அன்றாடம்
மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்
அறிமுகம் துலூத் நகரமானது சுப்பீரியர் பெரும் ஏரிக்கரைத் தொழிற்படும் துறைமுகமாகவும் பருவகால உல்லாச வலயமாகவும் இருந்து வருகின்றது. இந்நகரில் மினசோட்டா மாநிலப் பல்கலைக் கழக துலூத் பகுதியும், மற்றும் செயின்ட் ஸகொலாஸ்டிக்கா என்னும் கத்தோலிக்கத் தனியார் பல்கலைக்கழகமும், மற்றும் சில தொழிநுட்பப் கல்விக்கூடங்களும் உண்டு. துலூத் நகரானது தன் இரணைப் பிறவியாக செயின்ட் லூயிஸ் ஆற்றின் மறுபுறம் இருக்கும் துறைமுக நகரமான சுப்பீரியரையும் சேர்த்துக் கொள்ளும். சுப்பீரியர் நகரமானது அண்டை மாநிலமான விஸ்கான்ஸினைச் சேர்ந்தது. சுற்றுலா இடங்கள் […]
பாமரனின் புரிதல்கள்
“அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்” கூறும் சூழ்நிலை: தைரியமாக சாதிக்க வேண்டிச் சொல்வது! பொருள் : துணிந்து செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும். அம்பலம் என்பது பொதுமக்கள் நிறைந்திருக்கும் சபை. அது போன்ற சபைகளில் அச்சமின்றி பேசுபவர்கள் புகழ் பெறுவார்கள். “அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது” கூறும் சூழ்நிலை: சரியான முனைப்பின்றி காரியம் செய்வோருக்கு சொல்வது. பொருள் : சரியான முனைப்பும், தலைமையும் இருந்தால் மட்டுமே செய்யும் செயல் வெற்றி பெறும். இல்லாவிட்டால் அச்சாணி […]
அகரவரிசையில் அழகிய மினசோட்டா
அ – அல்பெர்ட் லீ (Albert Lea); ஃபிரீபோர்ன் (Freeborn) மாவட்டம் தென் மினசோடா – இவ்விடம் பெருவிவசாயத் தொழிலை மையமாக வைத்து அமைந்த சமூகம். அல்பெர்ட் லீ போகும் வழியில் பெருஞ்சாலை தெற்கு 35 இல் பெரும் மலிவு கடைச் சந்தைகள் உள்ளன. அல்பெர்ட் லீ நகரம் ஏறத்தாழ 300 ஏக்கர்களில் 41 பூங்கா, விளையாட்டு, மற்றும் சுற்று வெளி அரங்கு வசதிகளைக் கொண்டது. இவை யாவும் வருவோர்க்கு இலவசம். இவ்விடம் பிரதான உல்லாசப் பயணிகள் […]
இனிக்கும் இராசவள்ளிக் கிழங்கு
குளிர்பனிக் கூதலை தவிர்க்க இதமான இனிக்கும் இராசவள்ளிக் கிழங்குக் களி அல்லது கஞ்சி. இதன் நிறமோ கவர்ச்சிகரமான் ஊதாநிறம். இவ்வகை கிழங்குகள் பொதுவாக மினசோட்டாவில் இந்திய,சீன, வியட்நாமிய மரக்கறிக் கடைகளில் பிந்திய பனிமாதங்களாகிய் மாசி, பங்குனியில் கிடைக்கும். இவ்விடம் ஊதாக் கிழங்கு அல்லது பெர்பிள் யாம் (Purple Yam) என்றழைக்கப்படும் கிழங்கு, நமது தமிழ்ப் பிரதேசங்களில் மார்கழி, தைதொட்டு நிலத்தில் இருந்து கிண்டி எடுக்கப்படும் சுவையான ஊதாநிறக் கிழங்கு . இது வெவ்வேறு வள்ளிக்கிழங்கு வகைகளிலேயே இராச […]
சமையல் : பிஸிபேளேபாத்
தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பீன்ஸ் – 10 கேரட் – 1 உருளைக்கிழங்கு – 1 முருங்கைக்காய் – சிறிதளவு புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்) மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா அறைப்பதற்காகத் தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 2 ஸ்பூன் தனியா – […]
திரைப்படத் திறனாய்வு – கும்கி
மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும். மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் […]
பனிக்கட்டிக் கண்காட்சி (ICE CASTLES)
வீட்டின் முன்புறத்தில் செலுத்து வழியில் படிந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுபவர்களுக்கு பனிக்காலம் ஒரு பெரிய தண்டனைக் காலமாகவே படும். எப்போது இந்தப் பனிப்பொழிவு நிற்கும் எனக் காத்திருப்பார்கள். ஆனால் பிரெண்ட் கிரிஸ்டென்ஸனுக்கு (Brent Christensen) பனிப்பொழிவு ஒரு வரப்பிரசாதமாகப் படுகின்றது. ‘சிலை என்றால் அது சிலை; வெறும் கல்லென்றால் அது கல் தான்’ எனும் வழக்குக்கு ஏற்றாற் போல், நமக்கெல்லாம் சுமையாகத் தோன்றும் பனிக்குவியல் பிரெண்டுக்கு பணக் குவியலாகக் காட்சியளித்துள்ளது. பொதுவாக பனிக்காலம் என்பது மந்தமான, சோம்பலூட்டும் காலம். […]
சூப்பர் போல்
நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான […]
இருமலைப் போக்க எவ்வளவு காலம்?
நாம் நுண்ணுயிர் எதிர் மருந்துக்களை (Anti Biotics) பாக்டீரியாக் கிருமிகளுக்காக உட்கொள்ளினும், பெரும்பாலான நோயாளிகள் வைரஸ் கிருமிகளினால் தொற்றுவியாதிக்கும் இதை உட்கொள்வார்கள். இந்த மருந்து வகைகளை உட்கொள்ளும் அரைவாசியிலும் மேற்பட்டோருக்கு இருமலும், செருமலும் வருவது நெஞ்சின் சுவாசப் பிராணப்பாதையில் வைரஸ் கிருமி ஏற்படுத்தும் தடுமன், சளி போன்ற தொற்று நோய்களினால் ஆகும். ஆயினும் இவற்றில் பத்து சதவீதமானவர்களே பாக்டீரியாக் கிருமியின் தாக்கத்திற்கு ஆளானவர்கள். எனினும் ஏன் தான் நோயாளிகள் நுண்ணுயிர் எதிரி மாத்திரைகளை எடுத்தவாறு உள்ளனர் என்பது […]
ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்
’லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற “கண்ணே கண்மணியே” என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவே. இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, திரைப்பாடல்கள் இயற்றிய அனுபவம் இல்லையென்றாலும், தாலாட்டுப் பாட்டுக்கு, அனுபவமோ, இசையறிவோ தேவையில்லை எனக் […]






