இலக்கியம்
தொலைந்து போன சுகங்கள்
காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]
ஊட்டச்சத்தும் ஊகங்களும் – 2
மார்ச் மாதம் ஊட்டச் சத்து மாதம். இதையொட்டி சென்ற இதழில் நம்முடலுக்குத் தேவையான உணவுக் கூறுகளைப் பற்றி, குறிப்பாக பெருவூட்டப் பொருட்களான மாச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்தினைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் சிறுவூட்டப் பொருட்களான உயிர்ச்சத்துகள் பற்றி பார்ப்போம்.
உயிர்ச்சத்துகள் (Vitamins)
நம்முடலுக்கு சக்தியளிப்பது வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள் தான். இயற்கை உணவுகளில், குறைவான அளவில் காணப்படும் உயிரினக் கலவை தான் உயிர்ச்சத்து. மிக குறைவான அளவில் தேவைப்பட்டாலும், வளர்சிதை மாற்றங்களுக்கு (metabolism) உயிர்ச்சத்து மிக அவசியமானது. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து மட்டுமே இவை பெறப்படுகின்றன. உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு உயிர்ச்சத்துகள் மிகவும் அத்தியாவசியமானவை. இவை மற்ற பெருவூட்டச் சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்ந்தால் மட்டுமே நமக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை, தோல், இதயம், நரம்புகள் மற்றும் எலும்புகளின் நலனை நிர்ணயிப்பது உயிர்ச்சத்துகளே. உயிர்ச்சத்தின் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து நாம் எளிதில் நோய்வாய்ப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12
(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11) சமூக விரோதச் செயல் சமூகம் மீது பிடிப்பில்லாத சுயநலப் போக்கின் விளைவாக, பிறர்மீது கரிசனை, பற்று என்பன இல்லாதுபோக தன்னைத்தானே சீரழித்துத் தன் சமூகத்துக்கும் சீரழிவை ஏற்படுத்தும் வன்முறைகளில் புலம்பெயர்ந்தோரில் சிலர் செயற்பட்டு வருவதனையும், வெளிநாடுகளில் குழுக்களாகச் சேர்ந்து சீட்டாட்டம், போதைப் பொருள் கடத்தல், குடி, குழு மோதல்களில் ஈடுபட்டுச் சீரழிவதையும் சில கவிதைகள் கூறுகின்றன. மைத்திரேயி எழுதிய ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ என்ற கவிதையில் வரும்; “ஊடறுக்கும் குளிரில் வசந்தத்தை […]
தமிழர்களும் விழாக்களும்
நம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அனைவரும் அறிந்த கூற்றே, அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் வழி நடத்திச் செல்வதில் கொண்டாட்டங்களும் அதை ஏற்படுத்தும் விழாக்களும் முக்கிய பங்கு வகுக்கின்றன. நம் முன்னோர்களின் வழக்கை முறை,பண்பாடு, கலை போன்றவற்றை நாம் அறிவதற்கும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும் விழாக்கள் அடிப்படையாக அமைகின்றது. இன்று நாம் கொண்டாடும் பல விழாக்கள், நம் முன்னோர்களின் வேர்களைத் தொட்டு, பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், நம் வாழ்வியலோடு தொடர்ச்சியாக வலம் வருகின்றது. கால […]
சங்கமம் 2015 – சங்கமித்த திறமையும் திருப்தியும்
‘சங்கமம்’ என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ரஹ்மான் ‘சிந்ததசைசரில்’ நாட்டுப்புற மெட்டில் இசையமைத்த படம் நினைவுக்கு வருகிறதோ அல்லது, அந்தப் படத்தை ஒரே மாதத்தில் டி.வி.யில் போட்டது நினைவுக்கு வருகிறதோ எனக்குத் தெரியாது. ஆனால் மினசோட்டாத் தமிழர்களுக்கு இனி நினைவுக்கு வருவது – இங்குள்ள தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் ‘சங்கமம்’ நிகழ்வாகத்தான் இருக்கும். மினசோட்டாத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பில், பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, மினசோட்டா வாழ் தமிழர்கள் கூடிக் கொண்டாடும் திருவிழா தான் […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7
முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]
இராமரின் இரு முகங்கள்
இறைவன் பூமியில் தினம் தினம் பல அவதாரங்களாக தோன்றி வாழ்த்திக்கொண்டு இருக்கிறார். தந்தையும் தாயும் நமக்கு முன்னறி தெய்வமன்றோ? விஷ்ணு பகவானும் இப்பூவுலகில் பல அவதாரம் எடுத்திருக்கிறார். அதில் சிறந்ததாகப் பத்து அவதாரத்தைச் சொல்லுவர். அந்தப் பத்து அவதாரத்தில் மிகச் சிறப்பு வாய்ந்தது இராமர் மற்றும் கிருஷ்ணர் அவதாரங்கள். இவ்விரு அவதாரங்களைப் பூரண அவதாரம் என்று சொல்லுவர். மற்ற அவதாரங்களைப் போல் இல்லாமல், தாயின் வயிற்றில் தோன்றி, பிள்ளைப் பருவம் தொடங்கி இறப்பு வரை இருந்தபடியால் அவ்வாறு […]
நிலையாமை
இடுப்பு வலியால் இல்லாள் துடிக்க இங்கும் அங்கும் இவன்நடை பயில இருக்கும் அனைத்து இதந்தரு மனிதரும் இதமாய் வருடி இவர்கட்கு உதவிட இரவு முழுவதும் இடையறாத் துடிப்புடன் இழுத்துப் பிடித்த இவளின் உறுதியும் இறைவன் அருளும் இணைந்து செயல்பட இவ்வுலகு தோன்றிய இணையிலாப் பிறப்பு இனிய குழந்தை இன்னல் துரத்தி இன்பம் கொடுத்து இமைக்கும் முன்னரே இரத்தம் கொதித்து இளமை எய்திட இரவு பகலென இருபொழுதிலும் உழைத்து இரந்து பிழைத்திடும் இழிநிலை ஒதுக்கி இகத்தில் அனைத்தும் […]
எசப்பாட்டு – உலகக் கோப்பை
உலகக் கோப்பையென உலாவரும் ஆட்டம் உழைப்பவன் படைப்பவன் அனைவரின் நாட்டம் உண்மையில் பார்க்கையில் உழன்றிடும் தேட்டம் உயர்வறுத்து பந்தயமே பெரிதாக்கும் கூட்டம் !! திறமைமிக்க அணியே தேர்ந்து வென்றிடுமென திடமாய்ச் சொல்லிடவியலா திறனற்ற அவலம் திக்கெட்டும் புகழ்மணந்த தீர்க்கமான ஆட்டமது திசைதவறிப் போனதோவெனத் திகைத்தழியும் தருணம் !!! ஆடுபவன் அனைவருமே அறிவில்லா மடையனாகும் ஆட்டத்தைக் களித்திடும் அண்டமெலாம் மூடர்களாம் ஆங்காரமாய்ச் சொல்லிட்ட அறிவாளி சரியெனவே ஆக்கியது இவர்களின் அளவற்ற பணத்தாசை !!! […]






