சோறு, நொண்டி, கில்லி-தாண்டு, பல்லாங்குழி, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிய மண் கோவில், அதற்கு நடத்திய திருவிழா, இதன் வரிசையில் வாடகை சைக்கிளுக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில், எனது பார்வையில் பட்டது வாடகை சைக்கிள், இதைப் படித்த நொடிப் பொழுதில் என் நினைவுகள் என் பால்ய பருவத்திற்குச் சென்றதை என்னால் உணர முடிந்தது. நாம் மறந்த, நம்மை விட்டு மறைந்த வாடகை சைக்கிள் பற்றிய நினைவு […]

Continue Reading »

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்! தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் […]

Continue Reading »

எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 1 Comment
எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

நாடாரு கடையதிலே
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….

நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…

Continue Reading »

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad