\n"; } ?>
Top Ad
banner ad

இலக்கியம்

உலகத் தாய்மொழி தினம் – 2016

உலகத் தாய்மொழி தினம் – 2016

அம்மா மடியில் படுத்துத் தூங்கும்போது கிடைக்கும் அமைதியும் உணரும் பாதுகாப்பும் வெளிநாடுகளில் நம் தாய்மொழியில் பேசும்போது நிச்சயம் உணரமுடியும். பேசுவதற்கும் எழுதுவதற்குமான கருவிதானே மொழி, இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறீர்கள்? என்று குறுகிய கண்ணோட்டத்தோடு கேட்கப்படும் கேள்விகளுக்கு, நம் வரலாற்றுப் பக்கங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள மொழிப் போராட்டங்களையும் உயிர்த் தியாகங்களையும் சற்று உற்று நோக்கினாலே பதில் எளிதில் கிடைத்துவிடும். மொழி என்பது ஓர் இனத்திற்கான தேசியம், பண்பாடு,தொன்மை மற்றும் கலாச்சாரத்தின் முதன்மை ஆகிய அடையாளங்களை வழங்குகிறது. ஓர் […]

Continue Reading »

ஆணவம் கொ(ல்)ள்வோம்

Filed in இலக்கியம், கவிதை by on March 28, 2016 0 Comments
ஆணவம் கொ(ல்)ள்வோம்

உள்ளங் கலந்து உறவில் நுழைந்து
உவகை கொண்ட உடுமலைக் காதலரை
ஊரார் முன்னிலையில் தண்டித்து விட்டோமே.
ஊழிக்கால விடியலைத் துவக்கி விட்டோமே !

காதல் சின்னமெனப் பளிங்குக் கல்லறையைக்
காட்சிப் பொருளாக்கி, கதைபல சேர்த்தே
பரந்த உலகின் சிறந்த அதிசயமெனப்
பறைசாற்றித் தலை கிறங்க அலைந்தோமே !

Continue Reading »

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

அமெரிக்கத் தேர்தல் – பகுதி 3

2016, மார்ச் மாதம் அதிபர் தேர்தலில் பல திருப்பங்களைத் தந்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு, வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் அமெரிக்காவையும் அரசியல் சலசலப்புகள் விட்டு வைக்கவில்லை. பல மாநிலங்களில் பிரைமரி மற்றும் காகஸ் நடந்து முடிந்துள்ளன. இரண்டு கட்சிகளிலும் யார் அதிபர்  தேர்தலுக்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற ஊகத்துக்கு இதுவரை, எந்தத் தெளிவுமில்லாத நிலை நீடிக்கிறது.   நாம் முன்னர் பார்த்தபடி ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சி சார்பில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பிரதிநிகளைக் […]

Continue Reading »

நாப்பதுக்கு மேலே…

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 0 Comments
நாப்பதுக்கு மேலே…

ஆஃபீஸுக்குள் நுழையும் போதே சிண்டியின் வாசம் – அவள் போடும் பெர்ஃப்யூம் வாசம் – முகத்தில் அடித்தது. என்ன இன்னைக்கு, அதுக்குள்ள வந்துட்டாளா என்று யோசித்துக் கொண்டே தனது கியூபுக்கு நடந்தான் சபா. அவன் நினைத்தது சரிதான். தூரத்திலிருந்தே கேட்ட குழைவுச் சிரிப்பு சிண்டி வந்துவிட்டிருந்தாள் என்று சொல்லியது. தனது கியூபில் பையை வைக்கும் போது, கண் தானாக எதிரேயிருந்த சிண்டியின் கியூபுக்குப் போனது. வெண்ணையின் வழவழப்பில், பெரிதாய், விம்மிப் புடைத்து, ரோஜா நிறத்தில், அவ்வளவு ஃப்ரெஷ்ஷாய், […]

Continue Reading »

முதுமையும் மழலையே

Filed in இலக்கியம், கதை by on March 28, 2016 4 Comments
முதுமையும் மழலையே

அதிகாலை நாலரை மணி அலாரம் அடித்தது. அழுத்திவிட்டு எழுந்தான் பத்ரி. முகம் துடைத்து, கைகளைப் பார்த்தான். பக்கத்தில், நேற்று இரவு படித்த அனாடமி புத்தகம் மின்விசிறி காற்றில் படபடவென அடிக்க, மெதுவாக அதை மூடி பையில் எடுத்து வைத்தான். கண்களைத் தேய்த்துத்’ தூக்கத்தைக் கலைத்துக் கொண்டான். வாசல் கதவைத்’ திறந்து வெளி காற்றை ஒரு நீண்ட மூச்சுடன் சுவாசித்துக் கொண்டான்.    “பத்ரி   எழுந்திட்டியா ?”, உள்ளே இருந்து பாட்டியின் குரலுக்கு,    “ஹ்ம்ம். நீங்க தூங்குங்க […]

Continue Reading »

கலைகளின் சங்கமம்

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2016 0 Comments
கலைகளின் சங்கமம்

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பிப்ரவரி 6 சனிக்கிழமை அன்று ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் சங்கமம் 2016 நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. குழந்தைகளும், பெரியவர்களும் பங்கு கொண்ட பல கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் நடத்திய நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் பழமை மாறாது கருப்பட்டி பொங்கல் சேர்ந்த விருந்து என பல சிறப்புகள். இதற்கெல்லாம் மகுடமாக இருந்தது என பலரும் புகழ்ந்தது கலைகளின் சங்கமம் நிகழ்ச்சியைத் தான். பதினோரு வகையான தமிழர் கலைகளை முழு முயற்சியுடன் பயின்று […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on February 28, 2016 0 Comments
ஆட்டிஸம் – பகுதி 4

(ஆட்டிஸம் – பகுதி 3) ஆட்டிஸத்துடனே வாழ்வை நடத்திச் செல்வது என்பது நிரந்தரமாகிவிட்டது எங்களுக்கு. இந்த நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு தினசரி வாழ்வை நடத்திச் செல்வது, எங்களைச் சுற்றியுள்ள உலகுடன் ஒட்டி வாழ்வது என்பதற்காகப் பல புதிய விஷயங்களையும், பழக்க வழக்கங்களையும் கற்றறிய வேண்டிய சூழல். எங்களைப் போலவே ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுடன் பழகுவதன் மூலம் இதனைக் கற்றறிவது எளிதாகும் என்று கண்டோம். எங்கள் குழந்தையை அழைத்துக் கொண்டு செல்லும் வழக்கமான இடங்களான மருத்துவமனை, சிறப்புப் பள்ளிகள் ஆகிய […]

Continue Reading »

சாருலதா

Filed in இலக்கியம், கதை by on February 28, 2016 2 Comments
சாருலதா

ஆண்டு 1940 : அதி காலைச் சூரியன் இன்று சோம்பலுடன் இருந்தான் போல. அந்த மார்கழிக் குளிரில் மேகப் போர்வையைக் கலைத்தபடி மெல்ல எழுந்தான். ஆனால் சாருவிற்கு முழிப்பு வந்து ரொம்ப நேரம் ஆகி இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்தபடி படுத்திருந்தாள். வெளியில் இருந்த சின்ன செடியில் ஒரு குருவி அமர்ந்திருந்தது. கண்ணைச் சிமிட்டாமல் பார்த்தபடி படுத்திருந்தாள் சாரு. அந்த அதிகாலையில் சிறிய குருவி மெல்ல இலைகளில் இருந்த பனியை அருந்திய அழகு பார்க்க […]

Continue Reading »

சென்ரியு கவிதைகள்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
சென்ரியு கவிதைகள்

கூட்டிப் பெருக்கிக் கழித்தாலும்
தீரவில்லை போகவில்லை மன வீட்டின்
குப்பை

பட்டமரமும் துளிர்த்தது
எம் எஸ் சுப்புலட்சுமியின்
கான மழையால்

Continue Reading »

இதழ்

Filed in இலக்கியம், கவிதை by on February 28, 2016 0 Comments
இதழ்

உன் இதழெனும் மடலில்
கவிதை தீட்டி
இளைப்பார …
என் மனம் துடிக்கிறதே!

உன் இதழோரம்
கவியாயிரம் பாட உன்
கதவோரம் நான்வர
என் மனம் எத்தனிக்கிறதே!

Continue Reading »

ad banner
Bottom Sml Ad