அன்றாடம்
நன்றி நவிலலும், நுகர்வோர் கூத்தும் (Thanks Giving)
நவம்பர் மாதம் வந்து விட்டால், தேங்க்ஸ் கிவிங்கிற்கு (Thanksgiving) என்ன செய்யலாம் என்று அமெரிக்கர்கள் யோசிப்பார்களோ, இல்லையோ, என்ன வாங்கலாம் என்று அமெரிக்காவில் இந்தியர்கள் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஒரு பொருள் தேவையோ, இல்லையோ, டிஸ்கவுண்ட் என்ற சொல் மீது அலாதி ப்ரியம் நம்மவர்களுக்கு. டிஸ்கவுண்ட் என்று வந்து விட்டால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்போம், டீல் இல்லையென்றால் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம் என்பது போல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். அமெரிக்கத் தேங்க்ஸ் கிவிங் வரலாறு பதினாறாம் நூற்றாண்டில் […]
கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி 2016
மேபிள் குரோவ் இந்துக் கோவிலில் நவம்பர் 19ம் தேதி அன்று கர்நாடக சங்கீத இசைக் கச்சேரி நடைபெற்றது. மினசோட்டாவில் உள்ள இசைக் கலைஞர்கள் திருமதி நிர்மலா ராஜசேகர் (வீணை இசை & வாய்ப்பாட்டாளர்), ஸ்ரீ தஞ்சாவூர் கே முருகபூபதி (மிருதங்கம்), ஸ்ரீ ராம் நடராஜன் (கஞ்சிரா) மற்றும் தமிழ்நாட்டுக் கலைஞர்கள் ஸ்ரீ ஜெயந்த் (புல்லாங்குழல்), ஸ்ரீ கார்த்திக் சுப்ரமணியம் (கடம்), ஸ்ரீ பி உ கணேஷ் பிரசாத் (வயலின்) ஆகியோர் சேர்ந்து நடத்திய இந்த இசைச் கச்சேரி […]
சிறகவரை எண்ணெய்க் கறி
அவரை வகைகளில் தாவரப் புரதம் தரும் காய்கறிகளில் சிறகவரை சிறப்பானதொன்று . மினசோட்டா மாநிலத்தில் சீனக் கடைகளிலும், ரொரோன்ரோவில் தமிழ், சீன, தாய்லாந்துச் சந்தைகளிலும் கிடைக்கும். தேவையானவை 1/2 இறாத்தல் பிஞ்சு சிறகவரை 5 நறுக்கிய சின்ன வெங்காயம் 2 நறுக்கிய பச்சை மிளகாய் 1 சிறுகிளை கறிவேப்பிலை 4 நறுக்கிய உள்ளிப்பூண்டு நகம் 1 அங்குல இஞ்சி (தட்டி எடுத்தது ) 10-15 கடுகு ½ தேயிலை கரண்டி வெந்தயம் 1 தேயிலை கரண்டி சீரகம் […]
வான்கோழி வாட்டி – சமையல் விளக்கம்
1 உள்ளடக்கங்களை விலக்கவும் 2 வெண்ணெயை வான்கோழி மேல் பரவலாகப் பூசிக்கொள்ளவும் 3 செட்டைகளைக் குடைத்து மடக்கிச் செருகவும் 4 கால்களை நூலினால்,கயிற்றினால் பின்னால் கட்டிவிடவும் 5 வான்கோழியை, மார்புப் பகுதி மேல் நோக்கியிருக்குமாறு வாட்டும் தட்டில் வைக்கவும் 6. மார்புப் பகுதியை ஈயத்தாளினால் மூடிக்கொள்ளவும் 7 வெப்பமானியை உள்ளில் அழுத்தி அகல் அடுப்பினுள் வைக்கவும் 8 ஒவ்வொரு 45 நிமிட இடைவெளியில் வெண்ணெய்யையும், ஊறித்தட்டில் […]
சிம்சோனின் வலிமை எங்கே … ? பைபிள் கதைகள்
திருவிவிலியத்தின் (பைபிள்) பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள நிகழ்வைப் பார்போம். அந்தக் காலத்தில் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு எல்லாக் கொடைகளையும் கொடுத்திருந்தார். வசதி வந்தால் வழிமாறும் மனிதர்கள் போல இஸ்ரயேல் மக்களும் கடவுளை மறந்து தீய வழிகளை நாடிச் சென்றனர். அதன் பலனாகத் தங்களுடைய உரிமைகள் இழந்து பெலிஸ்தியர்களுக்கு அடிமையானார்கள். அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்ற கடவுள் சிம்சோன் என்பவரைப் படைத்தார். சிம்சோன் வளர்ந்து அழகான, வலிமையான வாலிபனாக உருவெடுத்தார். சாதாரண வலிமையல்ல, ஒருநாள் அவரை […]
அனோகா ஹாலோவீன் அணி வகுப்பு
96 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது, மினசோட்டாவின் அனோகாவில் (Anoka) நடக்கும் ஹலோவீன் கொண்டாட்டங்கள். 1920 ஆம் ஆண்டில், அனோகாவின் இளைஞர் பட்டாளம், ஹலோவீனின் போது நடத்தும் வேடிக்கை விளையாட்டுகள், மக்களிடையே திண்டாட்டத்தை ஏற்படுத்த, அனோகா நிர்வாகத்தினர் கூடி, எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லாமல், ஒருமித்த திட்டத்துடன் நடத்தத் தொடங்கியவை, இக்கொண்டாட்ட நிகழ்வுகள். இங்கு அக்டோபர் மத்தியில் இருந்தே ஹாலோவீன் நிகழ்வுகள் தொடங்கிவிடுகின்றன. குழந்தைகள், பெரியோர்களுக்கான விளையாட்டுகள், வேடிக்கையாக திகில் ஏற்படுத்தும் வீடுகள், ஒப்பனை நிகழ்வுகள், திரைப்பட ஒளிபரப்பு என […]
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு Bob Dylan நோபல் இலக்கிய விருது
மினசோட்டாவின் பாப் டிலனிற்கு நோபல் இலக்கிய விருது மினசோட்டா மாநிலத்தின் மைந்தரான ஆங்கில இசைக் கவி திரு. பாப் டிலன் அவர்கட்கு, சுவீடிஷ் அக்காடமி, 2016ம் ஆண்டு அகில உலகப் புகழ் வாய்ந்த நோபல் இலக்கிய விருதினை அக்டோபர் மாதம் 13ம் திகதி 2016 வழங்கியுள்ளது. பாப் டிலனிற்கு வயது 75. நோபல் இலக்கிய விருதினை வாங்கிய இரண்டாவது இசைக் கவிஞர் இவரே. இதன் முன்னர் 1993ம் ஆண்டு இலக்கியப் பரிசினைப் பெற்றவர் திரு ரோனி மோரிசன். […]
ரெமோ
ரெமோ வளரும் இளம் கதாநாயகன் என்பதில் இருந்து முன்னணி இளம் கதாநாயகன் நிலைக்குச் சென்று விட்டார் சிவகார்த்திகேயன் எனலாம். காமெடி, நடனம் போன்றவற்றில் மட்டும் திறமை காட்டிக் கொண்டிருந்த சிகா, அவரின் ஒன்பதாவது படமான ரெமோவில் மேக்கப், நடிப்பு, டப்பிங் போன்றவற்றிலும் தனது திறமையைக் காட்டியிருக்கிறார். அவருக்கான ரசிகர் கூட்டம் கூடிக்கொண்டே செல்கிறது. கூடவே, கடுப்பில் பிற முன்னணி நடிகர்களது ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் சமூக ஊடகங்களைச் சுற்றி வரும் போது தெரிகிறது. தமிழர்களுக்கு ஒரு நடிகர் […]
வேர்வையின்றி வெற்றியில்லை….. பைபிள் கதை
மனிதனாகப் பிறந்த நமக்கு, கடவுள் பல்வேறு வரங்களைக் கொடையாகத் தந்திருக்கிறார். நாம் அதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதிலேதான் நம்முடைய வாழ்வு அடங்கியிருக்கிறது. இதை அழகாக கிறிஸ்துவ மறையின் புனித நூலான திருவிவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் இயேசுநாதர் மக்களுக்கு ஒரு உவமையின் மூலமாக எடுத்துரைப்பதை இங்கு காணலாம். ஒருநாள் நெடும் பயணம் செல்லவிருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும் இன்னொருவருக்கு […]






